ஆதார் அட்டை வங்கியுடன் இணைந்திருப்பது ஆபத்தா..?

aadhar
aadhar

இந்தியக் குடிமக்கள் அனைவருக்கும் ஆதார் அட்டை என்பது முக்கிய அடையாள ஆவணமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. புதிய வங்கி கணக்கு திறப்பது முதல், புதிய சிம் கார்டு வாங்குவது வரை அனைத்திற்கும் ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இத்தகைய முக்கியமான ஆவணத்தை மக்கள் வங்கி கணக்குகளுடன் இணைப்பதனால், அவர்களின் வங்கிக் கணக்கிற்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்று சமூக வலைத்தளங்களில் சில செய்திகள் பரவி வருகிறது. இதற்கு தற்பொழுது ஆதார் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

இந்தியாவில் ஆதார் அட்டை என்பது மிக முக்கியமான ஆவணமாகத் திகழ்கிறது. வங்கி சேவைகள் உள்பட பல்வேறு தேவைகளுக்கு ஆதார் அட்டை விபரங்கள் அவசியமாக இருக்கிறது.

ஆதார் ஆணையத்தால் (UIDAI) விநியோகிக்கப்படும் 12 இலக்க எண் கொண்ட இந்த அட்டையின் விபரங்களை தற்பொழுது போது மக்கள் தங்களின் வங்கி கணக்கு, PAN கணக்கு போன்ற பிற முக்கிய ஆவணங்களுடன் இணைக்கப்பட்டு வருகிறது.

சமீபத்தில் வெளியான ஒரு செய்தியில், ‘வங்கிகளில் முக்கிய சேவைகளைப் பெற பொது மக்கள் வங்கிக் கணக்குடன் தங்களின் ஆதார் விபரங்களை இணைக்க வேண்டியது இப்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது,

ALSO READ:  10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

இது பாதுகாப்பானது இல்லை என்றும், ஆதார் எண் மூலம் சம்பந்தப்பட்ட நபரின் வங்கிக் கணக்கை முடக்கி பணத்தைத் திருட முடியும்’ என்று கூறப்பட்டிருந்தது. இந்த செய்தியைக் கண்டு பொது மக்கள் குழப்பமடைந்தனர்.

பொதுமக்களிடம் உருவாகியுள்ள இந்த தேவையற்ற குழப்பத்தை நீக்கம் செய்ய, இதுகுறித்து ஆதார் ஆணையம் தற்பொழுது விளக்கம் அளித்துள்ளது. ஆதார் ஆணையம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவலின் படி, ”முதலில் பொது மக்கள் யாரும் இந்த போலி செய்தியை நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

அதேபோல், வெறும் ஆதார் எண்ணை மட்டும் வைத்து, வங்கிக் கணக்குகளை மூன்றாம் நபர் யாரும் முடக்கம் செய்ய முடியாது” என்று ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதனால், பொதுமக்கள் யாரும் பீதியடைய வேண்டாம் என்று அறிவுரைக்கப்பட்டுள்ளனர். எப்படி வங்கி பயனர்களின் ஏடிஎம் கார்டு எண்ணை மட்டும் வைத்து மூன்றாம் நபர்கள் பணத்தைத் திருட முடியாதோ, அதேபோல் தான், வெறும் ஆதார் எண்ணை மட்டும் வைத்துக்கொண்டு மூன்றாம் நபர்கள் யாரும் வங்கிக் கணக்கை முடக்கம் செய்யவோ அல்லது பணத்தைத் திருத்தவோ முடியாது” ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது

ALSO READ:  பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories