ட்யூப் மூலம் தண்ணீர் குடிக்கும் யானை! வைரல்!

Published:

elephant
elephant

தண்ணீர் தாகத்துடன் உள்ள யானை ஒன்று துதிக்கையால் ட்யூப் எடுத்து மனிதர்களை போலவே தண்ணீர் குடிக்கும் காட்சி தற்போது இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

விலங்குகளை கண்காணிக்க பல அமைப்புகள் உள்ளன. இதில் குறிப்பாக Sheldrick Wildlife என்ற அமைப்பு விலங்குகளை கண்காணித்து வருகிறது.

அந்த அமைப்பு விலங்குகளை கண்காணித்து மட்டும் இல்லாமல், சில விலங்குகள் செய்யும் நிகழச்சிகளை வீடியோ எடுத்து ட்விட்டரில் ஷேர் செய்யுதும் வருகிறது. அந்தவகையில் யானை ஒன்று ஓஸ் மூலம் தண்ணீர் குடிக்கும் காட்சியை ஷேர் செய்துள்ளது.

இந்த அமைப்பு சமீபத்தில் தனித்து விடப்பட்ட யானை ஒற்றை கண்காணித்து அதற்கு தேவையானவைகளை செய்து கொடுக்கும் வகையில் தண்ணீர் குடிப்பதற்கு ஓஸ் ஒன்றை அமைத்து கொடுத்துள்ளது.

பொதுவாக யானைகள் தண்ணீரை தன் துதிக்கையில் நிரப்பி பின்னர் அதை வாயில் வைத்து குடிக்கும். இந்த நிகழ்ச்சியை தான் நாம் அடிக்கடி பார்ததுண்டு. ஆனால் இந்த யானை மனிதர்கள் கையில் தண்ணீர்குழாயை எடுத்து தண்ணீர் குடிப்பது போல், இந்த யானை அதன் தும்பிக்கையில் ட்யூப்பை எடுத்து அழகாய் தண்ணீர் குடிக்கும் காட்சி ஒன்று இணையத்தளத்தில் செம வைரலாகி வருகிறது.

ALSO READ:  ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

Related articles

Recent articles

spot_img