தமிழக மக்களோடு இருக்கிறேன்; அது என் கடமை: ராகுல் பேச்சு!

rahul-and-udayanidhi
rahul-and-udayanidhi

மதுரை அவனியாபுரம் ஜல்லிகட்டு போட்டியை நேரில் கண்டு மகிழ்ந்தார் காங்கிரஸ் தலைவர் ராகுல். அப்போது அவர், தமிழக மக்களோடு இருக்க வேண்டியது எனது கடமை நான் தமிழக மக்களோடு இருக்கிறேன் என்றார்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் இன்று ஜல்லிகட்டு போட்டி நடைபெற்றது. இந்த ஜல்லிகட்டுப் போட்டியை காண்பதற்காக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் தனி விமானம் மூலமாக அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் பகுதிக்கு வந்து போட்டியை ஆர்வமுடன் கண்டு மகிழ்ந்தார்.

இதை அடுத்து போட்டியில் சிறப்பாக காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கு தங்க நாணயங்களை வழங்கினார். இதனிடையே ராகுல் வந்த போது, ஜல்லிக்கட்டுப் போட்டியைத் தடை செய்து தமிழர்களுக்கு துரோகம் இழைத்துவிட்டு, இப்போது எந்த முகத்தை வைத்துக் கொண்டு மதுரைக்கு ஜல்லிக்கட்டு காண ராகுல் வருகிறார் என்று கோஷமிட்டு, இந்து முன்னணி மற்றும் பாஜக.,வைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களை காவல்துறையினர் அப்புறப்படுத்தினர்.

ராகுல் வருகையை அடுத்து காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். ராகுலுடன் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மற்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி , நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்தாகூர் ஆகியோரும் இருந்தனர்.

பின்னர் விழா மேடையில் பேசிய ராகுல், தமிழக பாரம்பரியம் மிகுந்த இந்த விழா ஏற்பாடுகளைப் பார்க்கும் போது மகிழ்ச்சி அளிக்கிறது. ஜல்லிக்கட்டுப் போட்டியை நேரில் பார்த்தது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழர், தமிழர் கலாச்சாரம் தமிழின் சிறப்பு இந்தியாவிற்கு சிறப்பானது அதனை கொண்டாட வந்திருக்கிறேன்.

தமிழ்மொழியை, தமிழ் கலாச்சாரத்தை பாதுகாத்து வருபவர்களுக்கு எனது நன்றி. தமிழக மக்களோடு முன்னிற்க வேண்டியது எனது கடமை. நான் அவனியாபுரத்துக்கு, தமிழர்களின் கலாச்சாரம் உணர்ச்சிகளை நேசிக்க வந்துள்ளேன்.
அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள் என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஏப்ரல் 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தாமரை வாக்குறுதிகள்’ என்ற பெயரில் பாஜக., தேர்தல் அறிக்கை வெளியீடு!

பாஜக.,வின் 27 வேட்பாளர்களைக் குறிக்கும் வகையில் 27 முக்கிய வாக்குறுதிகளைக் குறிப்பிட்டு தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் உள்ள முக்கிய வாக்குறுதிகள்:

பிரசாரத்தில் இருந்த திமுக., வேட்பாளர்; வீட்டில் 122 பவுன் நகை கொள்ளை!

தேர்தல் நேரத்தில் திமுக வேட்பாளர் வீட்டில் திருடு போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மடத்துப் பட்டியில் இன்று 13 ஏப்ரல்...

Topics

பஞ்சாங்கம் – ஏப்ரல் 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தாமரை வாக்குறுதிகள்’ என்ற பெயரில் பாஜக., தேர்தல் அறிக்கை வெளியீடு!

பாஜக.,வின் 27 வேட்பாளர்களைக் குறிக்கும் வகையில் 27 முக்கிய வாக்குறுதிகளைக் குறிப்பிட்டு தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் உள்ள முக்கிய வாக்குறுதிகள்:

பிரசாரத்தில் இருந்த திமுக., வேட்பாளர்; வீட்டில் 122 பவுன் நகை கொள்ளை!

தேர்தல் நேரத்தில் திமுக வேட்பாளர் வீட்டில் திருடு போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மடத்துப் பட்டியில் இன்று 13 ஏப்ரல்...

ரமாபாய், சவிதா அம்பேத்கர்: இந்திய வரலாற்றில் மறைந்த உருவங்கள்!

ரமாபாயின் வாழ்க்கை வறுமை மற்றும் தனிமை படுத்தப்பட்டதான சூழ்நிலையில் இருந்தது. 1898 இல் மகாராஷ்டிராவில் ஒரு கடலோர கிராமத்தில் அவர் பிறந்தார்

ஆப்கன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கும் சீனா!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK), ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் சீனா புதிய மாவட்டத்தை அமைக்கிறது; இது இந்தியாவிற்கு கவலை அளிக்கும் அம்சம்.

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது: நிர்மலா சீதாராமன்

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது. மத்திய அரசு ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நல்கும்போது, திமுக அதைத் தேர்தல் அரசியலுக்காகச் சுரண்டப் பார்க்கிறது.

Entertainment News

Popular Categories