மதுரை… வாய்க்காலில் பாதாள சாக்கடை நீரை திறந்து விடும் மாநகராட்சி!

madurai-corp-lorry
madurai-corp-lorry
  • வாய்க்காலில் பாதாள சாக்கடையை நீரை திறந்துவிடும் மாநகராட்சி வாகனம்
  • பலமுறை பொதுமக்கள் சொல்லியும் கண்டுகொள்ளாத அதிகாரி
  • நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி நிர்வாகம்????

மதுரை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதியான பைபாஸ் சாலை தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் எதிரில் கிருதுமால் நதி ஓடுகிறது. புராண பெருமை வாய்ந்த நதி இது. இதில் தான் விஷ்ணுவின் தசாவதாரத்தில் முதல் அவதாரமான மத்ஸ்யாவதாரம் நடந்ததாக, புராணக் குறிப்புகள் உள்ளன.

இந்த கிருதுமால் நதி தற்போது மிகுந்த துர்நாற்றத்துடன் அப்பகுதியில் சாலையை கடக்கும் பொழுது மூச்சுத் திணறல் ஏற்படும் அளவிற்கு இருக்கிறது.

இந்த நிலையில் தினசரி மதுரை மாநகராட்சிக்கு சொந்தமான கழிவுநீர் வாகனம், இதில் கழிவுநீரை கொட்டுகிறது. பலமுறை அப்பகுதியை சேர்ந்த மாநகராட்சி அதிகாரிகளிடம் இதுகுறித்து தொலைபேசி வாயிலாக தகவல் கொடுத்தும் நடவடிக்கை எதுவுமில்லை.

சில நேரம் தாங்கள் இது குறித்து எடுத்து வருவதாகவும் இனிமேல் இதுபோன்று நடக்காது என்றும் சில முறை பதில் அளிக்கிறார்கள். ஆனால் மீண்டும் இதே போன்ற நிலையைத்தான் இப்போதும் பார்க்க முடிகிறது.

தினமும் ஆயிரக்கணக்கான குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை செல்லக்கூடிய பிரதான சாலையில் இதுபோன்று கழிவு நீரை வாய்க்காலில் கொட்டு கிறார்கள். கழிவுநீர் நீரேற்று நிலையத்துக்கு இதனை கொண்டு செல்ல வேண்டியதுதானே என்று கேட்டதற்கு எங்கள் அதிகாரிகள்தான் கொட்ட சொல்லியுள்ளார்கள்; இதனால் உங்களுக்கு என்ன ஆகப் போகிறது என திருப்பிக் கேட்கிறார்கள்.

மதுரை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சுத்தப்படுத்தி கொண்டிருக்கும் ஒரு பகுதியில் மற்றொரு பகுதியில் இதுபோன்ற அசுத்தம் செய்யும் அதிகாரிகள் மீது மாநகராட்சி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

மாநகராட்சி ஆணையாளர் உரிய நடவடிக்கை சமூக ஆர்வலர்களும் பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Topics

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

Entertainment News

Popular Categories