கொரோனா 3வது அலை: விஞ்ஞானிகள் கருத்து!

corono - 2026

இந்தியாவில் புதிய கொரோனா வைரஸ் ஏதும் கண்டறியப்படாததால் கொரோனா 3-வது அலையின் அச்சுறுத்தல் குறைந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு பிப்ரவரி இறுதியில் இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. மே, ஜூன் மாதங்களில் இதன் தாக்கம் அதிகரித்து நவம்பர் மாதத்தில் குறையத் தொடங்கியது. ஆனாலும் இந்தாண்டு பிப்ரவரியில் கொரோனா 2-வது அலை பரவத் தொடங்கி அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டது.

இதனால் நாட்டில் லட்சக் கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். அதிக அளவில் உயிரிழப்பும் ஏற்பட்டது. இதுவரை 4.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தற்போது 2-வது அலையின் பாதிப்பு வெகுவாகக் குறைந்துள்ளது. தற்போது தினசரி 15 ஆயிரம் பேர் என்ற அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதனிடையே அக்டோபர், நவம்பர் மாதங்களில் கொரோனா வைரஸின் 3-வது அலை ஏற்படும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர்.

இதைத் தொடர்ந்து 3-வது அலை ஏற்பட்டால் அதை சமாளிப்பதற்கான ஏற்பாடுகளை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் செய்திருந்தது.

ALSO READ:  தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

இந்நிலையில், நாட்டில் புதிய கொரோனா வைரஸ் ஏதும் கண்டறியப்படாததால் 3-வது அலை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று விஞ்ஞானிகளும், மருத்துவ நிபுணர்களும் தெரிவித்துள்ளனர்.

அக்டோபர் மாதத்தின் முதல் 15 நாட்கள் வரை நடத்தப்பட்ட மரபணு வரிசைமுறை மற்றும் பிற ஆய்வுகள் மூலம் வைரஸ் உருமாறுவதற்கான அறிகுறியோஅல்லது புதிய மாறுபாடோ தோன்றவில்லை என்று தெரியவந்துள்ளது.

நோய்த்தொற்றுகள் ஏற்படலாம் என்றாலும், அவை பெரும்பாலும் லேசானவையாக இருக்கும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

இருந்தபோதிலும், அனைவருக்கும் முழுமையான தடுப்பூசி போடப்படும் வரை பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், அதற்கான ஒத்துழைப்பை அரசுக்கு பொதுமக்கள் தரவேண்டும் என்று விஞ்ஞானிகள் வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து கர்நாடக மாநில சுகாதாரத் துறை ஆணையர் டி. ரன்தீப் கூறும்போது, “கொரோனா வைரஸின் மரபணு வரிசைமுறை உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது.

மேலும் 10% நேர்மறை மாதிரிகள் தினசரி ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன. இதில் மகிழ்ச்சியான விஷயம் என்னவென்றால், கொரோனா வைரஸின் புதிய மாறுபாடு தோன்றுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று தெரியவந்துள்ளது. ஆனாலும், அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்வது மிகவும் அவசியம்’ என்றார்.

ALSO READ:  'தாமரை வாக்குறுதிகள்' என்ற பெயரில் பாஜக., தேர்தல் அறிக்கை வெளியீடு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

சபரிமலையில் நடைபெறும் மாதாந்திர பூஜையின் போது, ​​பல முக்கியமானநெய்யாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, புஷ்பாபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, அஷ்ட அபிஷேகம். சடங்குகள் நடத்தப்படுகின்றன.

நடத்தையில் சந்தேகம்… நடந்த சண்டை… மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

நடத்தையில் சந்தேகப்பட்டு நடந்த சண்டையில் மனைவியே கணவனை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 08 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

சபரிமலையில் நடைபெறும் மாதாந்திர பூஜையின் போது, ​​பல முக்கியமானநெய்யாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, புஷ்பாபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, அஷ்ட அபிஷேகம். சடங்குகள் நடத்தப்படுகின்றன.

நடத்தையில் சந்தேகம்… நடந்த சண்டை… மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

நடத்தையில் சந்தேகப்பட்டு நடந்த சண்டையில் மனைவியே கணவனை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 08 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

Entertainment News

Popular Categories