December 6, 2025, 9:01 AM
26.8 C
Chennai

ஆதார் அட்டை வங்கியுடன் இணைந்திருப்பது ஆபத்தா..?

aadhar
aadhar

இந்தியக் குடிமக்கள் அனைவருக்கும் ஆதார் அட்டை என்பது முக்கிய அடையாள ஆவணமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. புதிய வங்கி கணக்கு திறப்பது முதல், புதிய சிம் கார்டு வாங்குவது வரை அனைத்திற்கும் ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இத்தகைய முக்கியமான ஆவணத்தை மக்கள் வங்கி கணக்குகளுடன் இணைப்பதனால், அவர்களின் வங்கிக் கணக்கிற்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்று சமூக வலைத்தளங்களில் சில செய்திகள் பரவி வருகிறது. இதற்கு தற்பொழுது ஆதார் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

இந்தியாவில் ஆதார் அட்டை என்பது மிக முக்கியமான ஆவணமாகத் திகழ்கிறது. வங்கி சேவைகள் உள்பட பல்வேறு தேவைகளுக்கு ஆதார் அட்டை விபரங்கள் அவசியமாக இருக்கிறது.

ஆதார் ஆணையத்தால் (UIDAI) விநியோகிக்கப்படும் 12 இலக்க எண் கொண்ட இந்த அட்டையின் விபரங்களை தற்பொழுது போது மக்கள் தங்களின் வங்கி கணக்கு, PAN கணக்கு போன்ற பிற முக்கிய ஆவணங்களுடன் இணைக்கப்பட்டு வருகிறது.

சமீபத்தில் வெளியான ஒரு செய்தியில், ‘வங்கிகளில் முக்கிய சேவைகளைப் பெற பொது மக்கள் வங்கிக் கணக்குடன் தங்களின் ஆதார் விபரங்களை இணைக்க வேண்டியது இப்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது,

இது பாதுகாப்பானது இல்லை என்றும், ஆதார் எண் மூலம் சம்பந்தப்பட்ட நபரின் வங்கிக் கணக்கை முடக்கி பணத்தைத் திருட முடியும்’ என்று கூறப்பட்டிருந்தது. இந்த செய்தியைக் கண்டு பொது மக்கள் குழப்பமடைந்தனர்.

பொதுமக்களிடம் உருவாகியுள்ள இந்த தேவையற்ற குழப்பத்தை நீக்கம் செய்ய, இதுகுறித்து ஆதார் ஆணையம் தற்பொழுது விளக்கம் அளித்துள்ளது. ஆதார் ஆணையம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவலின் படி, ”முதலில் பொது மக்கள் யாரும் இந்த போலி செய்தியை நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

அதேபோல், வெறும் ஆதார் எண்ணை மட்டும் வைத்து, வங்கிக் கணக்குகளை மூன்றாம் நபர் யாரும் முடக்கம் செய்ய முடியாது” என்று ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதனால், பொதுமக்கள் யாரும் பீதியடைய வேண்டாம் என்று அறிவுரைக்கப்பட்டுள்ளனர். எப்படி வங்கி பயனர்களின் ஏடிஎம் கார்டு எண்ணை மட்டும் வைத்து மூன்றாம் நபர்கள் பணத்தைத் திருட முடியாதோ, அதேபோல் தான், வெறும் ஆதார் எண்ணை மட்டும் வைத்துக்கொண்டு மூன்றாம் நபர்கள் யாரும் வங்கிக் கணக்கை முடக்கம் செய்யவோ அல்லது பணத்தைத் திருத்தவோ முடியாது” ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories