February 22, 2026, 7:13 AM
25.4 C
Chennai

சுபாஷிதம்: சிங்கம் ராஜா ஆனது எப்படி?

subhashitam-2
subhashitam-2

சுபாஷிதம்…ஸ்பூர்த்தி பதம்! 108 ஞான முத்துக்கள்!
தெலுங்கில்: பிஎஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

59. சிங்கம் அரசன் ஆனது எங்ஙனம்?

சுலோகம்:

நாபிஷேகோ ந சம்ஸ்கார: சிம்ஹஸ்ய க்ரியதே ம்ருகை:|
விக்ரமார்ஜிதராஜ்யஸ்ய ஸ்வயமேவ ம்ருகேந்த்ரதா ||

பொருள்:

சிங்கத்தை காட்டில் இருக்கும் பிற விலங்குகள் அனைத்தும் சேர்ந்து ராஜாவாக பட்டாபிஷேகம் செய்யவில்லை. எந்த ஓட்டெடுப்பும் நடந்து சிங்கத்தைக் காட்டு அரசனாக அறிவிக்கவில்லை. தன்னுடைய பராக்கிரமத்தால் சிங்கம் காட்டிற்கு அரசனாக புகழப்படுகிறது.

விளக்கம்: 

சமுதாயத்தில்  சிலர் அவர்களுக்கு உள்ள தனித் திறமைகளின் காரணமாக  தலைவர்களாக அறியப்படுவர்.

உலக நாடுகளில் அமெரிக்கா சூப்பர் பவராக எவ்வாறு பெயர் பெற்றது? பொருளாதார வல்லமை, படைபலம் காரணமாக தானாகவே அந்த பெயரை பெற்றுக் கொண்டது. 

யார் சிங்கத்தை காட்டரசனாக தேர்ந்தெடுத்தது? எந்த சிறப்பான குணங்களைக் கண்டு சிம்மாசனம் ஏற்றினார்கள்? அதற்கிருக்கும் சக்தி, சாமர்த்தியங்களால் சிங்கம் விலங்குகளின் அரசனாக போற்றப்படுகிறது.

அரசனுக்கு இருக்கவேண்டிய பராக்கிரம இயல்புகளின் முக்கியத்துவத்தை எடுத்து இயம்பும் சுலோகம் இது. தலைமைப் பண்புகள் சிலருக்கு பிறவியிலேயே வருகிறது. அறிவுத் திறனால், உடல் வலிமையால் தலைவர்களாக ஆவார் சிலர்.

பள்ளியில், கல்லூரியில் சிலர் சிறு வயதிலிருந்தே தலைமைப் பண்புகளால் பிறரைக் கவர்வார்கள். தலைமை பண்பு என்பது பிறரிடம் கேட்டுப் பெற்று வருவதல்ல. பராக்கிரமத்தால் ஈர்ப்பது.

பொதுமக்களிடமிருந்து மதிப்பை கெஞ்சிக் கேட்டுப் பெற முடியாது. கேட்காமலேயே வாய்ப்பது. தனக்குள்ள சாமர்த்தியத்தால் மக்களின் பாராட்டைப் பெற்று தலைவர்களாக ஆனவர்கள் ஆளத் தகுந்தவர்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Entertainment News

Popular Categories