January 18, 2025, 4:52 AM
24.9 C
Chennai

அடக்குமுறைக்கு அடிபணிய மாட்டேன்: முதல் ப்ரஸ்மீட்டிலே அதிரடி காட்டிய சசிகலா!

sasikala
sasikala

4 ஆண்டுகால பெங்களூரு சிறைவாசத்துக்கு பின் செய்தியாளர்களை முதல் முறையாக சந்தித்த போதே அதிமுக தலைமை அலுவலகம், ஜெ. நினைவிட விவகாரங்களில் அதிரடியாக கருத்து தெரிவித்திருப்பதன் மூலம் அரசியல் களத்தில் இனி எப்போதும் பரபரப்புதான் என்பதை வெளிப்படுத்தியிருக்கிறார் சசிகலா.

வாணியம்பாடி டோல்கேட்டில் செய்தியாளர்களை சந்தித்தார். 4 ஆண்டு சிறைவாசத்துக்குப் பின்னர் சசிகலா நடத்திய முதல் பிரஸ் மீட்.

எடுத்த எடுப்பிலேயே கழகம் எத்தனையோ முறை சோதனைகளை சந்தித்திருக்கிறது; பீனிக்ஸ் பறவை போல அதிமுக மீண்டு வந்திருக்கிறது. புரட்சித் தலைவி வழி வந்த ஒரு தாய் பிள்ளைகள் ஒற்றுமையோடு இணைந்து செயல்படுவதே என் விருப்பம் என அதிரடி காட்டினார். மேலும் தொண்டர்களுக்கும், தமிழக மக்களுக்கும் நான் அடிமை; அடக்குமுறைக்கு நான் என்றும் அடிபணியமாட்டேன் என்றும் பொடி வைத்து பேசினார் சசிகலா.

sasikala1
sasikala1

இதன்பின்னர் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கும் பதிலளித்தார் சசிகலா. அதிமுக தலைமை அலுவலகத்துக்கு செல்வீர்களா? என்ற கேள்விக்கு பொறுத்திருந்து பாருங்கள் என பகிரங்கமாக அறிவித்தார். அதேபோல் ஜெயலலிதா நினைவிடம் மூடப்பட்டது குறித்த கேள்விக்கு எதற்காக இதை செய்தார்கள்? என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள் என்றார். மேலும் தொடர்ந்து தீவிர அரசியலில் ஈடுபடுவேன் என்றும் சசிகலா கூறியிருக்கிறார்.

சசிகலாவின் பிரஸ் மீட்டை வைத்து பார்த்தால் அதிமுகவை கைப்பற்றும் அதிரடிகளை சசிகலா மேற்கொள்வார் என்றே தெரிகிறது. அதிமுக தலைமை அலுவலகத்துக்கு அதிரடியாக செல்லவும் வாய்ப்பிருக்கிறது என்பதும் அவரது பேட்டியில் தெரிகிறது.

ALSO READ:  யுஜிசி விவகாரம்; நீதிமன்றம் செல்வதே சரி என்கிறார் பிரேமலதா விஜயகாந்த்!

4 ஆண்டு சிறைவாசத்தால் சசிகலா எந்த பாதிப்புக்கும் உள்ளாகாமல் அதே அதிமுக பொதுச்செயலாளர் கோதாவுடன் தமிழகம் திரும்பியிருக்கிறார் என்பதைத்தான் வாணியம்பாடி பிரஸ் மீட் காட்டுகிறது.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜன.18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

செகந்திராபாத் – கொல்லம் ரயில் மேலும் ஒரு சேவை நீட்டிப்பு!

முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. விரைவில் உங்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யவும். தென்காசி, விருதுநகர் மாவட்ட பயணிகளுக்கு இந்த சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

ஹிந்துத்துவமே ஒரே தீர்வு!

ரஷ்யாவில் 15 தனி அடையாளங்கள், 15 தனி நாடுகளாக உருவாகின. ஆனால் இங்கோ வாய்ப்பு கிடைத்த போதிலும் 565 சமஸ்தானங்களும் ஒரே நாடாக ஆகின.

ஆன்மீகம் – வாழ்வின் நோக்கம்

வாழ்க்கையின் நோக்கம் என்ன ? இது மகத்தான கேள்வி. நீங்கள் விழிப்புணர்வுடனோ அல்லது தெரியாமலோ இதை கேட்டிருக்கலாம். நம் அனுபவத்தின் அடித்தளமாக இந்த கேள்வி உள்ளது.

பஞ்சாங்கம் ஜன.17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை