எஸ்.எஸ்.ஐ-யை எட்டி உதைத்த முன்னாள் எம்.பி. அர்ஜுனன் மீது வழக்கு பதிவு!

ex mp arjunan quarells with police in omalur tolgate
ex mp arjunan quarells with police in omalur tolgate

சேலம் : எஸ்.எஸ்.ஐ.யுடன் கைகலப்பில் ஈடுபட்டு எட்டி உதைத்த முன்னாள் திமுக., எம்.பி. அர்ஜுனன்(77) மீது மூன்று பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சேலம் மாவட்டம் நல்லகவுண்டம்பட்டியைச் சேர்ந்த அர்ஜுனன் (77) தர்மபுரி தொகுதி தி.மு.க. முன்னாள் எம்.பி..யாக இருந்துள்ளார். திமுக., அதிமுக., சசிகலா, தீபா பேரவை என்றெல்லாம் அரசியல் பயணம் செய்துள்ள இவர், தற்போது அ.தி.மு.க.வில் உள்ளார். இரு தினங்களுக்கு முன்னர் இவர், இரவு 7:30 மணி அளவில் காரில் ஓமலுாரில் இருந்து சேலத்துக்குச் சென்றார்.

ஓமலுார் சுங்கச்சாவடி அருகே அர்ஜுனன் காரில் வந்த போது, அங்கே பணியில் இருந்த எஸ்.எஸ்.ஐ. ரமேஷ், பட்டாலியன் போலீஸ் தேசிங் ஆகியோர் அர்ஜுனன் காரை நிறுத்தினர். தேசிங் அவரிடம், இ-பாஸ் இருக்கிறதா என்று கேட்க, அதற்கு அவர் தாம் ஒரு முன்னாள் எம்.பி, என்று கூறியிருக்கிறார். அதற்கு காவலர், அடையாள அட்டையைக் காட்டுங்க என்று கேட்டிருக்கிறார். அதனால் கடுப்பான அர்ஜுனன், அவரை தகாத வார்த்தைகளில் திட்டியுள்ளார்.

இதை அடுத்து காரில் இருந்து இறங்கி வந்து அங்கிருக்கும் போலீஸாருடன் வாக்குவாதம் செய்துள்ளார். தொடர்ந்து கைகலப்பு ஏற்பட, எஸ்.எஸ்.ஐ. ரமேஷ் அவரைப் பிடித்து தள்ளியுள்ளார். இதனால் மேலும் ஆத்திரமடைந்த அர்ஜுனன், அவரை எட்டி உதைத்துள்ளார்.

இது குறித்த வீடியோ காட்சிகள் சமூகத் தளங்களில் வைரலாகப் பரவின. இதனால் தம்மை எட்டி உதைத்ததாக எஸ்.எஸ்.ஐ. ரமேஷ் புகார் அளிக்க, அதன்படி அர்ஜுனன் மீது அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் ஆபாச வார்த்தைகளால் திட்டுதல், தாக்குதலில் ஈடுபடுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் கருப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாக இன்று புதன்கிழமை நடைபெற்றது.மாசி வீதிகளில்...

பஞ்சாங்கம் – ஏப்ரல் 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

Entertainment News

Popular Categories