ஊரடங்கின் இறுக்கமும் தளர்வும்! பிள்ளைகள் என்ன செய்வார்கள்?!

james-9th-std
james-9th-std

இறுக்கமும் தளர்வும் இரு இயல்பு நிலைகள் ! ”வெயிலின் அருமை நிழலில் தெரியும்” என்ற பழமொழி நமக்குப் பரிச்சயமானது. அது போலவே, இறுக்கத்தின் அருமை தளர்வில் தெரியும் ! சில சமயங்களில், தளர்வின் அருமை, பெருமையும் நம் இறக்கத்தில் தெரியலாம்.

வலைதளங்களில், நேற்று ஒரு கேலிக் குறுஞ்செய்தி உலா வந்து கொண்டிருந்தது !

“முன்னெல்லாம் கொரோனா வந்தால்…. வீட்டுக்கே வந்து ஆம்புலன்ஸ் வச்சு அழைச்சுக்கிட்டுப் போவாங்க ! மூணு வேளை சாப்பாடு போட்டு, உடல் சீரானதும், கை தட்டி, பிஸ்கேட், பழம் எல்லாம் கொடுத்து, பிரியாவிடை கொடுத்து, அவங்களே வண்டியிலே கொண்டு வந்து விடுவாங்க …. ஹூம்ம்ம்… அது ஒரு கனாக் காலம் !” – இது தான் அந்த செய்தி !

கடந்த ஆண்டு வந்த கொரோனா தாக்க நிகழ்வுகளுக்கே இப்படி ஒரு செய்தி என்றால், காலங்காலமாய் பள்ளி கல்லூரிகளுக்குச் சென்று கொண்டிருந்த மாணவர்களுக்கு “அவர்களின் கனாக் காலங்களை “ நினைத்து எத்தனை ஆதங்கம் இருக்கும் !

பள்ளிக்குத் தினமும் சென்று வந்த காலத்தில்….
இறுக்கமாக இருந்திருக்கும் ! ஒரு நாள் விடுமுறை கிடைக்காதா ! சற்று “ஃப்ரீயாக” தளர்வாக இருக்க மாட்டோமா என மனம் ஏங்கித் தவிக்கும் !

school-1
school-1

பள்ளி வளாகங்களில், ஒரு பாடவேளை முடிந்து அடுத்த பாடவேளைத் தொடக்கத்தில், சற்று தளர்வான சூழ்நிலை இருக்கும் ! பிள்ளைகளின் சிறு சிறு பேச்சுகள், இரைச்சல் வடிவில் வரும். சிறு இடைவேளை, மதிய உணவு இடைவேளை என்றால், பேரிரைச்சலாக இருக்கும்!

பாடவேளைகள் ஆரம்பித்தவுடன், மெல்ல மெல்ல ஆரவாரம் அடங்கும் ! அதுவும் சில பாட ஆசிரியர்களின் கண்டிப்பான குரலும் தோற்றமும், மாணவர்களுக்கு ஒரு இறுக்கத்தை ஏற்படுத்தும் ! அந்த வகுப்புகளில் சலனமற்ற நிலை விரைவாக வரும் ! அந்த பாடவேளை முடியும் போது தளர்வும், சலனமும், கூச்சலும் சற்று அதிகமாகவே இருக்கும்!

இறுக்கமான சூழலில் தொடர்ந்து இருக்கும் போது, சில மாணவர்கள் சுழலுக்கு ஏற்ப மாறி, வகுப்பில் கவனம் செலுத்துவர். சில மாணவர்களோ மன அழுத்தம் அடைவார்கள்.

வகுப்பறைகளில் இறுக்கமும் தளர்வும் ஆசிரியர்களின் அணுகுமுறை, மாணவர்களின் மனநிலை,பாடங்களின் சுமை பொறுத்து மாறுகிறது !

உடற்பயிற்சி வகுப்பு அல்லது கலைத்திறன் வகுப்புகள் பெரும்பாலான மாணவர்களுக்கு பிடிக்கும் ! அத்தகைய வகுப்புகளில், தளர்வும் இருக்கும், அமைதியான போக்கும் இருக்கும்!

எப்போதும் அடக்கி வைத்து, இறுக்கமான சூழலில் பிள்ளைகளை வைப்பது மனோரீதியான பிரச்சனைகளை உருவாக்கும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை !

அதே சமயம், தளர்வான சூழல்களை ஏற்படுத்தும் போதும், திட்டமிடுதலும்,கண்காணிப்பும், அதித விளைவுகளை எதிர்கொள்ள தேவையான கண்ணோட்டமும் தேவை ! இல்லையென்றால், நம் முயற்சிகள் அனைத்தும் வியர்த்தமாகி விடும் !

பள்ளிகளில்,மதிய உணவு இடைவேளையில், முதல் ஐந்து நிமிடங்களும், கடைசி பத்து நிமிடங்களும், முதல்வரும், சில ஆசிரியர்களும் வளாகத்தைச் சுற்றி சுற்றி வருவார்கள் ! இடையில் கொஞ்ச நேரம் மாணவர்கள் உணவு உண்ணும் போது அவர்கள் கூட தளர்வாக இருக்கலாம் !

முன்பு, விடுமுறை கிடைத்தால், இறுக்கம் தணிந்து பள்ளிக்குப் போகவேண்டாமே என்ற தளர்வான உணர்வுடன் வீட்டில் இருக்கும் பிள்ளைகளுக்கு இன்று வீட்டில் இருப்பதே மன இறுக்கத்தை ஏற்படுத்துகிறது ! பள்ளிக்குச் செல்லும் வண்ணம் தளர்வுகள் வருமா என ஏங்கித் தவிக்கிறார்கள் !

மாணவர்கள் மட்டுமல்ல ! எல்லோருக்குமே இறுக்கமான சூழ்நிலை தான் இன்று ! சொந்த ஊருக்குப் போவது என்பது அநேகம் பேருக்கு மனநிறைவான அணுபவமாக இருந்தது போக, தளர்வுகளை அனுசரித்து, இறுக்கமான சூழலில் பயணப்பட வேண்டி இருக்கிறது !

மன இறுக்கத்தில் இருந்து விடுபட, தியானம், சிறு உடற்பயிற்சிகள், இறை வழிபாடு, வீட்டு வேலைகளை அனைவரும் செய்தல் என்பதைத் திட்டமிட்டு, பிள்ளைகளுக்கும் அதில் பங்கேற்க வைக்கலாம் !

இறுக்கத்தில் இருந்து விடுபடுவோம்  என்ற நம்பிக்கையை அறிவுரைகள் மூலமாக அல்லாமல் செயல்கள் மூலமாக கோடிட்டுக் காட்டுவோம் !

கட்டுரை: கமலா முரளி

1 COMMENT

  1. முனைவர் கு வை பாலசுப்பிரமணியன் முனைவர் கு வை பாலசுப்பிரமணியன்

    அருமை ஸ்கோதரி. பள்ளி ஆசிரியர் என்பதால் பள்ளியில் மாணவர்களின் மன நிலையை நன்கு புரிந்து வைத்துள்ளீர்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories