சிறுவயது முதல் வளர்த்த பூங்கா ஊழியரின் கையில் உயிரை விட்ட கொரில்லா!

Published:

corilla
corilla

14 வருடங்களுக்கு முன்பு குழந்தையாக மீட்கப்பட்ட கொரில்லா, தன்னை வளர்த்த வனத்துறை அதிகாரியின் கைகளிலேயே உயிரைவிட பரிதாபம் நிகழ்ந்துள்ளது.

corilla 2
corilla 2

காங்கோ நாட்டில் உள்ள பூங்காவில், நடகாசி (Ndakasi) மலையில் இருந்து மீட்கப்பட்ட கொரில்லா இருந்தது. இந்த கொரில்லாவும், வனத்துறை அதிகாரியும் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படம் உலகளவில் பெரும் வைரலாகி வரவேற்பை பெற்றது.

corilla 1
corilla 1

பூங்காவில் பணியாற்றி வந்த மேத்திவ் சமாவு (Mathieu Shamavu), ஆண்ரே பவுமா (Andre Bauma) ஆகியோரால் கடந்த 14 வருடங்களுக்கு முன்னதாக கொரில்லா குட்டியாக இருக்கையில் மீட்கப்பட்டது.

இந்த குட்டியின் குடும்பம் கடத்தல் கார்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட நிலையில், இளம் கொரில்லா குழந்தை பருவமாக இருக்கையில் மீட்கப்பட்டது.

corilla kutti
corilla kutti

இந்த கொரில்லாவை தங்களுடன் வைத்து அரவணைத்து பாசத்துடன் பார்த்து வந்த அதிகாரிகள், அதனுடன் கொஞ்சுவது விளையாடுவது என மகிழ்ச்சியாக இருந்து வந்தனர்.

corilla 3
corilla 3

இந்நிலையில், தற்போது கொரில்லாவுக்கு 14 வயது இருக்கையில், நீண்ட கால நோய்க்கு பின்னர் தன்னை வளர்த்த ஆண்ரேவின் கைகளிலேயே தனது உயிரை விட்டது.

ALSO READ:  நெல்லையில் நடந்த இந்து முன்னணி மாநிலப் பொதுக்குழு; போதை நடமாட்டம், திருச்செந்தூர், தீபம் உள்ளிட்ட 8 தீர்மானங்கள்!

Related articles

Recent articles

spot_img