December 6, 2025, 12:52 AM
26 C
Chennai

கொரோனா காலத்தில் அன்னம் வழங்கி… தீபாவளிக்காக வேட்டி சேலையும் கொடுத்த ‘தாயின் மடியில் குழு’!

sengottai-thayin-madiyil-helping
sengottai-thayin-madiyil-helping

கொரோனா வைரஸ் தொற்றால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு பொது முடக்கம் அறிவிக்கப்பட்ட போது, தென்காசி மாவட்டம் செங்கோட்டை பகுதியில், செங்கோட்டை நகர பாஜக துணைத் தலைவராக இருக்கும் ஆ.கோமதிநாயகம், ‘தாயின் மடியில்’ என்ற பெயரில் வாட்ஸ்அப் குழு ஒன்றை தொடங்கி அதன் மூலம் உள்ளூர் மக்களை இணைத்து அவர்களுக்கு உதவிகள் பல செய்யத் தொடங்கினார். அப்போது கடைகள் அடைக்கப்பட்டு  உணவுப் பொருள் எதுவும் கிடைக்காத சூழலில் பலர் கஷ்டப்படுவது தெரிந்தது. இதையடுத்து சிரமப் படும் மக்களுக்கு இரண்டு வேளை உணவு தயாரித்துக் கொடுக்கலாம் என்ற எண்ணத்தில் செயலில் இறங்கினார்.

இவரது மனைவி, மகன்கள் உதவியுடன்  வீட்டிலேயே உணவு தயாரித்து தினசரி மதியம் மற்றும் இரவு வேளைக்கும் சேர்த்து இரண்டு பொட்டலங்களாகக் கட்டி, செங்கோட்டை நகரத்தில் உள்ள ஏழைகள் வசிக்கும் பகுதியிலும் பேருந்து நிலையம் மற்றும் சுற்றியுள்ள இடங்களிலும் நேரடியாகச் சென்று வழங்கிவந்தார். 

sengottai-thayin-madiyil-helping1
sengottai-thayin-madiyil-helping1

இவரது  சேவையை பாராட்டி பலரும் உதவினர்.  அதன்மூலம் அவரது உணவு வழங்கும் பணி தடைபடாமல் தொடர்ந்து நடந்து வந்தது. இப்படி 200 நாட்களைக் கடந்து உணவு வழங்கும் பணி இடைவிடாமல் நடந்து கொண்டிருக்கிறது. இப்போதும், உணவுக்காகக் காத்திருக்கும் மக்களுக்கு நேரடியாகச் சென்று உணவு வழங்கி வருகிறார். 

இதனிடையே,  தீபாவளிக்காக வேட்டி, துண்டு, சட்டை, புடைவைகள் எடுத்து, பேக் செய்து, அந்த மக்களைத் தேடித் தேடிச் சென்று, உணவு வழங்கியது போலவே உடையையும் நேற்று வழங்கியுள்ளார். இதற்கான ஏற்பாடுகளை தாயின் மடியில்  நண்பர்கள் குழு செய்திருந்தது. ஆ.கோமதிநாயகத்துடன்,  பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் சீனிவாசன், பாஜக வெளிநாடு வாழ் தமிழ் வளர்ச்சி பிரிவு அணியின் மாவட்ட தலைவர்  வழக்கறிஞர் தலைவனார் M கணேசபாண்டியன், மற்றும் செங்கோட்டை ஒன்றிய பொது செயலாளர் தவனை முருகேசன், மற்றும் தீவிர உறுப்பினர் ஹரி ஐயர் .ஆகியோர் கலந்து கொண்டு, ஏழை எளியவர்க்கு வேட்டி சட்டை, துண்டு, புடைவைகளை வழங்கினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories