சுபாஷிதம்: சிங்கம் ராஜா ஆனது எப்படி?

Published:

subhashitam-2
subhashitam-2

சுபாஷிதம்…ஸ்பூர்த்தி பதம்! 108 ஞான முத்துக்கள்!
தெலுங்கில்: பிஎஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

59. சிங்கம் அரசன் ஆனது எங்ஙனம்?

சுலோகம்:

நாபிஷேகோ ந சம்ஸ்கார: சிம்ஹஸ்ய க்ரியதே ம்ருகை:|
விக்ரமார்ஜிதராஜ்யஸ்ய ஸ்வயமேவ ம்ருகேந்த்ரதா ||

பொருள்:

சிங்கத்தை காட்டில் இருக்கும் பிற விலங்குகள் அனைத்தும் சேர்ந்து ராஜாவாக பட்டாபிஷேகம் செய்யவில்லை. எந்த ஓட்டெடுப்பும் நடந்து சிங்கத்தைக் காட்டு அரசனாக அறிவிக்கவில்லை. தன்னுடைய பராக்கிரமத்தால் சிங்கம் காட்டிற்கு அரசனாக புகழப்படுகிறது.

விளக்கம்: 

சமுதாயத்தில்  சிலர் அவர்களுக்கு உள்ள தனித் திறமைகளின் காரணமாக  தலைவர்களாக அறியப்படுவர்.

உலக நாடுகளில் அமெரிக்கா சூப்பர் பவராக எவ்வாறு பெயர் பெற்றது? பொருளாதார வல்லமை, படைபலம் காரணமாக தானாகவே அந்த பெயரை பெற்றுக் கொண்டது. 

யார் சிங்கத்தை காட்டரசனாக தேர்ந்தெடுத்தது? எந்த சிறப்பான குணங்களைக் கண்டு சிம்மாசனம் ஏற்றினார்கள்? அதற்கிருக்கும் சக்தி, சாமர்த்தியங்களால் சிங்கம் விலங்குகளின் அரசனாக போற்றப்படுகிறது.

ALSO READ:  மக்கள் மனங்களை ஈர்த்த ‘நீண்ட கால’ ஒரே பிரதமர்!

அரசனுக்கு இருக்கவேண்டிய பராக்கிரம இயல்புகளின் முக்கியத்துவத்தை எடுத்து இயம்பும் சுலோகம் இது. தலைமைப் பண்புகள் சிலருக்கு பிறவியிலேயே வருகிறது. அறிவுத் திறனால், உடல் வலிமையால் தலைவர்களாக ஆவார் சிலர்.

பள்ளியில், கல்லூரியில் சிலர் சிறு வயதிலிருந்தே தலைமைப் பண்புகளால் பிறரைக் கவர்வார்கள். தலைமை பண்பு என்பது பிறரிடம் கேட்டுப் பெற்று வருவதல்ல. பராக்கிரமத்தால் ஈர்ப்பது.

பொதுமக்களிடமிருந்து மதிப்பை கெஞ்சிக் கேட்டுப் பெற முடியாது. கேட்காமலேயே வாய்ப்பது. தனக்குள்ள சாமர்த்தியத்தால் மக்களின் பாராட்டைப் பெற்று தலைவர்களாக ஆனவர்கள் ஆளத் தகுந்தவர்கள்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img