December 5, 2025, 11:49 PM
26.6 C
Chennai

மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல..!

chitta
chitta

காதலுக்கு கண் இல்லை என்பார்கள். ஆனால் மொழியை கடந்து இனம் மாறி மலர்ந்த ஒரு காதல் ஜோடி பிரிக்கப்பட்டது உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெல்ஜியம் நாட்டில் வனவிலங்குப் பூங்காவில் உள்ள மனிதக் குரங்குடன் காதல்வயப்பட்ட பெண்ணிற்கு பூங்கா நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளது.

பெல்ஜியம் நாட்டில் உள்ள வனவிலங்குப் பூங்காவிற்கு அடிய் திம்மெர்மன்ஸ் என்ற பெண் நாள்தோறும் சென்று பொழுதுபோக்கி வந்துள்ளளார்.

lady with chitta
lady with chitta

அவர் வனவிலங்கு ஆர்வலராகவும் பணிபுரிந்து வருகிறார். இதனால் அங்குள்ள விலங்குகளை நாள்தோறும் பார்வையிட்டு அவைகளுடன் நேரம் செலவிட்டுவந்தார்.

ஆனால், அந்தப் பூங்காவில் உள்ள 38 வயதான மனிதக் குரங்குடன் அப்பெண்ணுக்கு நெருங்கிய பழக்கம் ஏற்பட்டது. இதனால் கடந்த நான்கு ஆண்டுகளாக காதல் வயப்பட்டுள்ளார். வாரம்தோறும் வனவிலங்கு பூங்காவிற்கு செல்லும் பெண், அக்குரங்குடன் அதிக நேரம் செலவிட்டுள்ளார்.

கண்ணாடிக்கு மறுபுறம் இருக்கும் குரங்கும் அப்பெண்ணுடன் ஒன்றாக அதிக நேரம் செலவிடுவதையே விரும்புகிறது. இருவரும் அதிக நேரம் பேசி ஒருவரையொருவர் முத்தங்களையும் பரிமாறிக்கொண்டுள்ளனர்.

chitta with lady
chitta with lady

இதனை கண்காணித்து வந்த வனவிலங்குப் பூங்கா நிர்வாகம், விவகாரம் பெரிதாவதற்கும் முடிவுகட்ட முடிவு செய்தனர். அந்தவகையில் பூங்காவுக்குள் அப்பெண்ணுக்கு அனுமதி மறுத்துள்ளது.

சீட்டா என்ற அந்த மனிதக் குரங்கு, பெண்ணுடன் ஏற்பட்ட பழக்கத்தால் மற்ற மனிதக் குரங்குகளிடமிருந்து தனித்து இருப்பதாக பூங்கா நிர்வாகத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே அப்பெண்ணுக்கு மறுப்பு அளிக்கப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டது.

இது தொடர்பாக அப்பெண் பேசியதாவது, ‘நான் அந்த மனிதக் குரங்கை காதலிக்கிறேன். அவனும் என்னை விரும்புகிறான். ஏன் அவனை என்னிடமிருந்து பிரிக்கின்றனர்.

Adi Timmermans
Adi Timmermans

காதலின் வாயிலாக எங்களது உணர்வுகள் பகிர்ந்துகொள்ளப்படுகின்றன. நாங்கள் பரஸ்பரம் காதல் வயப்பட்டுள்ளோம் என்று வியப்படையச் செய்துள்ளார்.

இதனால் இந்த விவகாரம் தற்போது உலகளவில் கவனம் பெற்றுள்ளது. மனித குரங்கான சீட்டாவையும் அப்பெண்ணையும் சேர்த்துவைக்கவேண்டும் என பலரும் சமூக வலைதளம் மூலம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories