December 5, 2025, 2:06 PM
26.9 C
Chennai

தமிழகத்தில் மதுக் கடைகளை திறக்க முடிவு?!

tasmac3
tasmac3

கொரோனா காலத்தில் மிகுந்த நிதி நெருக்கடியில் தமிழக அரசு சிக்கித் தவிக்கும் நிலையில், மதுவின் விலையை உயர்த்தி புதுச்சேரியைப் போல தமிழகத்தில் குறைந்த நேரத்தில் தினமும் மதுக் கடைகளை திறக்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி காலை 6-00 மணி முதல் காலை 10-00 வரை மட்டுமே கடைகள் திறந்து இருக்கும் என்றும், இதற்கான அறிவிப்பு விரைவில் வரும் எனவும் தகவல் கசிந்துள்ளது.

தமிழ்மாநிலத்தில் புதிதாகப் பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக., அரசு, கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் இரு வாரங்களுக்கு முழு ஊரடங்கை அறிவித்தது. மேலும், ஊரடங்கு காலத்தில் மதுக்கடைகள் மூடப் படும் என்றும் அரசு அறிவித்தது.

புதிதாக பொறுப்பேற்ற ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு செயல்படுத்தப்படும் என்று அறிவித்தது. இது அதிவேகத்தை அடைந்துள்ள கொரோனா பரவல் சங்கிலியை துண்டிக்க உதவியாக இருக்கும் என்று கருதப் பட்டது. இதன் ஒரு பகுதியாக, மதுக்கடைகள் மூலம் கொரோனா பரவுவதை கட்டுப் படுத்தும் விதமாக, ஊரடங்கு காலமான 14 நாட்களும் மதுக்கடைகள் அடைக்கப் படும் என்று அறிவிக்கப் பட்டது.

இந்த நிலையில், மது வகைகளை முன்னதாகவே மது குடிப்பவர்கள், கள்ள வியாபாரம் செய்பவர்கள் அதிக அளவில் வாங்கிக் குவித்தனர். இதனால் அந்த இரு நாட்களும் மது விற்பனை அதிகமாக இருந்தது.

மேலும், தமிழகத்தில் மதுக்கடைகள் அடைக்கப் பட்ட நிலையில், அண்டை மாநில எல்லைகளில் வசிப்பவர்கள் அதிக அளவில் அண்டை மாநிலங்களுக்குச் சென்று மதுவகைகளை காத்திருந்து வாங்கி வந்தனர். ஆந்திர மாநிலத்தில் பொது முடக்கம் அமலில் இருந்தாலும், மதுக்கடைகள் காலை முதல் 12 மணி வரை திறந்திருக்கும் என்று அறிவிக்கப் பட்டது. இதனால் திருத்தணி அருகே வசிப்பவர்கள் ஆந்திர மாநிலத்தில் பங்களாமேடு உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று மது வாங்கி வந்தனர். அதே போல் கர்நாடக எல்லையிலும் தமிழ் மாநிலத்தில் இருந்து பெருமளவில் சென்று மது வாங்கி வந்தனர்.

இந்நிலையில் தமிழ் மாநிலத்திலேயே டாஸ்மாக் கடைகளைத் திறந்து குறுகிய நேரம் விற்பனையை மேற்கொள்ள அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் கசிந்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories