December 6, 2025, 1:40 PM
29 C
Chennai

ஜூன் 1 கோயில் திறப்பா?! அது வெறும் வதந்தியாம்..!

hrnce office e1561694728558
hrnce office e1561694728558

தமிழகத்தில் ஜூன் 1 ஆம் தேதி முதல் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 40 ஆயிரம் கோயில்களில் முக்கியமான கோயில்கள் திறக்கப்படும் என்றும், குறைந்த அளவிலான பக்தர்கள் அனுமதிக்கப் படுவார்கள் என்றும் உலவும் செய்தி வெறும் வதந்தி தான் என்று கூறியுள்ளது அறநிலையத்துறை.

தற்போது, கொரோனா அச்சம் காரணமாக ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளதால், கோவில்களில் பக்தர்களின் தரிசனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பக்தர்களின் வசதிக்காக புகழ்பெற்ற சில கோவில்களின் சிறப்பு பூஜைகள், பிரதோஷ வழிபாடு ஆகியவை ஆன்லைன் வழியாக நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இந்நிலையில், 4வது கட்ட ஊரடங்கு பிறப்பிக்கப் பட்டு, மே 31ம் தேதி வரை வழிபாட்டுத் தலங்கள் மூடியிருக்கும் என்பதால், அதன் பின்னர் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களையும் திறக்கலாமே என்று பலரும் கோரிக்கை வைத்தனர். இது குறித்து வழக்கு ஒன்றும் உயர் நீதிமன்றத்தில் ஹாக்கல் செய்யப் பட்டு, அது தள்ளுபடி ஆனது

இதனிடையே, தமிழகத்தில் மது குடிப்பவர்களுக்காக தமிழக அரசு டாஸ்மாக் கடைகளைத் திறக்க அனுமதி அளித்தது. இது பக்தர்களிடையே பெரும் மன வேதனையை அளித்தது. டாஸ்மாக் கடைக்குச் செல்பவர்கள் ஒழுங்குமுறையைக் கடைப்பிடித்துச் செல்பவர்கள் போலும், கோயிலுக்குச் செல்பவர்கள் கட்டுப்பாடு அற்று செல்பவர்கள் போலும் அரசு நினைக்கிறதா என்று கூறி, கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும் என பக்தர்கள் குழுக்கள், ஆன்மிக இயங்கள் கோரிக்கை வைத்தன.

இந்நிலையில் சென்னையில் உள்ள அறநிலையத்துறை தலைமையகத்தில், பக்தர்களின் கோரிக்கையைப் பரிசீலிக்க அறநிலையத்துறை ஆணையர் தலைமையில் நேற்று காலை ஆலோசனைக் கூட்டம் நடந்தது என்றும், அந்தக் கூட்டத்தில் ஜூன் 1 ஆம் தேதி முதல் கட்டுப்பாடுகள், டோக்கன்கள் வழங்கப்பட்டு 500 பேர் வரை அனுமதி என்று கூறி, பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி அளிக்க முடிவு செய்ததாகவும் செய்திகள் பரவின. ஆனா, இதனை வெறும் வதந்தி என்று குறிப்பிட்டு, அறநிலையத்துறை வட்டாரங்கள் மறுப்பு தெரிவித்துள்ளன.

மத்திய, மாநில அரசுகளின் உத்தரவுக்குப் பின்பே வழிபாட்டுத் தலங்கள் தரிசனத்திற்கு திறக்கப்படும். எனவே வெற்று வதந்திகளை பக்தர்கள் நம்ப வேண்டாம் என்று அறநிலையத்துறை அதிகாரிகள் கூறியதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories