December 6, 2025, 4:02 AM
24.9 C
Chennai

கரோனா பாதிப்பு: திருப்பதி திருமலையில் அவசரத் தீர்மானங்கள்!

tirupati - 2025

திருமலையில் கரோனா பாதிப்பினால் அவசரத் தீர்மானங்கள்.

மார்ச் 19 முதல் மார்ச் 21 ஆம் தேதி வரை திருமலையில் தன்வந்திரி மகாயாகம் நடத்துவதற்கு திருமலா திருப்பதி தேவஸ்தானம் முடிவு எடுத்துள்ளது.

கரோனா வைரஸ் தாக்கம் திருமலை வெங்கடேஸ்வர பெருமாள் கோவில் மீது கூட விழுந்துள்ளது.

திருமலையில் வசந்தோற்சவம், சஹஸ்ர தீப அலங்கார சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம் மற்றும் பிரத்தியேக பூஜைகள் தற்காலிகமாக ரத்து செய்வதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் போர்டு முக்கிய தீர்மானம் எடுத்துள்ளது.

சகஸ்ர கலசாபிஷேகம் மற்றும் விசேஷ பூஜைகள் கூட தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.

க்யூ காம்ப்ளக்ஸில் பக்தர்கள் காத்திருப்பது அவசியம் இல்லாமல் தரிசனம் ஏற்படுத்தித்தர வேண்டுமென்று டிடிடி தீர்மானித்துள்ளது.

டோக்கன் வழிமுறைப்படி ஒரு மணி நேரத்திற்கு 4 ஆயிரம் பக்தர்களுக்கு மாத்திரமே தரிசனம் ஏற்படுத்தித் தர ஏற்பாடு செய்துள்ளது.

செவ்வாய்க்கிழமை முதல் டோக்கன் எடுத்துக் கொண்ட பக்தர்களுக்கு மாத்திரமே தரிசனம் ஏற்பாடு இருக்கும்.

கரோனா நிவாரணத்திற்காக தன்வந்திரி யாகம் நடத்த ஏற்பாடு செய்துள்ளார்கள். மார்ச் 19 முதல் மார்ச் 21ம் தேதி வரை திருமலையில் தன்வந்திரி மகா யாகம் நடத்தப்படுகிறது.

அதேபோல் கடப்பா மாவட்டத்தில் உள்ள ஒன்டிமிட்ட சீதாராம ஆலயத்தில் சீதாராம கல்யாணத்தைக் கூட திருமலா திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

tirupathi therottam - 2025

கரோனா பரவுவதைத் தடுப்பதற்காக மும்பையில் உள்ள ஸ்ரீவாரு ஆலய நிர்மாண பூமி பூஜையை ஒத்திவைத்துள்ளது.

விசேஷ பூஜை, சஹஸ்ர தீபாலங்கரண சேவை, வசந்தோற்சவம் சேவைகளுக்கு முன்பாக புக் செய்து கொண்ட பக்தர்களுக்கு தேதியை மாற்றி தருவதற்கு வாய்ப்பு அல்லது பிரேக் தரிசனத்திற்கு செல்லும் வாய்ப்பு டிடிடி ஏற்படுத்தி தருகிறது.

கரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் பின்னணியில் அதிகம் பேர் ஒரே இடத்தில் குழுமி இருப்பது நல்லதல்ல என்பதால் இது போன்ற முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது.

அதன்படி டி டி டி ஈஓ அனில்குமார் சிங்கால் விவரங்களை தெரிவித்தார்.

இந்தியாவிலும் மாநிலத்திலும் வைரசின் தாக்கம் அதிகமாகி வருகிறது. வைரஸ் பரவுவதை நிரந்தரமான தடுக்க நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். அதிகம் பேர் ஒரே இடத்தில் கூடுவது நல்லதல்ல. இதனால் விரைவில் வைரஸ் பரவும். திருமலையில் செக்டார் செக்டாராகப் பிரித்து சுகாதார நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். அறைகளை காலி செய்த உடனே முழுவதாக சுத்தம் செய்த பின்பே மற்றொருவருக்கு ஒதுக்குகிறோம். சந்தேகத்துக்கிடமானவர்களை அலிபிரி நடைபாதையில் அடையாளம் கண்டு மருத்துவ சிகிச்சைக்காக அனுப்பி வைக்க ஏற்பாடு செய்கிறோம்.

கரோனா வைரஸ் தாக்குதலினால் ஒரே இடத்தில் 6 மணி நேரத்திற்கு சேர்ந்திருப்பது நல்லதல்ல. அதனால் ஒன்டிமிட்ட சீதாராம கல்யாணம் ரத்து செய்து லைவ் வழியாக கல்யாணம் பார்க்கும் விதமாக ஏற்பாடு செய்துள்ளோம்.

செவ்வாய்க் கிழமையிலிருந்து டிடிடி ஏற்பாடு செய்த சமயத்தில் மாத்திரமே தரிசனத்திற்கு வரவேண்டும். பக்தர்கள் கூட இதற்கு ஒத்துழைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories