தமிழகத்தில் மதுக் கடைகளை திறக்க முடிவு?!

tasmac3
tasmac3

கொரோனா காலத்தில் மிகுந்த நிதி நெருக்கடியில் தமிழக அரசு சிக்கித் தவிக்கும் நிலையில், மதுவின் விலையை உயர்த்தி புதுச்சேரியைப் போல தமிழகத்தில் குறைந்த நேரத்தில் தினமும் மதுக் கடைகளை திறக்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி காலை 6-00 மணி முதல் காலை 10-00 வரை மட்டுமே கடைகள் திறந்து இருக்கும் என்றும், இதற்கான அறிவிப்பு விரைவில் வரும் எனவும் தகவல் கசிந்துள்ளது.

தமிழ்மாநிலத்தில் புதிதாகப் பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக., அரசு, கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் இரு வாரங்களுக்கு முழு ஊரடங்கை அறிவித்தது. மேலும், ஊரடங்கு காலத்தில் மதுக்கடைகள் மூடப் படும் என்றும் அரசு அறிவித்தது.

புதிதாக பொறுப்பேற்ற ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு செயல்படுத்தப்படும் என்று அறிவித்தது. இது அதிவேகத்தை அடைந்துள்ள கொரோனா பரவல் சங்கிலியை துண்டிக்க உதவியாக இருக்கும் என்று கருதப் பட்டது. இதன் ஒரு பகுதியாக, மதுக்கடைகள் மூலம் கொரோனா பரவுவதை கட்டுப் படுத்தும் விதமாக, ஊரடங்கு காலமான 14 நாட்களும் மதுக்கடைகள் அடைக்கப் படும் என்று அறிவிக்கப் பட்டது.

இந்த நிலையில், மது வகைகளை முன்னதாகவே மது குடிப்பவர்கள், கள்ள வியாபாரம் செய்பவர்கள் அதிக அளவில் வாங்கிக் குவித்தனர். இதனால் அந்த இரு நாட்களும் மது விற்பனை அதிகமாக இருந்தது.

மேலும், தமிழகத்தில் மதுக்கடைகள் அடைக்கப் பட்ட நிலையில், அண்டை மாநில எல்லைகளில் வசிப்பவர்கள் அதிக அளவில் அண்டை மாநிலங்களுக்குச் சென்று மதுவகைகளை காத்திருந்து வாங்கி வந்தனர். ஆந்திர மாநிலத்தில் பொது முடக்கம் அமலில் இருந்தாலும், மதுக்கடைகள் காலை முதல் 12 மணி வரை திறந்திருக்கும் என்று அறிவிக்கப் பட்டது. இதனால் திருத்தணி அருகே வசிப்பவர்கள் ஆந்திர மாநிலத்தில் பங்களாமேடு உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று மது வாங்கி வந்தனர். அதே போல் கர்நாடக எல்லையிலும் தமிழ் மாநிலத்தில் இருந்து பெருமளவில் சென்று மது வாங்கி வந்தனர்.

இந்நிலையில் தமிழ் மாநிலத்திலேயே டாஸ்மாக் கடைகளைத் திறந்து குறுகிய நேரம் விற்பனையை மேற்கொள்ள அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் கசிந்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories