3டி மாஸ்க்: புனே ஸ்டார்ட்அப் நிறுவனம் புதிய கண்டுபிடிப்பு!

mask
mask

புனேவைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனம் ஒன்று கொரோனா வைரஸை செயலிழக்க வைக்கும் முகக்கவசத்தைக் கண்டுபிடித்துள்ளது.

இந்த முகக்கவசத்தை, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அணியலாம். ஒவ்வொரு முறை பயன்படுத்திய பிறகு சுத்தம் செய்து பலமுறை உபயோகிக்கலாம். இது 3டி பிரிண்டிங் முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பலவித பெயரில் உலா வருகிறது. உருமாறிய கொரோனா வைரஸ் டெல்டா, டெல்டா பிளஸ் என உருமாறி மக்களை தாக்கி வருகிறது.

mask
mask

கொரோனா பரவாமல் தடுக்க இரண்டு மாஸ்க் அணிய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறி வருகின்றனர். மாஸ்க் இல்லாமல் இனி வெளியே நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

என்-95 வகை முகக்கவசங்களை அணிந்தால் மட்டுமே, ஓரளவேனும் வைரஸ், பாக்டீரியா தொற்றிலிருந்து தப்பிக்கலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

கொரோனா வைரஸ்களை முழுவதுமாக தடுக்கும் முகக்கவசங்கள் அணிந்தால் மட்டுமே கொரோனா பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம்.

கொரோனா தாக்காமல் தடுக்கும் வகையில் புனேவைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனமான Thincr Technologies கொரோனா வைரஸை செயலிழக்க வைக்கும் முகக்கவசத்தைக் கண்டுபிடித்துள்ளது. இது 3டி பிரிண்டிங் முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த மாஸ்க் மொத்தமாக மூன்று லேயர்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கிறது. முகக்கவசத்தின் வெளிப்புற லேயரில் நுண்ணியிரிகளைக் கொல்லும் திறன் கொண்ட சோடியம் ஓலெஃபின் சல்போனேட் என்ற ரசாயனம் பூசப்பட்டிருக்கும்.

இந்த ரசாயனம் அழகு சாதான பொருள்களைத் தயாரிக்க பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இது சோப் தயாரிக்கும் மூலக்கூறுகளைக் கொண்டது.

mask 1
mask 1

இந்த ரசாயனம் கொரோனா வைரஸ் முகக்கவசத்தில் ஒட்டிய உடன் அதனுடைய வெளிப்புற சவ்வை சீர்குலைக்கிறது. இதன் காரணமாக வைரஸ் செயலிழந்துவிடும்.

நடுவிலுள்ள லேயரானது, வெளிப்புற லேயரில் பூசப்பட்டிருக்கும் ரசாயனத்திலிருந்து முகக்கவசம் அணிவரைப் பாதுகாக்கும். அந்த ரசாயனம் அணிபவரின் தோலைப் பாதிக்கும் தன்மை கொண்டது.

முகத்துடன் நேரடி தொடர்புகொண்ட உள்புற அடுக்கு, 100 சதவிகிதம் பருத்தியால் உருவாக்கப்பட்டிருக்கும்.

இது சுவாசப்பதில் இருக்கும் சிரமங்களைப் போக்கும். இது சாதாரண வகை, என் 95 வகை முகக்கவசம் உள்ளிட்ட அனைத்து வகை முகக்கவசங்களும் உட்புற லேயரில் இடம்பெறச் செய்யலாம்.

இந்த முகக்கவசத்தை, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அணியலாம். ஒவ்வொரு முறை பயன்படுத்திய பிறகு சுத்தம் செய்து பலமுறை உபயோகிக்கலாம்.

Thincr Technologies நிறுவனம் வணிக அளவிலான உற்பத்தியைத் தொடங்கியுள்ளது.

மேலும் இந்தத் தயாரிப்பின் காப்புரிமைக்கும் விண்ணப்பித்திருக்கிறது. இந்த முகக்கவசத்தின் பயன்பாட்டுக்கு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் உள்ள தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம் இந்த திட்டத்திற்கு நிதியளித்தது.

இதுவரை, 6,000 முகக்கவசங்கள் தன்னார்வ தொண்டு நிறுவனத்தால் நந்தூர்பார், நாசிக் மற்றும் பெங்களூரு ஆகிய நான்கு அரசு மருத்துவமனைகளுக்கு சுகாதாரப் பணியாளர்களின் பயன்பாட்டிற்காகவும், பெங்களூருவில் உள்ள ஒரு பெண்கள் பள்ளி மற்றும் கல்லூரிக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்து.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

இன்று ஸ்ரீ ராம நவமி ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்…. ஜெய் ஸ்ரீ ராம்.

ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!

வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அசுரனான விபீஷணனையும் தம் சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீராமர். ஒரே வில். ஒரே சொல். ஒரே இல் என்பது ஸ்ரீராமனின் சிறப்பு!

பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைத் தவிர்க்க மத்திய அரசு வரி குறைப்பு!

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.10 குறைக்கப்பட்டுள்ளது. ஈரான் போர் தாக்கத்தால் விலை உயர்வை தவிர்க்கும் வகையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மார்ச் 27 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மார்ச் 26 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

இன்று ஸ்ரீ ராம நவமி ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்…. ஜெய் ஸ்ரீ ராம்.

ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!

வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அசுரனான விபீஷணனையும் தம் சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீராமர். ஒரே வில். ஒரே சொல். ஒரே இல் என்பது ஸ்ரீராமனின் சிறப்பு!

பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைத் தவிர்க்க மத்திய அரசு வரி குறைப்பு!

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.10 குறைக்கப்பட்டுள்ளது. ஈரான் போர் தாக்கத்தால் விலை உயர்வை தவிர்க்கும் வகையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மார்ச் 27 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மார்ச் 26 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

Entertainment News

Popular Categories