லாட்டரி விற்பனை மீதான தடை நீக்கம்?

lottory
lottory

லாட்டரி விற்பனை மீதான தடை நீக்கம்?

நிதி நிலையை காரணம் காட்டி தமிழ்நாட்டில் மீண்டும் லாட்டரி விற்பனைக்கு அனுமதி தர திமுக அரசு தீர்மானித்துள்ளதாக தெரிகிறது. இதுதொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் மருமகன் சபரீசனுடன் பேச்சுவார்த்தை நடந்துள்ளதாக சித்தரஞ்சன் சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

18 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாட்டில் லாட்டரி விற்பனை கொடிகட்டிப் பறந்தது. இதனால் குறிப்பிட்ட சிலருக்கும், அரசுக்கும் பெரும் வருவாய் கிடைத்து வந்தது. அதேநேரம், என்றாவது ஒருநாள் லட்சாதிபதி ஆகிவிடுவோம் என்ற நம்பிக்கையில், தினக்கூலி பணியாளர்களும், ஏழை எளியோரும் லாட்டரி சீட்டுக்கு அடிமையாகவே இருந்தனர்.

சம்பாதிக்கும் பணத்தில் பெரும்பகுதியை லாட்டரி வாங்கவே செலவழித்ததால், அவர்களது குடும்பங்கள் நடுத்தெருவில் நின்றன. இதில் மதுபோதைக்கு அடிமையான பலர், லாட்டரி சீட்டுக்கும் அடிமையாகிக் கிடந்தனர்.

இதைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டில் 2003 ஜனவரியில்,
அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா லாட்டரி விற்பனைக்கு தடை விதித்தார். ஆன்லைன் லாட்டரியும் தடைசெய்யப்பட்டது.

இதன் மூலம் ஏற்பட்ட வருவாய் இழப்பானது, 2001-ல் முற்றிலும் அரசுடையாக்கப்பட்ட மதுக்கடைகள் மூலம் ஈடுகட்டப்பட்டது.
ஆனாலும், லாட்டரி சீட்டுகள் தடையை மீறி ஆங்காங்கே விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

ALSO READ:  பாஜக.,விலிருந்து விலகி, பழைய இயக்கத்தை புதுப்பித்தார் அண்ணாமலை!

இந்நிலையில்,திமுக நிர்வாகிகளால் நிழல் முதலமைச்சர் என்று அழைக்கப்படும் முதலமைச்சர் ஸ்டாலின் மருமகன் சபரீசனை பிரபல லாட்டரி அதிபர் கோவை மார்ட்டின், காங்கிரஸ் முன்னாள் எம்.பி,ஜே.எம்.ஹாரூண் ஆகியோர் தரப்பு சந்தித்துள்ளது.

மார்ட்டின் மருமகன் ஆதவ் அர்ஜுனா இதற்கான ஏற்பாட்டை செய்ததாக தெரிகிறது. அப்போது, அரசின் வருவாயைப் பெருக்க,லாட்டரி விற்பனை மீதான தடையை நீக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. குறைவின்றி சம்பிரதாயங்களை செய்யவும் தயார் என அவர்கள் கூறியபிறகு, உதயநிதியுடன் கலந்து பேசிவிட்டு, முதலமைச்சர் மூலம் அறிவிப்பை வெளியிட வைப்பதாக சபரீசன் உறுதியளித்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோவை மார்ட்டினும், ஜே.எம். ஹாரூனும் திமுக–வுக்கு மிகவும் நெருக்கமானவர்களாவே அறியப்படுபவர்கள் என்பதால்,விரைவில் தமிழ்நாட்டில் லாட்டரி விற்பனைக்கு அனுமதி வழங்கப்படலாம். டாஸ்மாக் மதுக்கடைகளை படிப்படியாக குறைக்க இருப்பதாலும், கொரோனா பேரிடர் காரணமாக தமிழ்நாட்டின் நிதி நிலையை கடும் சரிவை சந்தித்துள்ளதாலும், நிதி வருவாய்க்காக, லாட்டரி விற்பனையை முறைப்படுத்தி அனுமதிப்பதாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்படலாம்!

மேலும், அண்டை மாநிலமான கேரளாவில் இன்னமும் லாட்டரி விற்பனை படுஜோராக நடந்து வருவதையும், லாட்டரி விற்பனையை அனுமதித்தால் அரசுக்கு ஆண்டொன்றுக்கு தோராயமாக ஏழாயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என்பதையும் அரசு விளக்கக் கூடும். இதனால், சிக்கிம், நாகாலாந்து, அருணாச்சலப் பிரதேசம், மேகலயா மாநில லாட்டரிகள் மீண்டும் தமிழ்நாட்டுக்குள் விரைவில் வலது காலடி எடுத்து வைக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

ALSO READ:  செங்கோட்டை - பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

இதனிடையே, லாட்டரிச் சீட்டை மீண்டும் தமிழகத்தில் அனுமதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி., கார்த்தி சிதம்பரம் குரல் கொடுத்தார். அது விமர்சனத்துக்கு உள்ளானது. அதுகுறித்து விளக்கம் அளித்த கார்த்தி சிதம்பரம், லாட்டரி சீட்டை எதற்காக கொண்டு வர வேண்டும் என்று நான் சொன்னதன் நோக்கத்தை யாரும் சரியாக புரிந்து கொள்ளவில்லை என்று கூறினார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் ப. சிதம்பரம், ஏழைகளுக்கு தரமான சுகாதாரம், ஏழை மாணவர்களுக்கு இலவச கல்லுாரி மேற்படிப்பு வேண்டும் என்பதற்காக, லாட்டரி சீட்டை கொண்டு வரலாம் என்று தான் கூறிய யோசனை விவாதப் பொருளாக மாறி இருப்பது வேதனைகுரியது!

லாட்டரி சீட்டின் மூலம் வரும் வருமானத்தை வைத்து, தரமான மருத்துவம், கல்லூரி மாணவர்களுக்கான இலவச மேற்படிப்பு ஆகியவற்றை கொடுக்க முடியும் என்றும், இதனை தவிர,
லாட்டரி சீட்டு இல்லாமல், வேறு சிறப்பான வகையில் வருமானம் வந்தாலும், ஏழை மக்களுக்கு தரமான மருத்துவம்,
மாணவர்களுக்கு இலவச மேற்படிப்பு இரண்டையும் கொடுக்க முடிந்தால், அதனை தான் வரவேற்பதாகவும் கூறினார்!

ALSO READ:  மெட்ரோ அரசியல்!

தற்போது, லாட்டரிச் சீட்டு அனுமதிப்பது தொடர்பான விவாதமும் சமூகத் தளங்களில் களை கட்டியிருக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 11 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 11 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

சாதனை நாயகர் பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர்கள், முக்கிய தலைவர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து  வருகின்றனர்.

பஞ்சாங்கம் – ஜூன் 10 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 9 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories