December 6, 2025, 6:17 AM
23.8 C
Chennai

தன்னுறுப்பைக் கொடுத்து தந்தை உயிர்க் காத்த தனயன்!

appa son
appa son

சில மாதங்களே உயிருடன் இருப்பார் என டாக்டர்கள் கூறிய நிலையில், தன் கல்லீரலின் ஒரு பகுதியை தானமாக தந்து, தனக்கு உயிர் கொடுத்த தந்தையின் உயிரைக் காப்பாற்றி உள்ளார் கோல்கட்டாவைச் சேர்ந்த இளைஞர்.

மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவைச் சேர்ந்த ஒரு தந்தைக்கு கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டது. கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யாவிட்டால், ஆறு மாதங்கள் மட்டுமே அவர் உயிருடன் இருப்பார் என டாக்டர்கள் கூறியுள்ளனர்.

இதனால், அவருடைய குடும்பமே அதிர்ச்சியில் உறைந்தது. ஒரு பக்கம் சிகிச்சை நடந்து வந்த நிலையில், தந்தைக்கும், அவருடைய மகனுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது.

வீட்டில் இருவரும் தனிமைப்படுத்திக் கொண்டனர். சேர்ந்து விளையாடி பொழுதைப் போக்கினர். அப்போது, தன் தந்தையின் நிலை குறித்து மகன் மிகவும் வருத்தம் அடைந்தார்.

தந்தையின் உயிரைக் காப்பாற்ற எதையும் செய்யலாம் என முடிவு செய்தார். கொரோனாவில் இருந்து மீண்ட உடன், தன் கல்லீரலை தந்தைக்கு தானமாக வழங்க மகன் முன்வந்தார்.

ஆனால், கொழுப்பு சத்து அதிகம் இருந்தது. அதையடுத்து உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு வாயிலாக கொழுப்பைக் குறைத்தார் மகன்.

பின், டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்து, மகனின் 65 சதவீத கல்லீரலை எடுத்து, தந்தைக்கு பொருத்தி உள்ளனர். சிகிச்சைக்கு பின், இருவரும் நல்ல உடல் நலத்துடன் உள்ளனர்.

இது தொடர்பாக ‘Humans of Bombay’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த நெகிழ்ச்சி சம்பவம் குறித்து விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது.

son appa
son appa

அப்பா ஒரு நாளும் புகை பிடித்தது இல்லை, குடித்தது கூட கிடையாது. அப்படி இருக்க இது எப்படி சாத்தியம் எனக் குழம்பிப் போனார். உடனே மருத்துவரை அணுகிய நிலையில், அவருக்குக் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். அதற்கு நன்கொடையாளர்கள் கிடைக்க வேண்டும். இல்லையென்றால் 6 மாதங்கள் மட்டுமே அப்படி உயிருடன் இருப்பார் என டாக்டர் சொன்னதைக் கேட்டு அதிர்ந்து போனார்.

அதேநேரத்தில் அந்த இளைஞரின் அப்பாக்கு கொரோனா தொற்றும் ஏற்பட்டுள்ளது. ஆனால் தனது அப்பாவைக் காப்பாற்றும் முடிவில் உறுதியாக இருந்துள்ளார். இதனால் தனது கல்லீரலை தானம் செய்ய முன்வந்தார். இதையடுத்து மருத்துவர்கள் சோதனை செய்ததில் அந்த இளைஞரின் கல்லீரல் அவரது தந்தையோடு பொருந்திப் போனது.

ஆனால் அதிலும் ஒரு பிரச்சனை இருந்தது. அந்த இளைஞருக்குக் கொழுப்பு கல்லீரல் இருந்தது. இதனால் அவர் தனது உடல் எடையைக் குறைத்து, முறையான உடற்பயிற்சி, மற்றும் உணவுக் கட்டுப்பாடு இருந்தால் தான் கல்லீரலை தானம் செய்யத் தகுதி உடையவர் ஆவார். இதையடுத்து கடுமையாக உடற்பயிற்சி செய்தும், தனது உடல் எடையைக் குறைத்தும் கல்லீரலைத் தனது அப்பாவிற்கு தானம் செய்யும் நிலைக்கு அந்த இளைஞர் வந்துள்ளார்.

இதையடுத்து அறுவை சிகிச்சைக்கு நாள் குறிக்கப்பட்ட நிலையில், குடும்பத்தில் உள்ள பலருக்கும் அடுத்து என்ன நடக்குமோ என்ற பதற்றம் தொற்றிக் கொண்டது. ஆனால் அந்த இளைஞரின் தந்தை, நான் படுக்கையிலிருந்து எழும்பி வந்து உன்னை லுடோவில் வெற்றி பெறுவேன் என நகைச்சுவையாகக் கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து அறுவை சிகிச்சை முடிந்து அந்த இளைஞர் கண்விழித்த நிலையில், மருத்துவர் அவரை பார்த்து, நீ உன் அப்பாவைக் காப்பாற்றி விட்டாய் எனக் கூறியுள்ளார்.

இதனைக் கேட்டதும் அந்த இளைஞர் சந்தோசம் தாங்காமல் கதறி அழுதுள்ளார். ஒரு மகனாக எனக்கு வேறு என்ன சந்தோசம் இருக்க முடியும். உங்களுக்கு மகனாக இருப்பதில் பெருமைப்படுகிறேன் என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

தன் உயிரைக் காப்பாற்ற, உயிரை பணயம் வைத்த மகன் குறித்து தந்தையும் புளகாங்கிதம் அடைந்துள்ளார்.

குடும்பம், பாசம், தியாகத்துக்கு ஒரு முன்னுதாரணமாக இந்த தந்தை, மகன் விளங்குகின்றனர் என, நண்பர்களும், உறவினர்களும் பெருமிதத்துடன் குறிப்பிடுகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories