தமிழக மக்களோடு இருக்கிறேன்; அது என் கடமை: ராகுல் பேச்சு!

rahul-and-udayanidhi
rahul-and-udayanidhi

மதுரை அவனியாபுரம் ஜல்லிகட்டு போட்டியை நேரில் கண்டு மகிழ்ந்தார் காங்கிரஸ் தலைவர் ராகுல். அப்போது அவர், தமிழக மக்களோடு இருக்க வேண்டியது எனது கடமை நான் தமிழக மக்களோடு இருக்கிறேன் என்றார்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் இன்று ஜல்லிகட்டு போட்டி நடைபெற்றது. இந்த ஜல்லிகட்டுப் போட்டியை காண்பதற்காக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் தனி விமானம் மூலமாக அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் பகுதிக்கு வந்து போட்டியை ஆர்வமுடன் கண்டு மகிழ்ந்தார்.

இதை அடுத்து போட்டியில் சிறப்பாக காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கு தங்க நாணயங்களை வழங்கினார். இதனிடையே ராகுல் வந்த போது, ஜல்லிக்கட்டுப் போட்டியைத் தடை செய்து தமிழர்களுக்கு துரோகம் இழைத்துவிட்டு, இப்போது எந்த முகத்தை வைத்துக் கொண்டு மதுரைக்கு ஜல்லிக்கட்டு காண ராகுல் வருகிறார் என்று கோஷமிட்டு, இந்து முன்னணி மற்றும் பாஜக.,வைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களை காவல்துறையினர் அப்புறப்படுத்தினர்.

ALSO READ:  சாவர்க்கரும் ஜனநாயகமும்

ராகுல் வருகையை அடுத்து காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். ராகுலுடன் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மற்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி , நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்தாகூர் ஆகியோரும் இருந்தனர்.

பின்னர் விழா மேடையில் பேசிய ராகுல், தமிழக பாரம்பரியம் மிகுந்த இந்த விழா ஏற்பாடுகளைப் பார்க்கும் போது மகிழ்ச்சி அளிக்கிறது. ஜல்லிக்கட்டுப் போட்டியை நேரில் பார்த்தது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழர், தமிழர் கலாச்சாரம் தமிழின் சிறப்பு இந்தியாவிற்கு சிறப்பானது அதனை கொண்டாட வந்திருக்கிறேன்.

தமிழ்மொழியை, தமிழ் கலாச்சாரத்தை பாதுகாத்து வருபவர்களுக்கு எனது நன்றி. தமிழக மக்களோடு முன்னிற்க வேண்டியது எனது கடமை. நான் அவனியாபுரத்துக்கு, தமிழர்களின் கலாச்சாரம் உணர்ச்சிகளை நேசிக்க வந்துள்ளேன்.
அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள் என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

Entertainment News

Popular Categories