December 5, 2025, 6:04 PM
26.7 C
Chennai

கோரோனா… செங்கோட்டையில் திருப்பி அனுப்பப்படும் கேரள வாகனங்கள்! கோவையில் பஸ் சர்வீஸ் கட்!

kerala vehicles not allowed - 2025

கொரோனா வைரஸ் பரவல் குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக கேரள எல்லைப் பகுதியான தென்காசி மாவட்டம் செங்கோட்டையை அடுத்த புளியறை சோதனைச்சாவடி வழியாக கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் தனியார் வாகனங்கள் அனைத்தும் திருப்பி அனுப்பப்படுகின்றன. கேரள பேருந்து மற்றும் நீதிமன்றம் மருத்துவமனை செல்பவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்!

இந்தியாவிலேயே கொரோனா பாதிப்புக்கு அதிகம் உள்ளாகியிருக்கும் மாநிலம் கேரளம். இங்கே 3 பேர் சிகிச்சை பெற்று தங்கள் வீடுகளுக்கு திரும்பியிருக்கிறார்கள் என்றாலும், கொரோனா பரவலாக்கம் கேரளத்தில் அதிகரித்து வருகிறது. எனவே கேரளத்தில் இருந்து தமிழகத்துக்குள் வரும் வாகனங்கள், பெரிதும் கண்காணிக்கப் பட்டு, தடுப்பு மருந்து தெளிக்கப் பட்டு அனுமதிக்கப் பட்டன.

இந்நிலையில், இன்று காலை முதல் திடீரென கேரள தனியார் வாகனங்கள் தடுத்து நிறுத்தப் பட்டு, கேரளத்துக்கே திருப்பி அனுப்பப் பட்டு வருகின்றன. நேற்று, கோழிகள் உள்ளிட்ட இறைச்சிகளை ஏற்றி வந்த வாகனங்கள் மட்டுமே திருப்பி அனுப்பப் பட்டு வந்தன. இந்நிலையில் புளியறை சோதனைச் சாவடி வரை வந்து மீண்டும் கேரளாவுக்குச் செல்ல வேண்டியிருப்பது குறித்து வாகன ஓட்டிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

அதுபோல், கேரளத்தில் மிக முக்கிய எல்லைப் பகுதியான கோவை மாவட்டத்திலும், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேரளா செல்லும் 45 பஸ்களின் சேவை ரத்து செய்யப்பட்டது.

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில், தேவையற்ற பயணங்களை பொது மக்கள் தவிர்க்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், தேவயற்ற வகையில் கேரளம், தமிழகத்துக்குள் அடிக்கடி பயணம் செய்வதைத் தவிர்க்கும் வகையில், பேருந்து சேவைகளையும் பெருமளவில் நிறுத்தியுள்ளது மாநில அரசு. வரும் மார்ச் 31ம் தேதி வரை மிக முக்கியமான காலகட்டம் என்பதால், இதனை மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.

மத்திய அரசைத் தொடர்ந்து, கொரோனோ அச்சுறுத்தல் காரணமாக வெளிமாநிலங்களுக்குச் செல்வதை தவிர்க்கும்படி தமிழக அரசும் அறிவுரை வழங்கியது. கேரளாவில், கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவையில் இருந்து கேரளா செல்லும் 45 பஸ்களின் சேவை நிறுத்தப்பட்டது. பயணிகள் பயன்பாடு குறைவு காரணமாக கோவை, பொள்ளாச்சியில் 168 பஸ்களின் சேவையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories