அடடே… புராணத்தில் வருவது போல்… புஷ்பக விமானத்தில் வந்திறங்கிய மணமக்கள்!

Published:

pushpaka vimanam1 - 2026
  • புஷ்பக விமானத்தில் வந்திறங்கிய மணமக்கள். விஜயவாடாவில் வெரைட்டி கல்யாண மண்டபம்.
  • வினோதமான திருமண ரிசெப்ஷன்.

புராணங்களில் கூறியது போலவும் சினிமாவில் காண்பிப்பது போலவும் விஜயவாடாவில் திருமண கொண்டாட்டம் நிகழ்ந்தது. இந்த திருமண கொண்டாட்டத்தில் மணமக்கள் புஷ்பக விமானத்தில் ரிசப்ஷன் மண்டபத்துக்கு வந்து இறங்கினார்கள்.

pushpaka vimanam4 - 2026

விஜயவாடாவில் ஒரு திருமணத்தில் வருகை தந்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினர் மணமகனின் குடும்பத்தினர். புராணங்களில் கூறியது போலவும் சினிமாக்களில் காண்பிப்பது போலவும் புது மணமக்களை புஷ்பக விமானம் போன்ற பிரத்தியேக வாகனத்தில் அமர வைத்து திருமண ரிசப்ஷனுக்கு வருகை தரும்படி செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினர்.

pushpaka vimanam3 - 2026

விஜயவாடாவை சேர்ந்த நம்பூரு நாராயணராவு என்ற வியாபாரி தன் மகன் சந்தீப் திருமண ரிசப்ஷனை வைபவமாக ஏற்பாடு செய்ய நினைத்தார். வித்தியாசமாக யாரும் இதுவரை முன்னெடுக்காத வினோதமாக இந்த நிகழ்ச்சியை செய்ய வேண்டும் என்று எண்ணினார். நினைத்த வண்ணமே நாராயணராவு தன் மகன் சந்தீப்பையும் மருமகள் சாவர்யாவையும் அழைத்து வர புஷ்பக விமானம் போன்ற பிரத்தியேகமான தேர் ஒன்றை தயார் செய்தார்.

ALSO READ:  சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!
pushpaka vimanam2 - 2026

திருமண ரிசப்ஷன் மண்டபம் அருகில் மகனையும் மருமகளையும் புஷ்பக விமானத்தில் கிராண்டாக அழைத்துவந்து கிரேன் உதவியோடு 100 அடி உயரத்தில் புதிய மணமக்களை இருத்தி லேசர் லைட் வெளிச்சத்தில் ரிசப்ஷன் மண்டபம் அருகே அழைத்துவந்தார்.

pushpaka vimanam5 - 2026

புஷ்பக விமானத்தில் புது மணமக்கள் இருந்த நேரத்தில் திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் அனைவரும் செல்பி எடுத்துக் கொண்டார்கள். திரைப்படத்தில் காட்டுவது போலவே இந்த புஷ்பக விமானம் சீன் த்ரில்லிங்காக இருந்ததாக திருமணத்திற்கு வந்தவர்கள் தெரிவித்தனர்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img