சிக்கிய மோசடி கும்பல்! எச்சரிக்கும் சைபர் கிரைம்!

cyber crime
cyber crime

சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரிடம் கடந்த 04.01.2021ம் தேதி செல்போனில் பேசிய அறிமுகமில்லாத நபர் SBI வங்கியிலிருந்து பேசுவதாக அறிமுகபடுத்தி கொண்டு கிரெடிட் கார்டுக்கு பரிசு பொருள் வந்திருப்பதாகவும் உடனடியாக கிரெடிட் கார்டின் விவரங்களை கூறினால் உடனடியாக கிடைக்கும் என்றும் இல்லையென்றால் பரிசு பொருள் கிடைக்காது என ஆசை வார்த்தை கூறி இவரின் SBI மற்றும் HDFC வங்கி கிரெடிட் கார்டுகளின் எண்கள், ரகசிய குறியீட்டு எண்களை கேட்டு (OTP) பெற்று அந்த தகவலை உபயோகித்து அடுத்த சில நிமிடங்களில் கிரெடிட் கார்டு கணக்கிலிருந்து ரூ. 1,08,740/- ஐ எடுத்து ஏமாற்றி விட்டனர்.

இது தொடர்பாக கோவிந்தராஜ் அளித்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு வங்கி மோசடி புலனாய்வு பிரிவினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்

ஆன்லைன் மோசடியில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டதின் பேரில் தில்லியில் முகாமிட்டு தொடர்ந்து புலன் விசாரணை மேற்கொண்டு வரும் மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையாளர் S.பிரபாகரன், ஆய்வாளர் புஷ்பராஜ், உதவி ஆய்வாளர்கள் பிரேம்குமார், சுரேஷ்குமார், தலைமை காவலர்கள் ஜெகந்நாத், ஸ்டாலின், கோமதி, சுபஜாராணி ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் மேற்படி மோசடி கும்பலுக்கு உதவியாக இருந்த தில்லி ஜோரிபூரை சேர்ந்த அதுல்குமார் மற்றும் காசியாபாத்தை சேர்ந்த குணால் ஆகியோரை 30.07.2021 அன்று கைது செய்து ரூ.1 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தும் தில்லி கர்கர்டுமா நீதிமன்றத்தில் ஆஜர் செய்து டிரான்சிட் ரிமாண்ட் உத்தரவுபடி இன்று எழும்பூர் சிசிபி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

atm
atm

புலன் விசாரணையில் மோசடி பேர்வழிகள் தில்லி, பீகார் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் போலியான கால்சென்டர்கள் வைத்து தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களில் வசிக்கும் மக்களிடம் செல்போனில் வங்கியிலிருந்து பேசுவதாக சொல்லி அறிமுகப்படுத்திக் கொண்டு கிரெடிட் கார்டு பரிவர்த்தனைக்கு பரிசு தொகை வந்திருப்பதாக கூறி கிரெடிட் கார்டு எண்கள் மற்றும் ரகசிய குறியீட்டு எண் விவரங்களை பெற்றும் தில்லியில் ஏஜென்சிகள் மூலம் மின்கட்டணம் செலுத்துவோரின் மின்கட்டண விவரங்களை தில்லி ஏஜெண்டுகளிடமிருந்து பெற்றும் அந்த மின்கட்டணங்களை தமிழ்நாட்டிலிருந்து பெற்ற கிரெடிட் கார்டு கணக்கிலிருந்து பணத்தை செலுத்தி பின் மேற்படி ஏஜென்சிகளுக்கு அதிகப்படியான கமிஷன் தொகை கொடுத்து அவர்களிடமிருந்து ரொக்கமாக பணத்தை பெற்று ஏமாற்றியுள்ளது தெரிய வந்துள்ளது.

மேற்படி அதுல்குமார் மற்றும் குணால் ஆகியோர் அதிக கமிஷனுக்கு ஆசைபட்டு மின்கட்டணத்தை மேற்படி மோசடி பேர்வழிகள் மூலம் செலுத்தியது தெரிய வந்து கைது செய்யப்பட்டனர்.

மற்ற நபர்களை தனிப்படையினர் தேடி வருகின்றனர். செல்போன் மற்றும் DTH ரீசார்ஜ் போன்றவற்றின் மூலமாகவும் மேற்படி மோசடி பேர்வழிகள் ஈடுபட்டுள்ளனரா என்றும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

adhul kumar kunal
adhul kumar kunal

வங்கியிலிருந்து பேசுவதாக கூறி கிரெடிட் கார்டுக்கு உச்ச வரம்பை உயர்த்துவதாக கூறியோ, பரிசு தொகை வந்துள்ளது என்றோ, ரிவார்டு பாயிண்டுகள் வழங்குவதாக கூறியோ, ஏ.டி.எம். கார்டு முடக்கப்பட்டுள்ளது, வங்கி கணக்கை ஆதார் கணக்குடன் இணைக்க வேண்டும், கொரோனா நிவாரண தொகை வந்துள்ளதாக கூறி வங்கி கணக்கு விவரங்கள், கிரெடிட் கார்டு / ஏ.டி.எம். கார்டு எண்கள், ரகசிய குறியீட்டு எண்களை நபர்களிடம் எந்த தகவலையும் தர வேண்டாம் என்றும் உஷாராக இருக்குமாறும் மத்திய குற்றப்பிரிவு வங்கி மோசடி புலனாய்வு பிரிவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் பொதுமக்கள் தங்களது செல்போன், DTH போன்றவற்றை ரீசார்ஜ் செய்யும்போது அங்கீகரிக்கப்படாத ஏஜென்சிகளிடம் செய்ய வேண்டாமென்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

Topics

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

பஞ்சாங்கம் மே 12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

“We are all one”, this realization of oneness is attained in the Varg : Atul Limaye

"We are all one", this realization of oneness is attained in the Varg – Atul LimayeJi - Karyakarta Vikas Varg-Dwitiya inaugurated in Nagpur

வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்… தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

தமிழ் மக்கள் யாரை மன்னிக்கவில்லை என்றாலும் ஒரு நடிகனை கண்டிப்பாக மன்னிப்பார்கள்.. வாழ்த்துகள்!

Entertainment News

Popular Categories