கல்லுாரியில் சிரிப்பு யோகா பயிற்சி.!

serippu youka - 2026

கோவை குமரகுரு கல்லூரியில் சிரிப்பு யோகா பயிரங்கம் நடந்தது.

Global Laughter Yoga Movement அமைப்பின் நிறுவனரும், உலகப் புகழ் பெற்ற சிரிப்பு குருவுமான டாக்டர். மதன் கட்டாரியா

கோவை குமரகுரு கல்வி நிறுவனங்களில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான சிரிப்பு யோகா பயிலரங்கத்தை நடத்தினார்.

இந்த பயிற்சியில் சுமார் 1500 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியா், ஆசிரியர்கள் இதில் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

இந்த பயிற்சி குறித்து சிரிப்பு குரு டாக்டர்மதன் கட்டாரியா பேசியதாவது.

நம்முடைய வெற்றி, தோல்வியைத் தீர்மானிப்பதில் உணர்வுகளின் பங்கு மிக முக்கியமானது.

நம்மை மகிழ்ச்சியின் உச்சத்திற்கும், மனச்சோர்வுக்கும் எடுத்துச் செல்ல வல்லது

நம் உணர்வுகள்.வாழ்வின் வெற்றியானது, 20% அறிவின் பங்கீடு ( Intelligence quotient), 80% உணர்வுகளின் பங்கீடு. என்று கூறிய அவர்

, நம் அன்றாட வாழ்வில் சிரிப்பு யோகாவைப் பயில்வது எப்படி என்றும் மாணவர்கள், மற்றும் ஆசிரியர்களுக்கு உணர்த்தினார்.

சிரிப்பு யோகா என்பது என்ன ?

நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பிரபலமாக வரும் இந்த சிரிப்பு யோகா, குழுவாக சேர்ந்து செய்யக்கூடியதாகும்.

யோகாவின் ஒரு பகுதியான பிராணாயாம சுவாசப் பயிற்சிகளுடன் சேர்த்து இது ஆரம்பிக்கப்படுகிறது.

பின்னர் கட்டாய சிரிப்புகளில் துவங்கி குழுவினரிடையே எளிதில் தொற்றிக்கொள்ளக்கூடிய சிரிப்பாக மாறுகிறது.

விஞ்ஞானப் பூர்வமாக, நமது உடலால், இயற்கையாக நாம் சிரிக்கும் சிரிப்பிற்கும், செயற்கையாக நாம் சிரிக்கும் சிரிப்பிற்கும் வித்தியாசம் காண முடியாது என்பதே சிரிப்பு யோகாவின் அடிப்படை ஆகும்.

எனவே இயற்கையான சிரிப்பினால் கிடைக்கும் அத்தனை பலன்களையும் இதன் மூலம் பெற முடியும்.

உலகில் ஆயிரக்கணக்கான இலவச சிரிப்பு யோகா சங்கங்கள், மக்கள் கூட்டமாக சேர்ந்து சிரிப்பதற்காக இயங்கி வருகின்றன.

இது தவிர, அலுவலகங்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள், முதியோர் மையங்கள், பள்ளி, கல்லூரிகள், சிறைகள், மருத்துவமனைகள், மாற்றுத்திறனாளிகளுக்கான மையங்கள் போன்றவற்றிலும் சிரிப்பு யோகா பயிற்றுவிக்கப்படுகின்றது.

சிரிப்பு யோகாவினால் வரும் ஆரோக்கிய நன்மைகள்:

மன அழுத்தத்தைக் குறைப்பதற்கும், நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதற்கும் சிரிப்பு ஒரு சிறந்த மற்றும் விரைவான தீர்வாகும்.

உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை, மூட்டு வலி, மனச்சோர்வு, படபடப்பு, தூக்கமின்மை போன்ற நாள்பட்ட உடல் பிரச்சனைகளுக்கு ஒரு நல்ல மருந்தாக அமைகிறது.

உடல் மற்றும் மூளைக்கு அதிக இரத்த ஓட்டத்தை அளிப்பதன் மூலம், சிரிப்பு யோகப் பயிற்சிகள் உங்களை ஆரோக்கியமாகவும் புத்துணர்வாகவும் வைக்கின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

Topics

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'நோபல் ரெக்கார்ட்' செய்துள்ள இப்பள்ளி, தற்போது தனது இரண்டாவது உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

5 மாநில சட்டமன்றத் தேர்தல் தேதி; இன்று அறிவிக்கிறது ஆணையம்! 

சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை மார்ச் 15 ஞாயிறு இன்று இந்தியத் தேர்தல் ஆணையம் மாலை 4 மணிக்கு அறிவிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Entertainment News

Popular Categories