December 5, 2025, 6:22 PM
26.7 C
Chennai

உன் எதிர்காலத்தை தீர்மானிப்பவன் நீயே!

vivekananther
vivekananther

உன் எதிர்காலத்தை தீர்மானிப்பவன் நீயே!
ஜனவரி 12- சுவாமி விவேகானந்தர் பிறந்த நாள்!
தேசிய இளைஞர் தினம்!

பாரத தேசத்தின் கலாச்சார பாரம்பரியத்தைக் காத்துப் போற்றும் சாமர்த்தியம் இளைஞர்களுக்கு இருக்கிறது என்றும் தேசத்தை முன்னேற்றப் பாதையில் எடுத்துச்சென்று முன்னிலையில் நிறுத்தும் பொறுப்பு இளைஞர்களுக்கு உள்ளது என்றும் தீவிரமாக நம்பினார் விவேகானந்தர்.

சுவாமிஜி வெறும் உபதேசங்களோடு எல்லை வகுத்துக் கொள்ளவில்லை. தான் நம்பிய கொள்கைக்காக தன் வாழ்க்கையையே அர்ப்பணித்து அனைவருக்கும் முன்மாதிரியாகத் திகழ்ந்தார்.

கலாச்சாரமும் பண்பாட்டு பாரம்பரியமும் பாரத தேசத்தின் ஆழமான சொத்துக்கள் என்று எண்ணிய விவேகானந்தர் எங்கு சென்றாலும் இளைஞர்களின் பொறுப்புகளை அவர்களுக்கு நினைவூட்டி வந்தார். நாட்டை முன்னேற்றப் பாதையில் நடத்திச் செல்வது இளைஞர்களால் மட்டுமே சாத்தியமாகும் என்று அவர் தன் உரைகளில் முக்கியமாக குறிப்பிட்டார்.

vivekananda quote 1
vivekananda quote 1

தன்னம்பிக்கையோடும் நற்சிந்தனைகளோடும் முன்னேறிச் சென்றால் இளைஞர்களால் செய்ய முடியாதது என்று எதுவுமே இல்லை என்று எடுத்துரைத்தார்.

இளைஞர்களின் சக்திக்கு இருக்கும் முக்கியத்துவத்தை இந்தியா மட்டுமே அல்ல உலகம் முழுவதும் அடையாளம் காண வேண்டும் என்று விவேகானந்தர் முழங்கினார். தலைமுறைகள் கடந்தாலும் அவருடைய சொற்கள் இன்றும் கடைபிடிக்கத் தக்கவையாதலால் இளைய பாரதத்தின் முக்கியத்துவத்தை நினைவுறுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் விவேகானந்தரின் பிறந்த நாளான ஜனவரி 12ஐ தேசிய இளைஞர் தினமாக கொண்டாடி வருகிறோம்.

இளைஞர்களுக்காக அவர் ஆற்றிய சொற்பொழிவுகள், செய்த போதனைகள் பல மொழிகளில் உலகமெங்கும் சிறப்பாக பரவியுள்ளன. நவீன பாரதத்தை விரும்பிய விவேகானந்தர் காட்டிய மார்க்கத்தில் இளைஞர்கள் பயணிக்க வேண்டும் என்ற உத்தேசத்தோடு அரசாங்கம் தேசிய இளைஞர் தினம் தொடர்பாக பல நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

vivekananda quote2
vivekananda quote2

சுவாமி விவேகானந்தராக புகழ்பெற்ற நரேந்திரநாத் தத்தா 1863 ஜனவரி 12 கல்கத்தாவில் பிறந்தார். ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டாலும் அவர் பழமைவாதி அல்ல. நவீன எண்ணங்கள் அவரில் ஊற்றெடுத்தது. மதத்தைவிட மானுடமே உயர்ந்தது என்று நம்பினார். அவரை வெறும் ஹிந்து சன்னியாசியாக பார்க்கக்கூடாது. எந்த காலமானாலும் கலாச்சாரமும் பண்பாடுமே அஸ்திவாரமாக நிற்கும் என்றும் நவீனத்துவத்தை அதில் கொண்டுவந்தால் மட்டுமே முன்னேற்றம் சாத்தியப்படும் என்றும் விவேகானந்தர் கூறினார்.

எதிர்காலத்தை தீர்மானிக்க கூடிய இளைஞர்கள் நல்வழியில் பயணிக்க வேண்டும் என்று பரிதவித்தார். அதனால்தான் விவேகானந்தரின் ஜெயந்தியை தேசிய இளைஞர் தினமாக நடத்த வேண்டுமென்று 1984இல் அரசாங்கம் தீர்மானித்தது. அதன் பலனாக 1985ல் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 12 இளைஞர் தினமாக கொண்டாடுகிறோம். விவேகானந்தரின் வாழ்க்கை, அவருடைய எண்ணங்கள் இளைஞர்களுக்கு ஊக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற லட்சியத்தோடு இளைஞர் தினத்தை நாடெங்கும் நடத்தி வருகிறோம். இளைஞர்கள் தங்கள் சக்தி மீதும் சாமர்த்தியம் மீதும் புரிதலை ஏற்படுத்திக் கொண்டு எதிர்காலத்தை இலக்காகக் கொண்டு நாட்டை முன்னோக்கி நடத்துவதில் தம் பங்கு தொண்டை ஆற்ற வேண்டும் என்ற ஊக்கத்தை ஏற்படுத்துவதே இளைஞர் தினத்தின் முக்கிய லட்சியம்.

vivekananda quote1
vivekananda quote1

நாடெங்கிலும் ராமகிருஷ்ண மடம், ராமகிருஷ்ணா மிஷன் இவற்றோடு கூட அரசாங்கம், தனியார் கல்வி நிலையங்கள் இளைஞர் தினத்தை மிகவும் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இந்த சந்தர்ப்பத்தில் கலைநிகழ்ச்சிகள், தேசபக்தி கீதங்கள், கட்டுரை போட்டிகள், தனிப்பட்ட சங்கீத போட்டிகள், விளையாட்டுப்போட்டிகள், சபைகள், விவாத மேடைகள் ஏற்பாடு செய்வது வழக்கமாக உள்ளது. நம் கலாச்சாரம் பண்பாடு பாரம்பரியம் ஆகியவற்றை காப்பாற்றுவோம் என்று மாணவர்களால் சபதம் ஏற்கச் செய்வது வழக்கமாக உள்ளது.

உனக்குத் தேவையான எல்லா வலிமையும், உதவியும் உனக்குள்ளேயே உள்ளன. உன்னை நீயே பலவீனன் என்று நினைத்துக் கொள்வது மிகப் பெரிய பாவம் என்று ழுழங்கினார் சுவாமி விவேகானந்தர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories