பேராவூரணி; கிசான் திட்டத்தில் முறைகேடு: கணினி மையங்களுக்கு சீல்!

peravurani
peravurani

பேராவூரணி, சேதுபாவாசத்திரம் வட்டாரத்தில் விவசாயிகள் கிசான் திட்டத்தில் முறைகேடு – கணினி மையங்களுக்கு சீல்

தஞ்சை மாவட்டம், பேராவூரணி, சேதுபாவாசத்திரம் வட்டாரங்களில், பிரதம மந்திரி விவசாயிகள் நிதி உதவித் திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக இரு கணினி மையங்களுக்கு வருவாய்த்துறையினர் சீல் வைத்தனர். 

பேராவூரணி மற்றும் சேதுபாவாசத்திரம் வட்டாரங்களில், தகுதியற்ற நபர்களை, எவ்வித ஆவணங்களும் இன்றி, வேளாண் துறை அதிகாரிகளின் யூஸர் நேம், பாஸ்வேர்ட் பயன்படுத்தி, சில தனியார் கணினி மைய நிர்வாகிகள் விவசாயிகள் நிதி உதவி திட்டத்தில் பதிவு செய்து, முறைகேடாக பணம் பெற்று, அரசுக்கு இழப்பை ஏற்படுத்தி, படிப்பறிவில்லாத பொதுமக்களை தவறாக வழி நடத்துவதாக புகார் எழுந்தது. 

இதுகுறித்து, வேளாண் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி, முறைகேடாக பணம் பெற்ற நபர்களிடம் இருந்து பணத்தை திரும்பப் பெற்று வருகின்றனர். இதுவரை இவ்வாறு பல லட்சம் ரூபாய் பணத்தை அதிகாரிகள் கைப்பற்றி அரசு கருவூலத்தில் சேர்த்துள்ளதாக தெரிகிறது. 

இந்நிலையில், பாமர மக்களிடம், குறிப்பாக நூறுநாள் வேலைத்திட்ட பணியாளர்களிடம் ரூ 200 முதல் 500 வரை கட்டணம் வசூலித்து, போலியான ஆவணங்களை பதிவேற்றம் செய்து, விவசாயிகள் நிதியுதவி திட்டத்தின் நோக்கத்தை சீர்குலைக்கும் வகையில், தெரிந்தே தவறு செய்ததாக தனியார் கணினி சேவை மையங்கள் மீது, வேளாண் துறை மூலம் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

பேராவூரணி மெயின் ரோடு மற்றும் திருச்சிற்றம்பலம் ஆகிய இடத்தில் உள்ள இரு கணினி சேவை மையங்கள் புகாருக்கு ஆளான நிலையில், பேராவூரணியில் உள்ள கணினி சேவை மையத்தை, பேராவூரணி வட்டாட்சியர் ஜெயலெட்சுமி தலைமையில், வருவாய் ஆய்வாளர் கிள்ளிவளவன், கிராம நிர்வாக அலுவலர்
முத்துக் கிருஷ்ணன், கிராம உதவியாளர் சக்திவேல், சிவகுமார் உள்ளிட்ட வருவாய்த்துறையினர் பூட்டி சீல் வைத்தனர். 

  • ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ஏபிவிபி., மாணவர்கள் மீது விசிக.,வினரின் கண்மூடித்தன தாக்குதலுக்கு கண்டனம்!

அகில பாரத வித்யார்த்தி பரிஷத்- ஏபிவிபி சார்பில், “மாணவர்கள் குரல் : மாற்றத்திற்கான குரல்” என்ற தலைப்பில் 100 % வாக்குப் பதிவிற்கான விழிப்புணர்வு பொதுக்கூட்டம்

மீண்டும் பதற்றம்! ஈரான் எச்சரிக்கை; இஸ்ரேல், அமெரிக்கா அதிரடி பதில்!

எங்கள் விரல் இன்னும் துப்பாக்கி விசையில்தான் இருக்கிறது. எந்த நேரத்திலும் போருக்குத் திரும்ப நாங்கள் தயார். ஈரான் இப்போது மிகவும் பலவீனமாக உள்ளது, அதை நாங்கள் சரியாகப் பயன்படுத்துவோம்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 9 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

திமுக., அதிமுக., யார் வென்றால் என்ன நடக்கும்?

தோற்றால் அண்ணாமலையின் செல்வாக்கு, கட்சிக்குள் பெருகும். கட்சி முழுமையாக அவர் கட்டுப்பாட்டுக்குள் போகும். தமிழக பாஜக வளர அது உதவும்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ஏபிவிபி., மாணவர்கள் மீது விசிக.,வினரின் கண்மூடித்தன தாக்குதலுக்கு கண்டனம்!

அகில பாரத வித்யார்த்தி பரிஷத்- ஏபிவிபி சார்பில், “மாணவர்கள் குரல் : மாற்றத்திற்கான குரல்” என்ற தலைப்பில் 100 % வாக்குப் பதிவிற்கான விழிப்புணர்வு பொதுக்கூட்டம்

மீண்டும் பதற்றம்! ஈரான் எச்சரிக்கை; இஸ்ரேல், அமெரிக்கா அதிரடி பதில்!

எங்கள் விரல் இன்னும் துப்பாக்கி விசையில்தான் இருக்கிறது. எந்த நேரத்திலும் போருக்குத் திரும்ப நாங்கள் தயார். ஈரான் இப்போது மிகவும் பலவீனமாக உள்ளது, அதை நாங்கள் சரியாகப் பயன்படுத்துவோம்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 9 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

திமுக., அதிமுக., யார் வென்றால் என்ன நடக்கும்?

தோற்றால் அண்ணாமலையின் செல்வாக்கு, கட்சிக்குள் பெருகும். கட்சி முழுமையாக அவர் கட்டுப்பாட்டுக்குள் போகும். தமிழக பாஜக வளர அது உதவும்.

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

ஐபிஎல் 2026: எங்கே போகிறது சென்னை அணியின் பயணம்?

சென்ணையில் நடந்த இந்தாஅட்டத்தில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி பரிதாபமாகத் தோல்வியடைந்தது.

Entertainment News

Popular Categories