December 5, 2025, 9:27 PM
26.6 C
Chennai

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் 11 பேர் உயிரிழப்பு: ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமா?!

chengalpet gh
chengalpet gh

செங்கல்பட்டு மருத்துவமனையில் ஒரே நாளில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக அடுத்தடுத்து உயிரிழப்பு நிகழ்ந்ததாக பரவிய செய்தி பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக கொரோனா பரவல் அதிகரித்துவரும் மாவட்டம், செங்கல்பட்டு. சென்னைக்கு அடுத்து இருப்பதாலும், சென்னை புறநகர்ப் பகுதிகள் செங்கல்பட்டு மாவட்டத்தில் இருப்பதாலும், இங்கே மக்கள் நெருக்கம் அதிகம் என்பதும் காரணம்.

நாளொன்றுக்கு சுமார்1,500 பேர் என்ற அளவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். செங்கல்பட்டு மருத்துவமனையில் மட்டும் கொரோனா நோயாளிகள் சுமார் 500 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் நேற்றிரவு 10க்கும் மேற்பட்ட நோயாளிகள் திடீரென உயிரிழந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளதாக உறவினர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். உயிரிழந்தவர்களில் கொரோனா நோயாளிகள் யாரேனும் உள்ளார்களா என்பது குறித்த தகவல் எதுவும் கிடைக்கப் பெறவில்லை.

இருப்பினும், செங்கல்பட்டு மருத்துவனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை இருப்பதாகவும் அதனாலேயே தனது தந்தை உயிரிழந்து விட்டதாகவும் ஒருவர் கூறினார்.

இதை அடுத்து, தகவலறிந்து உடனடியாக மருத்துவமனைக்கு வந்த மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ், நோயாளிகள் உயிரிழந்ததாக கூறப்படுவது குறித்து விசாரித்து வருவதாகக் கூறினார். மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை எதுவும் இல்லை என்று அவர் தெளிவுபடுத்தினார்.

மேலும், “ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் யாரும் உயிரிழக்கவில்லை; ஆக்சிஜன் விநியோகத்தில் இருந்த கோளாறு சரி செய்யப்பட்டது. உயிரிழந்த 11 பேரில் ஒருவர் மட்டுமே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர் என்று, செங்கல்பட்டு ஆட்சியர் ஜான் லூயிஸ் விளக்கம் அளித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories