February 13, 2025, 12:31 PM
30.8 C
Chennai

மத்திய அரசு திட்டங்களை மக்கள் அறிந்து கொள்ள பாஜக சார்பில் புதிய அலுவலகம் திறப்பு!

மத்திய அரசு திட்டங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ள வசதியாக, மதுரை கே.கே. நகரில் ஜனக் கல்யாண் என்ற பெயரில் புதிய அலுவலகத்தை பாஜக நிர்வாகிகள் திறந்து வைத்துள்ளனர்.

பாரத பிரதமர் நரேந்திர மோடி நலத்திட்டங்கள் வழங்கும் அமைப்பின் கீழ் மதுரை கேகே நகர் காமராஜர் சாலையில் உள்ள இடத்தில் தென்மாவட்டங்களின் தலைமை அலுவலகம் ராஜாராம்
தலைமையில், எஸ் ஆறுமுகம் பிள்ளை, பிள்ளைமார் சங்க மாநிலத் தலைவர் முன்னிலையில், திறக்கப் பட்டது.

பாரதப்பிரதமர் ஜென் கல்யாண காரிய பிரசார், பிரதமர் மோடியின் மக்கள் நலத்திட்டங்களை, தென் மாவட்டங்களில் உள்ள அடிமட்ட மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் அவர்களுக்கு தேவையான அரசாங்க நிதி மற்றும் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரம் உயர்த்தும் வகையில் மோடி அவர்களின் விவசாய வேளாண் திட்டங்களை கொண்டு பயன் அடையும்படி மற்றும் ஆயிஷ் பாரத் உஜ்வாலா தூய்மை இந்தியா போன்ற திட்டங்களின் செயல் வடிவங்களை எளிமையான வகையில் மக்களுக்கு சென்றடையும் வகையில் தென் மாவட்டங்களில் உள்ள சுமார் 15 16 மாவட்டங்களில் மக்களின் குறைகளை தீர்க்கும் வகையில் மதுரையில் இன்று அலுவலகம் சிறப்பாக திறக்கப்பட்டது.

விழாவில் ,மாநிலத் தலைவர் திரு ராஜாராம் மாநில பொதுச் செயலாளர் விஜய் வீர் மாநில துணைத் தலைவி எஸ் பொன்னுத்தாய், மாவட்டத் தலைவர் பாஸ்கரன் மற்றும் இவ்விழாவின் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு அனைத்து மகாசபை பிள்ளைமார் தலைவர் எஸ் ஆறுமுகம் பிள்ளை கலந்து கொண்டு சிறப்பித்தனர் .

மேலும் , இந்த அமைப்பின் மாவட்ட மாநில பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நற்செய்தியின் அமைப்பின் செயல் விளக்கங்களையும் ஏழை எளிய மக்களுக்கு புரியும் வகையில் தெரிவிக்கப்பட்டது . மேலும், வரும் 25 -ஆம் தேதி மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் சுற்றுவட்டார பகுதியில் உள்ளவர்கள் அனைவரும் பயனடையும் படி மிகப்பெரிய மருத்துவ முகாம் ஒன்று செயல்பட உள்ளது.

முகாமில், முதியோர்கள் நோய்வாய்ப்பட்டவர்கள் மருத்துவ உதவி தேவைப்படும் நபர்கள் வந்து கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.13 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ஆய்வாளர் மீது நடவடிக்கை கோரி இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்!

சங்கரன்கோவிலில் இந்துமுன்னணி ஆர்ப்பாட்டம் 4 பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது

சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த யூடியூபர் ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு!

சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள யூடியூப் திவ்யா , கார்த்தி, ஆனந்த் ஆகியோர் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு

கனிம வளக் கொள்ளையைத் தடுக்கத் தவறிய அதிகாரிகள் பணியிடை நீக்கம்!

மாவட்ட நிர்வாகத்தின் தொடர் எச்சரிக்கையை மீறி செயல்பட்ட நிலையில் மாவட்ட ஆட்சியர் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாசி மாத பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!

பிப்ரவரி 17 ஆம் தேதி வரை தினமும் 20,000 கன மீட்டர் தண்ணீர் திறந்து விடப்படும். பம்பா நதியில் நீர் மட்டம் ஐந்து சென்டிமீட்டர் வரை உயரக்கூடும்.

Topics

பஞ்சாங்கம் பிப்.13 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ஆய்வாளர் மீது நடவடிக்கை கோரி இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்!

சங்கரன்கோவிலில் இந்துமுன்னணி ஆர்ப்பாட்டம் 4 பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது

சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த யூடியூபர் ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு!

சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள யூடியூப் திவ்யா , கார்த்தி, ஆனந்த் ஆகியோர் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு

கனிம வளக் கொள்ளையைத் தடுக்கத் தவறிய அதிகாரிகள் பணியிடை நீக்கம்!

மாவட்ட நிர்வாகத்தின் தொடர் எச்சரிக்கையை மீறி செயல்பட்ட நிலையில் மாவட்ட ஆட்சியர் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாசி மாத பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!

பிப்ரவரி 17 ஆம் தேதி வரை தினமும் 20,000 கன மீட்டர் தண்ணீர் திறந்து விடப்படும். பம்பா நதியில் நீர் மட்டம் ஐந்து சென்டிமீட்டர் வரை உயரக்கூடும்.

உசிலம்பட்டி ஆண்டிச்சாமி கோயில், கருப்பட்டி கருப்பண்ண சாமி கோயில்களில் கும்பாபிஷேகம்!

மதுரை மாவட்டத்தில் உள்ள சிவன் ஆலயங்களில், சோமவாரம் பிரதோஷம் நடைபெற்றது.

மஞ்சமலை சுவாமி திருவிழா பிடி மண் எடுக்கும் விழா!

மஞ்சமலை சுவாமி திருவிழா பிடிமண் கொடுக்கும் நிகழ்ச்சியில் 5000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

திருப்பரங்குன்றம் தைப் பூசத் திருவிழாவில் அரிய காட்சிகள்!

இவ்வாறு ஆண்டிற்கு ஒரு முறை ஒரே நேரத்தில் 2 முருகப்பெருமான், 2 தெய்வானைஎழுந்தருளுவது என்பது திருப்பரங்குன்றம் முருகன் கோவிலின் தைப்பூச திருவிழாவின் தனி சிறப்பாக இருந்து வருகிறது.

Entertainment News

Popular Categories