கோயில்களில் பங்குனி பொங்கல் விழாக்களுக்கு தடை! பக்தர்கள் கடும் அதிர்ச்சி!

rajapalayam-pooja
rajapalayam-pooja

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதிகளில் உள்ள கோவில்களில் பங்குனிப் பொங்கல் திருவிழாக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களும், பக்தர்களும் கடும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

ராஜபாளையம் பகுதியில் ஆண்டு தோறும் சித்திரை வெண்குடை திருவிழா, பெரிய மாரியம்மன் கோவில் பொங்கல் விழா, திரௌபதி அம்மன் கோவில் பொங்கல் விழா, ராஜூக்கள் சமுதாயத்தினரின் சித்திரை திருவிழா என நான்கு திருவிழாக்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.

கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, திருவிழாக்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. இந்த ஆண்டு திருவிழாக்கள் நல்லமுறையில் நடைபெறும் என்று, எல்லோரும் எதிர்பார்த்திருந்த நேரத்தில் மீண்டும் கொரோனா பரவல் வேகமெடுத்திருப்பதன் காரணமாக, திருவிழாக்கள் நடத்துவதற்கு அரசு தடை விதித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் இந்த ஆண்டும் திருவிழாக்கள் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

திருவிழாக்கள் நடத்துவது குறித்து சிவகாசி சார் ஆட்சியர் தினேஷ்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பங்குனிப் பொங்கல் திருவிழாவிற்கான ஏற்பாடுகள் பல இடங்களில் நடந்து வருகிறது. கொரோனா பரவல் காரணமாக, கோவில்களில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் கூடுவதற்கு அனுமதி கிடையாது. விழாக்கள் கோவிலுக்குள் மட்டும் நடத்த வேண்டும். அதிகபட்சமாக 50 பேர் மட்டுமே கலந்து கொள்ளலாம்.
கோவிலைச்சுற்றி மக்கள் கூட்டமாக கூடுவதற்கும், சாமி ஊர்வலங்கள் நடத்துவதற்கும், பொங்கல் வைப்பதற்கும், அக்னிசட்டி ஊர்வலங்கள் நடத்துவதற்கும், தேரோட்டம் நடத்துவதற்கும் அனுமதி கிடையாது. மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். திருவிழாக்களுக்கு அரசு தடை அறிவித்திருப்பது பொதுமக்களிடம் கடும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories