தினமும் 40 கொரோனா நோயாளிகளுக்கு உணவு! சர்வீஸில் அசத்தும் குடும்பம்!

corona service
corona service

கொரோனா தொற்று கடந்த ஆண்டு பரவ தொடங்கிய நிலையில், இன்று வரை இதன் பாதிப்பு இருந்து வருகிறது. இந்த தொற்றினால் பலர் தங்களின் உறவினர்களை இழந்துள்ள நிலையில், பலர் தங்களின் வாழ்வாதாரத்தையும் இழந்து, பசியில் தவித்து வருகின்றனர்.

பசி தாங்க முடியாமல் இறந்தவர்களின் எண்ணிகையும் அதிகரித்து கொண்டு தான் உள்ளது. இந்த சூழலில் பலர் தங்களால் முடிந்த உதவிகளை பலருக்கு செய்து வருகின்றனர். இன்னும் சிலரோ மிகவும் சவாலான காரியங்களைச் செய்து வருகிறார்கள்.

திருவாரூரைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர், சொந்த செலவில் தங்களது வீட்டிலேயே மூன்று வேளை, 40 கொரோனா நோயாளிகளுக்குச் சத்தான உணவு வகைகளைச் சமைத்து, அவர்களது வீட்டிற்கே சென்று வழங்குவது நெகிழ வைக்கிறது.

corona service 2
corona service 2

திருவாரூர் தியாகராஜ நகரில் வசிக்கும் சீனிவாசன் – புவனேஸ்வரி, சூரியநாராயணன் – ஸ்ரீவித்யா சகோதர தம்பதிகள், தங்களது வீட்டிலேயே ஊட்டச்சத்துமிக்க உணவுகளைச் சமைத்து, தினமும் 40 கொரோனா நோயாளிகளுக்கு மூன்று வேளை வழங்கி வருகிறார்கள்.

காலையில் வழக்கமான உணவு வகைகளோடு சிறுதானிய தோசை, பயிறு தோசை, துளசி, இஞ்சி, மிளகு, மஞ்சள், கிராம்பு கலந்து செய்யப்பட்ட கசாயம் வழங்குகிறார்கள். மதியம் சாதம், சாம்பார், ரசம், கூட்டு, வறுவலோடு பருப்பு உசிலி, காய்கறி சாலட், வேப்பம்பூ ரசம், பச்சைப்பயறு சுண்டல், கொண்டைக்கடலை சுண்டல், சிவப்பு அவல் வழங்குகிறார்கள். இரவு உணவாக இட்லி, பொங்கல், சிறுதானிய தோசையோடு பனங்கற்கண்டு, மஞ்சள், மிளகு கலந்த பால் வழங்குகிறார்கள்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

வீட்டுச் சாப்பாடாக இருந்தால்தான் உடலுக்கு மேலும் ஆரோக்கியமாக இருக்கும் என்பதால் இவற்றை முழுக்க முழுக்க தங்களது வீட்டிலேயே தயார் செய்கிறார்கள்.

இது குறித்து பேசிய சூரியநாராயணன் “என் அண்ணி புவனேஸ்வரியும், என் மனைவி ஸ்ரீவித்யாவும் சேர்ந்து மிகவும் நேசிப்போடு, தங்களோட கைப்பக்குவத்துல இந்த உணவுகளைத் தயார் செய்றாங்க.

கொரோனா நோயாளிகள் குறைந்தபட்சம் 15 நாள்களுக்காவது சத்தான உணவுகள் சாப்பிடுறது ரொம்ப அவசியம். என் சகோதரி சவுமியா சைதன்யா ஹைதராபாத்துல நியூட்ஷிரியனிஸ்ட்டா இருக்கார்.

corona service1
corona service1

அவங்களோட ஆலோசனையின் படி தான் உணவு வகைகளை முடிவு பண்ணினோம். கொரோனா நோயாளிகள் எங்களை தொடர்புகொள்ளலாம்னு ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம்ல பதிவுகள் போட்டோம். நிறைய பேர் தொடர்புகொண்டாங்க.

தினமும் மூணு வேளையும், அவங்க வீட்டு வாசல்ல, காம்பவுண்ட்ல சாப்பாட்டை வச்சிட்டு, போன் பண்ணுவோம். வந்து எடுத்துக்குவாங்க. இதுல எதுவும் குறைகள் இருக்கா, சாப்பாட்டோட அளவு போதுமானு போன்ல கேட்டு மாற்றங்கள் செய்வோம். இதை எங்களோட சொந்தச் செலவுலதான் செய்றோம். இது எங்களுக்கு மிகப்பெரிய ஆத்ம திருப்தி” என்றார்.

ALSO READ:  திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

சாதனை நாயகர் பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர்கள், முக்கிய தலைவர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து  வருகின்றனர்.

பஞ்சாங்கம் – ஜூன் 10 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 9 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

இந்தியா – ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட்முனைவர் கு. வை. பாலசுப்பிரமணியன்இந்திய அணி முதல்...

முழுமையான நன்மைக்கு சனாதன தர்மம்!

அனைவரின் நன்மைக்காகவும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்காகவும் பாடுபடுபவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்துக்களே என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே ஒட்டுமொத்த நாடும் செழிப்படைந்து முழுமையான வளர்ச்சியை நோக்கி முன்னேற வேண்டுமானால்  ஆட்சி நிர்வாகம் சனாதன தர்மத்தின் அடிப்படையில் வழிநடத்தப்பட வேண்டும்.

Topics

சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

சாதனை நாயகர் பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர்கள், முக்கிய தலைவர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து  வருகின்றனர்.

பஞ்சாங்கம் – ஜூன் 10 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 9 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

இந்தியா – ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட்முனைவர் கு. வை. பாலசுப்பிரமணியன்இந்திய அணி முதல்...

முழுமையான நன்மைக்கு சனாதன தர்மம்!

அனைவரின் நன்மைக்காகவும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்காகவும் பாடுபடுபவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்துக்களே என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே ஒட்டுமொத்த நாடும் செழிப்படைந்து முழுமையான வளர்ச்சியை நோக்கி முன்னேற வேண்டுமானால்  ஆட்சி நிர்வாகம் சனாதன தர்மத்தின் அடிப்படையில் வழிநடத்தப்பட வேண்டும்.

பஞ்சாங்கம் ஜூன் 8 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலை இளந்தலைமுறையால் ஈர்க்கப்பட்டவர்; பாஜக.,வோ தலைமுறைகளாக பெருவளர்ச்சி கண்டது!

அண்ணாமலையால் இளைய தலைமுறையினர் பலர் ஈர்க்கப்பட்டார்கள் என்பது உண்மை, ஆனால் பல தலைமுறைகளாக சித்தாந்தத்தால் பெரு வளர்ச்சி கண்ட கட்சி பாரதீய ஜனதா என்பதை மறந்துவிடக் கூடாது.

வெல்டன் அமித்ஷா… வாழ்த்துகள் அண்ணாமலை!

மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி என்ற இந்திய தேசியத்தின் அடிப்படை. பாரதிய ஜனதா கட்சியில் அதை நடைமுறைப்படுத்துவதில் எழுந்த சிக்கலுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு இது.

Entertainment News

Popular Categories