December 6, 2025, 2:11 AM
26 C
Chennai

எஸ்.எஸ்.ஐ-யை எட்டி உதைத்த முன்னாள் எம்.பி. அர்ஜுனன் மீது வழக்கு பதிவு!

ex mp arjunan quarells with police in omalur tolgate
ex mp arjunan quarells with police in omalur tolgate

சேலம் : எஸ்.எஸ்.ஐ.யுடன் கைகலப்பில் ஈடுபட்டு எட்டி உதைத்த முன்னாள் திமுக., எம்.பி. அர்ஜுனன்(77) மீது மூன்று பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சேலம் மாவட்டம் நல்லகவுண்டம்பட்டியைச் சேர்ந்த அர்ஜுனன் (77) தர்மபுரி தொகுதி தி.மு.க. முன்னாள் எம்.பி..யாக இருந்துள்ளார். திமுக., அதிமுக., சசிகலா, தீபா பேரவை என்றெல்லாம் அரசியல் பயணம் செய்துள்ள இவர், தற்போது அ.தி.மு.க.வில் உள்ளார். இரு தினங்களுக்கு முன்னர் இவர், இரவு 7:30 மணி அளவில் காரில் ஓமலுாரில் இருந்து சேலத்துக்குச் சென்றார்.

ஓமலுார் சுங்கச்சாவடி அருகே அர்ஜுனன் காரில் வந்த போது, அங்கே பணியில் இருந்த எஸ்.எஸ்.ஐ. ரமேஷ், பட்டாலியன் போலீஸ் தேசிங் ஆகியோர் அர்ஜுனன் காரை நிறுத்தினர். தேசிங் அவரிடம், இ-பாஸ் இருக்கிறதா என்று கேட்க, அதற்கு அவர் தாம் ஒரு முன்னாள் எம்.பி, என்று கூறியிருக்கிறார். அதற்கு காவலர், அடையாள அட்டையைக் காட்டுங்க என்று கேட்டிருக்கிறார். அதனால் கடுப்பான அர்ஜுனன், அவரை தகாத வார்த்தைகளில் திட்டியுள்ளார்.

இதை அடுத்து காரில் இருந்து இறங்கி வந்து அங்கிருக்கும் போலீஸாருடன் வாக்குவாதம் செய்துள்ளார். தொடர்ந்து கைகலப்பு ஏற்பட, எஸ்.எஸ்.ஐ. ரமேஷ் அவரைப் பிடித்து தள்ளியுள்ளார். இதனால் மேலும் ஆத்திரமடைந்த அர்ஜுனன், அவரை எட்டி உதைத்துள்ளார்.

இது குறித்த வீடியோ காட்சிகள் சமூகத் தளங்களில் வைரலாகப் பரவின. இதனால் தம்மை எட்டி உதைத்ததாக எஸ்.எஸ்.ஐ. ரமேஷ் புகார் அளிக்க, அதன்படி அர்ஜுனன் மீது அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் ஆபாச வார்த்தைகளால் திட்டுதல், தாக்குதலில் ஈடுபடுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் கருப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories