தில்லில இருந்து வந்த 21 பேர் எங்கோ ஒளிந்து கொண்டிருக்கின்றனர்; தேடுகிறோம்: ஜெகன்!

jagan - 2026

டெல்லி இஸ்லாமிய மத பிரார்த்தனை கூட்டத்தில் பங்கு கொண்டு திரும்பி வந்தவர்களில் 70 பேருக்கு பாசிட்டிவ் உள்ளது. மேலும் 21 பேர் ஒளிந்து கொண்டு உள்ளார்கள். சல்லடை போட்டுத் தேடி வருகிறோம்… ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி .

கரோனாவின் தாக்குதலால் ஆந்திர அரசாங்கம் எச்சரிக்கை அடைந்துள்ளது. எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களில் ஆந்திராவில் கரோனா கேசுகள் மிகவும் அதிகரிப்பது கவலை அளிக்கிறது என்று மாநில முதல்வர் கூறினார்.

டெல்லி சென்று திரும்பியவர்களில் பலருக்கும் கரோனா பரவியுள்ளது என்று புதன்கிழமை அவர் செய்தியார்களோடு நடந்த கூட்டத்தில் கூறினார். இஸ்லாமிய மத பிரார்த்தனை கூட்டத்திற்காக சென்ற ஆந்திர வாசிகளுக்கு வைரஸ் பரவி உள்ளது என்று கூறி டெல்லி சென்று வந்தவர்கள் அனைவரையும் அரசாங்கம் தேடி வருவதாக தெரிவித்தார்.

டெல்லி சென்றவர்கள், அவர்களோடு சேர்ந்து பிரயாணம் செய்தவர்களைக் கூட கண்டுபிடித்து அடையாளம் கண்டு வருகிறோம் என்று கூறினார் . வைரஸ் வந்துவிட்டால் ஏதோ நடக்கக் கூடாதது நடந்து விடும் என்று யாரும் கவலை அடைய தேவையில்லை என்றார் . கரோனா வைரஸ் ஒருவரிடமிருந்து அடுத்தவருக்கு பரவும் வாய்ப்பு அபாயம் உள்ளது என்றும் முதியோர்களுக்கு வைரஸ் தாக்குதல் அதிகமாக காட்டும் என்றும் கூறினார். வைரஸ் பரவுவதை பாவமாக பார்க்க வேண்டாம் என்று அவர் மக்களுக்கு விண்ணப்பித்தார். மாநிலத்தில் ஒரேடியாக கரோனா கேசுகள் அதிகரிப்பது கவலையளிக்கிறது என்று கூறினார்.

மாநிலத்தில் 87 கரோனா நோயாளிகள் இருக்கும் பட்சத்தில் அதில் 70 கேசுகள் டெல்லி இஸ்லாமிய மத பிரார்த்தனைக்கு சென்று வந்தவர்கள் என்று கூறினார்.

1085 பேர் மாநிலத்தில் இருந்து டெல்லி மத கூட்டத்திற்கு சென்றார்கள் என்று ஜெகன் தெரிவித்தார். 585 பேருக்கு பரிசோதனை செய்தோம். 70 பேருக்கு பாசிட்டிவ் வந்துள்ளது. மற்றும் 21 பேரை தேடி வருகிறோம் என்றார்.

டெல்லி சென்று வந்தவர்கள், அவர்களோடு கண்டாக்ட் ஆனவர்கள் சுயமாக தாமாகவே 104க்கு போன் செய்து பரிசோதனை செய்து கொள்ளவேண்டும் என்று குறிப்பிட்டார். யாருக்காவது ஆரோக்கியம் சரியாக இல்லை என்றால் வாலன்டியர்களுக்கு செய்தி தெரிவிக்க வேண்டும் என்றும் கூறினார் .

கரோனா 81 சதவிகிதம் கேசுகள் வீடுகளிலேயே இருந்து மருத்துவம் செய்து கொண்டால் குறையும் என்று கூறினார். வெறும் 14 சதவீதம் பேரை மட்டுமே மருத்துவமனைக்கு அனுப்பி உள்ளோம் என்றார். மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொண்டபின் பலருக்கு குணமாகிவிட்டது என்றும் தெரிவித்தார்.

கரோனாவால் மாநிலத்தின் பொருளாதார நிலை தாக்குதல் அடைந்துள்ளது என்று ஜெகன் குறிப்பிட்டார். அக்குவா துறையும் ஃபுட் மில்ஸ் ,ஆயில் மில்ஸ் அனைவரும் வேலை செய்யலாம் என்றார் .

கரோனா வந்தவர்களை வெறுக்க வேண்டாம். அதனை தப்பாக பார்க்க வேண்டாம் என்று ஜெகன் கேட்டுக்கொண்டார். இந்த விபத்து சமயத்தில் உதவிகரமாக இருக்க வேண்டுமென்று பிரைவேட் மருத்துவமனைகளுக்கு ஜெகன் விண்ணப்பம் செய்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

Topics

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

Entertainment News

Popular Categories