மண்டபத்தில் மணப்பெண்! வீட்டில் திருடர்கள்! கொள்ளை போன பணம் நகைகள்!

Published:

marriage-Sequence
marriage-Sequence

திருமண மண்டபத்தில் மணப்பெண். வீட்டில் திருடர்கள்.
குண்டூரில் அதிர்ச்சி சம்பவம்!

மகளின் திருமணத்திற்கான பணிகளில் மூழ்கி இருந்த தந்தைக்கு எதிர்பாராத அதிர்ச்சி சம்பவம் நேர்ந்தது.

வீட்டிலிருந்து திருமண மண்டபத்திற்குச் சென்று திரும்பி வருவதற்குள் வீடு கொள்ளை போனது. ஒருபுறம் திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கையில் மறுபுறம் வீட்டில் திருடர்கள் புகுந்து அனைத்தையும் சுருட்டிச் சென்றனர். பத்து லட்சம் ரூபாய் ரொக்கம் கால் கிலோ தங்கம் துடைத்துச் சென்று விட்டார்கள். வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்த தந்தை எல்லாம் கலைத்து போட்ட சாமான்களை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

குண்டூர் மாவட்டம் துர்கியில் உள்ள சாய் தேஜா இங்கிலீஷ் மீடியம் பள்ளியில் டைரக்டர் ஆக பணிபுரியும் ‘கூடா சீனிவாசராவ்’ உள்ளூர் பஸ் ஸ்டாண்ட் சென்டரில் வசித்துவருகிறார். தன் மகள் திருமணத்திற்காக பள்ளி வளாகத்திலேயே திருமண மண்டபத்தில் விருந்து ஏற்பாடுகள் செய்தார்.

திருமணத்திற்காக 10 லட்சம் ரூபாய் பணம் 288 கிராம் தங்க நகைகள் ரெடியாக செய்து வீட்டில் பீரோவில் வைத்துப் பூட்டினார். இரவு 10 மணிக்கு பெண்ணின் திருமணம் நடக்க இருக்கும் மண்டபத்திற்கு சென்றார். விடியற்காலை 4 மணிக்கு வீட்டுக்கு திரும்பி வந்த சீனிவாசராவ் பீரோவில் வைத்திருந்த பணமும் நகையும் காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்தார்.

ALSO READ:  சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

வீட்டில் திருட்டு நடந்துள்ளதை கவனித்த அவர் உடனடியாக போலீசாருக்கு தெரிவித்தார். மாச்சர்ல சிஐ, துர்கி எஸ்ஐ சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தார்கள். ஆதாரங்களை சேகரிப்பதற்காக நிபுணர்களை வரவழைத்தார்கள். வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

ஒருபுறம் பெண்ணுக்கு திருமணம் நடக்கும் நேரத்தில் வீட்டில் இவ்வாறு திருடர்கள் புகுந்து கொள்ளையடித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img