மாணவி பேச்சியம்மாள் தற்கொலை விவகாரம்: கிறிஸ்துவ பள்ளி ஆசிரியைகள் இருவர் தலைமறைவு! #JusticeForPetchiammal
நெல்லை பாளையங்கோட்டை தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்துவந்த செய்துங்கநல்லூரைச் சேர்ந்த மாணவி பேச்சியம்மாள் (15) தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், தற்கொலைக்கு தூண்டியது என்ற பிரிவின்(306) கீழ் மாற்றம் செய்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப் பட்டுள்ளது.
இந்த வழக்கில் ஆசிரியைகள் டெய்சி மற்றும் கேத்தரின் அகிய இருவர் மீதும் தற்கொலைக்கு தூண்டியதாக செய்துங்கநல்லூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். ஆசிரியைகள் இருவரும் தலைமைறைவான நிலையில் போலீஸார் அவர்களைத் தேடி வருகின்றனர்.