February 21, 2026, 1:06 PM
29.5 C
Chennai

அதிர்ச்சி! நெல்லை பல்கலை.,யில்… நக்சல்களைப் போற்றும் பாடம்! ஏபிவிபி புகார்!

abvp-petition
ஏபிவிபி மாணவர் அமைப்பினர் அதன் தென் தமிழக மாநில இணைச் செயலாளர் சி.விக்னேஷ் தலைமையில் சென்று, பல்கலை., துணைவேந்தரிடம் புகார் மனு அளித்த போது…

நக்சல் சிந்தனைகளைப் பரப்பும் பாடத்தை மாணவர்களுக்கு வைத்து, மாணவர்களை தேச விரோத சிந்தனையில் வளர்த்தெடுக்கும் முயற்சியில் நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ஈடுபட்டிருப்பதாக புகார் எழுந்துள்ளது.

கடந்த 3 வருடங்களுக்கு முன்னர் மாவோயிஸ்ட் நக்சல்களின் வாழ்க்கை, போராட்டம், ஆயுதக் கலாசாரம், கொலைக் களன், ஆட்சியாளர்களுக்கு எதிரான ஆயுதப் போராட்டம், காடுகளில் மறைந்து வாழும் வாழ்க்கை, போலீஸாரைக் கொன்ற் குவிக்கும் உத்திகள் என பல்வேறு தகவல்களை நேரடியாகப் பேட்டி கண்டு, நக்சல்களை உயர்வாகச் சித்திரிக்கும் வகையில் இடதுசாரி எழுத்தாளர் அருந்ததிராய் எழுதியுள்ள “Walking with the Comrades” புத்தகத்தை நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில், ஆங்கில இலக்கிய முதுநிலை மூன்றாம் பருவத்தின் பாடத்திட்டத்தில் இணைத்துள்ளார்கள்.

இது எவர் மூலம் நடந்தது, பல்கலை சிலபஸில் இந்தப் பாடம் இடம் பெற்றது எப்படி? இதனை எவர் மூலம் இணைத்தார்கள் என்று பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளனர் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் மாணவர் அமைப்பினர்.

தற்போது இது நெல்லை பல்கலையில் ஒரு பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இதை அடுத்து, இது குறித்த புகார் மனுவை ஏபிவிபி அமைப்பினர் நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் பிச்சுமணியிடம் அளித்துள்ளனர். புகாரைப் பெற்றுக் கொண்ட அவர், இந்தப் பாடத்தை பாடத் திட்டத்தில் இருந்து நீக்க நடவடிக்கை எடுப்பதாக மாணவர்களிடம் உறுதி கூறியுள்ளதாகத் தெரிகிறது.

ஏபிவிபி மாணவர் அமைப்பினர் ஏபிவிபி தென் தமிழக மாநில இணைச் செயலாளர் சி.விக்னேஷ் தலைமையில் சென்று, பல்கலை., துணைவேந்தரிடம் அளித்துள்ள புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது…

வணக்கம். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் வரலாற்றுச் சிறப்புமிக்க பல்கலைக்கழகமாகும். எண்ணற்ற ஆன்றோர்களும் சான்றோர்களும் கல்வி பயின்ற பல்கலைக்கழகம். இதில் முதுகலை ஆங்கிலம் 3 வது பருவத்தின் Common wealth இலக்கியத்தில் 5 வது Unit இல் அருந்ததி ராய் அவர்களால் எழுதப்பட்ட புத்தகம் “Walking with the Comrades “. இது தேச விரோத மாவோயிஸ்டுகளின் ஆயுத கலவரங்களையும், கொலைக்கலகங்களையும் வெளிப்படையாக ஆதரிக்கக்கூடிய புத்தகம்.

கடந்த 3 ஆண்டுகளாக இந்த புத்தகம் பல்கலைக் கழகப்பாடத்திட்டத்தில் உள்ளது என்கிற செய்தி வருத்தமளிக்கிறது. இதன் மூலம் மாணவர்களின் மீது நேரடியாக நக்சல் மற்றும் மாவோயிச கருத்துக்கள் கடந்த 3 ஆண்டுகளாக திணிக்கப்பட்டு வந்துள்ளது.

ஆசிரியர்களும் தேச விரோத கருத்துக்களை பாடமாக நடத்தி வந்துள்ளனர். படிக்கும் மாணவர்களுக்கு நமது நாட்டின் மீது வெறுப்புணர்வை தூண்டக்கூடிய வகையில் இந்த புத்தகம் அமைந்துள்ளதால் மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

நமது லட்சக்கணக்கான தேசபக்த இராணுவ வீரர்களை கொன்றுகுவித்த நக்சல்வாத சிந்தனைகளின் கூடாரமாக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் மாற ABVP ஒருபோதும் அனுமதிக்காது.

தேச விரோத கருத்துக்களை பரப்பக் கூடிய இந்த புத்தகத்தை பாடத்திட்டமாக சேர்த்த பல்கலைக்கழக நிர்வாகத்தை ABVP தேசிய மாணவர் அமைப்பு வன்மையாக கண்டிக்கிறது. சர்ச்சைக்குரிய புத்தகம் பாடத்திட்டத்தில் இணைக்கப்பட்டது குறித்து பல்கலைக்கழக நிர்வாகம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டுமெனவும் மேலும் பாடத்திட்டத்திலிருந்து உடனடியாக அவை நீக்கப்பட வேண்டும் எனவும் ABVP வலியுறுத்துகிறது.

இதில் தாமதம் ஏற்படும் பட்சத்தில் ABVP தேசிய மாணவர் அமைப்பு இதை மத்திய கல்வித் துறையின் கவனத்திற்கு கொண்டு சென்று மிகப்பெரிய அளவிலான போராட்டங்களை முன்னெடுக்கும் என்பதையும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories