உத்தரப்பிரதேசத்தில்மிகப்பெரும் அளவில் தங்கச் சுரங்கங்கள் கண்டறியப் பட்டுள்ளன. அவற்றை வெளியில் தோண்டி எடுத்தால் உலகிலேயே தங்கச் சேமிப்பில் இரண்டாவது இடத்திற்கு இந்தியா வரும் என்று கூறப் படுகிறது. இது ராமராஜ்யத்தின் மகிமை என்று உபி துணை முதல்வர் தெரிவித்தார்.
உத்தரப் பிரதேசத்தில் உள்ள சுரங்கங்களில் இருந்து தங்கத்தை வெளியில் எடுத்தால் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக 2வது இடத்திற்கு இந்தியா வந்து சேரும் என்கிறார்கள். இது இப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது ராமராஜ்ய மகிமைதான் என்கின்றனர் உபி.,வாசிகள்!
கிழக்கு உத்தர பிரதேசத்தில் உள்ள சோன்பத்ரா மாவட்டத்தில் தங்க சுரங்கங்கள் இருப்பதாக ஜியாலஜிக்கல் சர்வே ஆப் இந்தியா கண்டுபிடித்துள்ளது. இந்த இடத்தில் சுமார் 3000 டன்களுக்கு மேலாக தங்கம் இருப்பதாக ஜிஎஸ்ஐ, உத்தரப் பிரதேச கனிமம் மற்றும் அகழ்வாராய்ச்சித் துறை இணைந்து செய்த சர்வே மூலம் கண்டறிந்தார்கள்.
சோன்பத்ரா மாவட்டத்திலுள்ள சோன்பஹாடி, ஹார்தி என்ற இடங்களில் இந்த தங்கச் சுரங்கங்கள் பரவியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தார்கள். சோன்பஹாடியில் 2143 டன்களும் ஹார்தியில் 646 டன்களும் தங்கம் கிடைத்துள்ளதாக ஜிஎஸ்ஐ அதிகாரிகள் கணக்கு எடுத்துள்ளார்கள்.
இந்த சுரங்கங்களில் தங்கத்தை தோண்டி வெளியில் எடுப்பதற்காக மைனிங் வேலைகளை லீசுக்கு கொடுப்பதற்கு அரசாங்கம் யோசித்து வருகிறது. இதன் மேல் சர்வே நடந்து வருகையில் ஈ டெண்டரிங் மூலமாக ஏலம் விடுவதற்கு 7 பேர் கொண்ட குழுவை அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளது.
தங்கத்தோடு யுரேனியம் கிடைப்பதற்கும் வாய்ப்பு இருப்பதாக அறிவியலாளர்கள் கணக்கீடு. சோன்பத்ரா விலுள்ள தங்கச் சுரங்கம் தற்போது நாட்டிலுள்ள 618.2 டன் தங்கத்தை விட 5 மடங்கு அதிகம். இதன் மதிப்பு 12 லட்சம் கோடிகள் என்று தெரிகிறது.
சுமார் இருபது வருடங்களாக இந்த இடத்தில் தங்கச் சுரங்கத்துக்கு வாய்ப்பிருப்பதாக ஜிஎஸ்ஐ கணக்கீடு தெரிவித்தது . இது உண்மையானால் தங்கச் சுரங்கங்களில் உலகத்திலேயே பாரதம் இரண்டாவது இடத்திற்கு வரும்.