December 5, 2025, 7:47 PM
26.7 C
Chennai

அயோத்தி: ‘இன்னமும் முரசொலி ப்ரூப் ரீடராகவே உள்ள’ மதுரை ஆதினம் கருத்து!

madurai aadheenam press meet stills 12 - 2025

அயோத்தி தீர்ப்பை நாங்கள் மனமார வரவேற்கிறோம் எனத் தெரிவித்த மதுரை ஆதினம், மேலும் கூறிய சில கருத்துகள் இப்போது கடும் விமர்சனத்தைப் பெற்று வருகின்றன.

சனிக் கிழமை இன்று காலை அயோத்தி வழக்கில், சர்ச்சைக்கு உள்ளாக்கப் பட்ட ராமஜன்ம பூமி நிலத்தில் ராமர் கோயிலைக் கட்ட மத்திய அரசு 3 மாதங்களுக்குள் அறக்கட்டளை அமைக்க வேண்டும், மசூதி அமைக்க அயோத்தியில் வேறு பகுதியில் 5 ஏக்கர் நிலம் ஒதுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இந்நிலையில், அயோத்தி தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்தார் மதுரை ஆதீனம்! அதில்… “இந்தத் தீர்ப்பை நாங்கள் மனமார வரவேற்கிறோம். இந்தத் தீர்ப்பு இந்துக்கள் பெருமை கொள்ளவோ, இஸ்லாமியர்கள் வருத்தம் கொள்ளவோ கூடிய தீர்ப்பு அல்ல. அயோத்தி தீர்ப்பை இருதரப்பினரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஏனெனில், இது யாருக்கும் பாதகமான தீர்ப்பு அல்ல.

Madurai aatheenam - 2025

தீர்ப்பை ஒட்டி எந்த ஒரு பிரச்னையும் ஏற்படக்கூடாது. இது நல்ல, நியாயமான எல்லோரும் ஏற்க வேண்டிய தீர்ப்பு. சட்டத்தை முன்வைத்து வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு.

ராமர் கோயிலை கட்ட அமைப்பு ஏற்படுத்தும் உத்தரவை வரவேற்கிறோம். அனைவருக்கும் சமமான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது. மசூதி கட்ட நிலம் ஒதுக்க வேண்டும் என்ற உத்தரவும் வரவேற்கத் தக்கது…. – இவ்வாறு கருத்துத் தெரிவித்த மதுரை ஆதினம் அடுத்து கூறியது தான் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அவர் இன்னமும் முரசொலி புரூப் ரீடர் வேலையைத்தான் செய்து கொண்டிருக்கிறார், மதுரை ஆதீன மடத்தின் தலைவராக இல்லை என்பதை எடுத்துக் காட்டியுள்ளது என்கிறார்கள் சமூகத் தளங்களில்!

அயோத்தி ராமர் கோவிலையும், சபரிமலை கோயிலையும் இணைத்து அவர் கூறியவை இப்போது பரவலாக விமர்சிக்கப் பட்டு வருகிறது.

இது குறித்து அவர் கூறியபோது, ”எப்படி சபரிமலையில் வாவரை தரிசித்த பின் தான் ஐயப்பனை வணங்குகிறோமோ அதே போல் அயோத்தியில் மசூதி சென்று வழிபட்டு ராமரை வணங்கி மத நல்லிணக்கத்துடன் ஒற்றுமையாக இருக்க வேண்டும். இந்துக்கள் அயோத்தி சென்றால் ராமர் கோயிலுக்கும் செல்ல வேண்டும்; பாபர் மசூதிக்கும் செல்ல வேண்டும்” என்று கூறியுள்ளார்.

உண்மையில், அடிப்படை விவரங்களை அறிந்துகொண்டுதான் பேசுகிறாரா? ஆதினம் ஆவதற்கு சிவ ஆகமங்களில் தேர்ச்சி பெற்று, எக்ஸாம் வைத்து, டெஸ்ட் எழுதி பாஸ் செய்துதான் ஆதினம் ஆனாரா என்றெல்லாம் இப்போது சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories