இந்த திமுக.,காரன் கூஜா தூக்கக் கூடாதுன்னு…. யாரோ ஒரு ‘நல்லவன்’ தூக்கிட்டுப் போய்ட்டான்!

Screenshot_2020_0807_133315

கரூர் மாவட்டம், காந்தி கிராமத்தைச் சேர்ந்த காமராஜ், தி.மு.க-வின் கரூர் மாவட்ட வழக்கறிஞர் பிரிவில் பொறுப்பில் உள்ளவர். 2006 – 2011-ல் கிருஷ்ணராயபுரம் தொகுதி எம்.எல்.ஏ-வாக இருந்திருக்கிறார். 10 வருடங்களுக்கு முன்பு காந்தி கிராமம் மைதானம் அருகே அவர் இப்போதிருக்கும் வீட்டைக் கட்டியுள்ளார். தனது வீட்டைச் சுற்றி பல இடங்களில் பாதுகாப்புக்காக சிசிடிவி கேமராக்களைப் பொருத்தி வைத்திருக்கிறார்.

காமராஜின் மனைவி தினமும் பால் வாங்குவதற்காக வீட்டின் முன்பு உள்ள காம்பவுண்டு கேட்டைத் தாங்கியிருக்கும் தூண்மீது கூஜாவை வைத்து வந்துள்ளார்.

அதிகாலை 5.30 மணி அளவில் வீட்டுக்கு வரும் பால்காரர், அந்த பால் கூஜாவில் பாலை நிரப்பி வைத்துவிட்டுச் சென்று விடுவார். காலையில் எழுந்து வரும் காமராஜின் மனைவி, அந்தக் கூஜாவை எடுத்து வந்து, அதில் இருக்கும் பாலை பயன்படுத்தி வந்துள்ளார்.

இப்படி, பால் வாங்க காம்பவுண்டு கேட் தூணில் வைக்கப்பட்டிருந்த கூஜாவைதான், 50 வயது மதிக்கத் தக்க மர்ம நபர் ஒருவர் திருடிய சம்பவம், முன்னாள் எம்.எல்.ஏ காமராஜை சிரிக்க வைத்துள்ளது.

Screenshot_2020_0807_133411

அவர் வீட்டு பால் கூஜா, மர்ம நபரால் எடுத்துச் செல்லப் பட்ட சிசிடிவி காட்சிகளை பத்திரிகையாளர்களுக்கு அனுப்பி வைத்து, தன் கருத்தையும் பகிர்ந்திருக்கிறார் காமராஜ்.

வழக்கம் போல் முந்தா நாள் இரவும் அந்தத் தூணில் என் மனைவி அந்த கூஜாவை வைத்தார். ஆனால் காலையில் பால் ஊற்ற வந்த பால்காரர், கூஜாவைக் காணாமல் தேடியிருக்கிறார். அதனால் காலிங் பெல்லை தொடர்ந்து அடித்துள்ளார். நாங்கள் என்னவோ ஏதோவென்று வெளியில் வந்து பார்த்தோம். அப்போதுதான், கூஜா காணாமல் போன விஷயம் தெரியவந்தது.

வேறு பாத்திரத்தில் பால் வாங்கிக்கொண்டு, பால்காரரை அனுப்பி வைத்தோம். என்மகன் வீட்டுக்கு முன் உள்ள கேமராவில் பதிவான சிசிடிவி காட்சிகளைப் பார்த்தான். அப்போதுதான் 5.15 மணி அளவில் வீட்டு முன்பகுதிக்கு வரும் மர்ம நபரை வீடியோ காட்சிகள் காட்டின.

Screenshot_2020_0807_133355

சுமார் கால் மணி நேரம் நோட்டம் விட்ட அந்த மர்ம மனிதர், கடைசியாக காம்பவுண்டு கேட் அருகே வந்து, தூணில் இருந்த கூஜாவை எடுத்துக் கொண்டு விறுவிறுவென்று சென்றுவிடுகிறார். 200 ரூபாய்க்குக் கூட பெறாத கூஜாவை அவர் தூக்கிக் கொண்டு விருட்டெனப்போனது, என்னைச் சிரிக்க வைத்தது… என்றார்.

இந்தத் தகவலை இணையத்தில் படித்து விட்டு, இணையவெளி வாசகர்களும் சிரிப்பு மூட்ட கருத்துப் பதிவிட்டுள்ளனர். இந்த திமுக.,காரன் கூஜா தூக்குவது அந்த மர்ம நபருக்கு இழுக்காகப் பட்டுள்ளது போலிருக்கிறது. அதான் சிம்பாலிக்காக, திமுக.,காரன் வீட்டிலேயே கூஜாவை திருடி, நானே கூஜா தூக்கிட்டுப் போறேன், உனக்கு கூஜா வேண்டாம் என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறான் போல… என்று கமெண்ட் அடிக்கின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'நோபல் ரெக்கார்ட்' செய்துள்ள இப்பள்ளி, தற்போது தனது இரண்டாவது உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

Entertainment News

Popular Categories