கொரோனா காலத்தில் அன்னம் வழங்கி… தீபாவளிக்காக வேட்டி சேலையும் கொடுத்த ‘தாயின் மடியில் குழு’!

sengottai-thayin-madiyil-helping
sengottai-thayin-madiyil-helping

கொரோனா வைரஸ் தொற்றால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு பொது முடக்கம் அறிவிக்கப்பட்ட போது, தென்காசி மாவட்டம் செங்கோட்டை பகுதியில், செங்கோட்டை நகர பாஜக துணைத் தலைவராக இருக்கும் ஆ.கோமதிநாயகம், ‘தாயின் மடியில்’ என்ற பெயரில் வாட்ஸ்அப் குழு ஒன்றை தொடங்கி அதன் மூலம் உள்ளூர் மக்களை இணைத்து அவர்களுக்கு உதவிகள் பல செய்யத் தொடங்கினார். அப்போது கடைகள் அடைக்கப்பட்டு  உணவுப் பொருள் எதுவும் கிடைக்காத சூழலில் பலர் கஷ்டப்படுவது தெரிந்தது. இதையடுத்து சிரமப் படும் மக்களுக்கு இரண்டு வேளை உணவு தயாரித்துக் கொடுக்கலாம் என்ற எண்ணத்தில் செயலில் இறங்கினார்.

இவரது மனைவி, மகன்கள் உதவியுடன்  வீட்டிலேயே உணவு தயாரித்து தினசரி மதியம் மற்றும் இரவு வேளைக்கும் சேர்த்து இரண்டு பொட்டலங்களாகக் கட்டி, செங்கோட்டை நகரத்தில் உள்ள ஏழைகள் வசிக்கும் பகுதியிலும் பேருந்து நிலையம் மற்றும் சுற்றியுள்ள இடங்களிலும் நேரடியாகச் சென்று வழங்கிவந்தார். 

sengottai-thayin-madiyil-helping1
sengottai-thayin-madiyil-helping1

இவரது  சேவையை பாராட்டி பலரும் உதவினர்.  அதன்மூலம் அவரது உணவு வழங்கும் பணி தடைபடாமல் தொடர்ந்து நடந்து வந்தது. இப்படி 200 நாட்களைக் கடந்து உணவு வழங்கும் பணி இடைவிடாமல் நடந்து கொண்டிருக்கிறது. இப்போதும், உணவுக்காகக் காத்திருக்கும் மக்களுக்கு நேரடியாகச் சென்று உணவு வழங்கி வருகிறார். 

இதனிடையே,  தீபாவளிக்காக வேட்டி, துண்டு, சட்டை, புடைவைகள் எடுத்து, பேக் செய்து, அந்த மக்களைத் தேடித் தேடிச் சென்று, உணவு வழங்கியது போலவே உடையையும் நேற்று வழங்கியுள்ளார். இதற்கான ஏற்பாடுகளை தாயின் மடியில்  நண்பர்கள் குழு செய்திருந்தது. ஆ.கோமதிநாயகத்துடன்,  பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் சீனிவாசன், பாஜக வெளிநாடு வாழ் தமிழ் வளர்ச்சி பிரிவு அணியின் மாவட்ட தலைவர்  வழக்கறிஞர் தலைவனார் M கணேசபாண்டியன், மற்றும் செங்கோட்டை ஒன்றிய பொது செயலாளர் தவனை முருகேசன், மற்றும் தீவிர உறுப்பினர் ஹரி ஐயர் .ஆகியோர் கலந்து கொண்டு, ஏழை எளியவர்க்கு வேட்டி சட்டை, துண்டு, புடைவைகளை வழங்கினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'நோபல் ரெக்கார்ட்' செய்துள்ள இப்பள்ளி, தற்போது தனது இரண்டாவது உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

Entertainment News

Popular Categories