மதுரை… வாய்க்காலில் பாதாள சாக்கடை நீரை திறந்து விடும் மாநகராட்சி!

madurai-corp-lorry
madurai-corp-lorry
  • வாய்க்காலில் பாதாள சாக்கடையை நீரை திறந்துவிடும் மாநகராட்சி வாகனம்
  • பலமுறை பொதுமக்கள் சொல்லியும் கண்டுகொள்ளாத அதிகாரி
  • நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி நிர்வாகம்????

மதுரை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதியான பைபாஸ் சாலை தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் எதிரில் கிருதுமால் நதி ஓடுகிறது. புராண பெருமை வாய்ந்த நதி இது. இதில் தான் விஷ்ணுவின் தசாவதாரத்தில் முதல் அவதாரமான மத்ஸ்யாவதாரம் நடந்ததாக, புராணக் குறிப்புகள் உள்ளன.

இந்த கிருதுமால் நதி தற்போது மிகுந்த துர்நாற்றத்துடன் அப்பகுதியில் சாலையை கடக்கும் பொழுது மூச்சுத் திணறல் ஏற்படும் அளவிற்கு இருக்கிறது.

இந்த நிலையில் தினசரி மதுரை மாநகராட்சிக்கு சொந்தமான கழிவுநீர் வாகனம், இதில் கழிவுநீரை கொட்டுகிறது. பலமுறை அப்பகுதியை சேர்ந்த மாநகராட்சி அதிகாரிகளிடம் இதுகுறித்து தொலைபேசி வாயிலாக தகவல் கொடுத்தும் நடவடிக்கை எதுவுமில்லை.

சில நேரம் தாங்கள் இது குறித்து எடுத்து வருவதாகவும் இனிமேல் இதுபோன்று நடக்காது என்றும் சில முறை பதில் அளிக்கிறார்கள். ஆனால் மீண்டும் இதே போன்ற நிலையைத்தான் இப்போதும் பார்க்க முடிகிறது.

தினமும் ஆயிரக்கணக்கான குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை செல்லக்கூடிய பிரதான சாலையில் இதுபோன்று கழிவு நீரை வாய்க்காலில் கொட்டு கிறார்கள். கழிவுநீர் நீரேற்று நிலையத்துக்கு இதனை கொண்டு செல்ல வேண்டியதுதானே என்று கேட்டதற்கு எங்கள் அதிகாரிகள்தான் கொட்ட சொல்லியுள்ளார்கள்; இதனால் உங்களுக்கு என்ன ஆகப் போகிறது என திருப்பிக் கேட்கிறார்கள்.

ALSO READ:  முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

மதுரை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சுத்தப்படுத்தி கொண்டிருக்கும் ஒரு பகுதியில் மற்றொரு பகுதியில் இதுபோன்ற அசுத்தம் செய்யும் அதிகாரிகள் மீது மாநகராட்சி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

மாநகராட்சி ஆணையாளர் உரிய நடவடிக்கை சமூக ஆர்வலர்களும் பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Topics

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மே 31- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

ஆசிரியர் சமூகத்தின் கவலைகளுக்கு மதிப்பளித்து, அரசாங்கம் இந்த விஷயத்தில் இரக்கத்துடனும் உறுதியுடனும் செயல்படும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

பஞ்சாங்கம் மே 30 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories