ஆதார் அட்டை வங்கியுடன் இணைந்திருப்பது ஆபத்தா..?

aadhar
aadhar

இந்தியக் குடிமக்கள் அனைவருக்கும் ஆதார் அட்டை என்பது முக்கிய அடையாள ஆவணமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. புதிய வங்கி கணக்கு திறப்பது முதல், புதிய சிம் கார்டு வாங்குவது வரை அனைத்திற்கும் ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இத்தகைய முக்கியமான ஆவணத்தை மக்கள் வங்கி கணக்குகளுடன் இணைப்பதனால், அவர்களின் வங்கிக் கணக்கிற்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்று சமூக வலைத்தளங்களில் சில செய்திகள் பரவி வருகிறது. இதற்கு தற்பொழுது ஆதார் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

இந்தியாவில் ஆதார் அட்டை என்பது மிக முக்கியமான ஆவணமாகத் திகழ்கிறது. வங்கி சேவைகள் உள்பட பல்வேறு தேவைகளுக்கு ஆதார் அட்டை விபரங்கள் அவசியமாக இருக்கிறது.

ஆதார் ஆணையத்தால் (UIDAI) விநியோகிக்கப்படும் 12 இலக்க எண் கொண்ட இந்த அட்டையின் விபரங்களை தற்பொழுது போது மக்கள் தங்களின் வங்கி கணக்கு, PAN கணக்கு போன்ற பிற முக்கிய ஆவணங்களுடன் இணைக்கப்பட்டு வருகிறது.

சமீபத்தில் வெளியான ஒரு செய்தியில், ‘வங்கிகளில் முக்கிய சேவைகளைப் பெற பொது மக்கள் வங்கிக் கணக்குடன் தங்களின் ஆதார் விபரங்களை இணைக்க வேண்டியது இப்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது,

ALSO READ:  சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

இது பாதுகாப்பானது இல்லை என்றும், ஆதார் எண் மூலம் சம்பந்தப்பட்ட நபரின் வங்கிக் கணக்கை முடக்கி பணத்தைத் திருட முடியும்’ என்று கூறப்பட்டிருந்தது. இந்த செய்தியைக் கண்டு பொது மக்கள் குழப்பமடைந்தனர்.

பொதுமக்களிடம் உருவாகியுள்ள இந்த தேவையற்ற குழப்பத்தை நீக்கம் செய்ய, இதுகுறித்து ஆதார் ஆணையம் தற்பொழுது விளக்கம் அளித்துள்ளது. ஆதார் ஆணையம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவலின் படி, ”முதலில் பொது மக்கள் யாரும் இந்த போலி செய்தியை நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

அதேபோல், வெறும் ஆதார் எண்ணை மட்டும் வைத்து, வங்கிக் கணக்குகளை மூன்றாம் நபர் யாரும் முடக்கம் செய்ய முடியாது” என்று ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதனால், பொதுமக்கள் யாரும் பீதியடைய வேண்டாம் என்று அறிவுரைக்கப்பட்டுள்ளனர். எப்படி வங்கி பயனர்களின் ஏடிஎம் கார்டு எண்ணை மட்டும் வைத்து மூன்றாம் நபர்கள் பணத்தைத் திருட முடியாதோ, அதேபோல் தான், வெறும் ஆதார் எண்ணை மட்டும் வைத்துக்கொண்டு மூன்றாம் நபர்கள் யாரும் வங்கிக் கணக்கை முடக்கம் செய்யவோ அல்லது பணத்தைத் திருத்தவோ முடியாது” ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது

ALSO READ:  சித்திரை விஷு பூஜை -சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

Entertainment News

Popular Categories