உலக உணவு நாள்: ஊட்டமான உணவு ஆரோக்கியமான எதிர்காலம்!

world-food-day1
world-food-day1

கட்டுரை: ஜெயஸ்ரீ எம். சாரி, நாக்பூர்

மனித வாழ்விற்கு இன்றியமையாத தேவைகளின் முதலாமானது உணவு.
இன்று உலக உணவு நாள்.

ஐக்கிய நாடுகள் சபை தன்னலம் கருதாது பிறர் நலம் கருதும் விவசாயிகளின் உயர்வினை விளக்க உலக உணவு தினத்தை அறிவித்துள்ளது.

மகாகவி பாரதியார் “தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்,” என்றார். அனைவருக்கும் உணவு கிடைக்க வலியுறுத்த ஐக்கிய நாடுகள் சபையின் குறிக்கோளை நிறைவேற்ற பலவித முயற்சிகளை பல நாடுகளும் எடுக்கின்றன.

நம் நாட்டு விவசாயிகளின் உழைப்பினால் இன்றைய சூழலிலும் நம் நாடு உணவுப் பொருட்கள் உற்பத்தியில் திருப்திகரமான இடத்தில் உள்ளது.
“விவசாயிகள் சேற்றிலே கால் வைக்காவிட்டால் நாம் சோற்றிலே கை வைக்க முடியாது”, என்ற ஒரு கவிஞனின் வார்த்தையில் தான் எத்தனை உண்மைகள் புதைந்துள்ளன.

ஒரு புறத்தில் வீணாக்கப்படும் பண்டங்கள், ஒருபுறம் உணவுக்காக கையேந்தும் மக்கள் என இருதரப்பு மக்களை நம் பூமி பார்க்கிறது. மாறிய வாழ்வியல் முறையில் சிறப்பு நிகழ்வுகளில் கணக்கிலடங்கா பண்டங்கள் பறிமாறப் படுவதும், அந்த சமயங்களில் வீணடிக்கப்படும் பண்டங்களை காணும் போது வேதனையே மிச்சமாகிறது.

world-food-day
world-food-day

சமீபத்தில் ஒருவர் அனுப்பிய வாசகமான ‘நாம் வீணாக்கும் ஒரு பருக்கைச் சோறை எறும்பு இழுத்துக் கொண்டு செல்லும் போது தான் புரிகிறது’, என்பதில் எத்தனை உள்ளர்த்தம் உள்ளது. நம் தமிழ் நூல்களில் உணவே சிறந்த மருந்து என விளக்கப்படுகிறது. உடம்புக்கு ஒவ்வாத உணவை தவிர்த்து, நம் விவசாயிகளுக்கு உதவும் விதமாக ஆரோக்கியமாக வாழ்வினை வாழ்வதற்கு நாம் முயல்வதே நமது இன்றைய கடமையாகிறது.

இந்த வருடம் ஐக்கிய சபை உலக உணவு நாளை ‘வளருவோம், ஊட்டமுடன் வளருவோம். ஒன்றாக நிலைநிறுத்தி கொள்வோம். நமது செயல்கள் நமது எதிர்காலம்’- என்ற தீமுடன் அனுசரிக்கிறது.

நாமும் விவசாயிகளுக்கு நன்றி கூறியும், ஆரோக்கிய உணவினை உண்டு, பண்டங்களை வீணடிப்பதை அறவே தவிர்த்து, நம்மால் முடிந்தளவு தேவையானோர்க்கு உணவு கிடைக்குமாறு உதவியும், நல்ல ஆரோக்கியமான எதிர்காலம் ஏற்பட முயற்சி செய்தும் உலக உணவு தினத்தில் நமக்கான கடமையாகும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories