சிறை தண்டனை பெற்று ஜாமீனில் வந்த ஆய்வாளர்; மனைவியைக் கொன்று தானும் தற்கொலை!

perumalpandi
perumalpandi

லஞ்ச வழக்கில் தண்டனை பெற்ற லஞ்ச ஒழிப்புதுறை காவல்ஆய்வாளர் மனைவியை கொலை செய்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தேனி மாவட்டம் வடுகப்பட்டியைச் சேர்ந்த பெருமாள்பாண்டி என்பவர் மதுரை மாவட்ட லஞ்ச ஒழிப்புதுறை காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2010ஆம் ஆண்டு லஞ்ச வழக்கில் அரசு மருத்துவரை விடுவிப்பதற்காக லஞ்சம் பெற்றதாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப் பதிவு செய்து வழக்கானது!

இதில், பெருமாள் பாண்டிக்கு மதுரை மாவட்ட லஞ்ச ஒழிப்புதுறை நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து உத்தரவிட்டது. இதையடுத்து ஜாமினில் வெளியில் வந்திருந்தார் பெருமாள் பாண்டி!

இந்நிலையில் இன்று காலை மதுரை தத்தனேரி ஈஎஸ்ஐ மருத்துவமனை அருகேயுள்ள நேரு தெருவில் உள்ள தனது வீட்டில் மனைவி உமா மீனாட்சியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் சுத்தியலால் அவரைத் தாக்கியுள்ளார்! இதில் படுகாயமடைந்த உமா மீனாட்சி உயிரிழந்தார்! இதனால் அதிர்ச்சியடைந்த பெருமாள்பாண்டி தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்!

இதையடுத்து அருகில் உள்ளவர்கள் செல்லூர் காவல்துறைக்கு அளித்த தகவலையடுத்து காவல்துறையினர் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்!

முன்னாள் ஆய்வாளர் பெருமாள்பாண்டிக்கு இரு தினங்களுக்கு முன்னர் தான் 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் ஜாமினில் வெளியில் வந்திருந்த அவர் மனைவியைக் கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories