December 6, 2025, 7:17 AM
23.8 C
Chennai

25 நிமிடத்திற்குள் 108 மந்திரங்கள்.. சாதனை படைத்த 6 வயது சிறுமி!

D Sai Shreyansi
D Sai Shreyansi

இந்த காலத்தில் குழந்தைகள் மிகவும் சிறிய வயதிலேயே பல சாதனைகளை படைத்தது நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றனர்.

1330 திருகுறள்களை நேராகவும், தலைகீழாகவும் ஒப்பிப்பது, கொடிகளை பார்த்தே அது எந்த நாட்டினுடையது என்று சரியாக சொல்வது, நாடுகள் அல்லது மாநிலங்களின் தலைநகரங்களின் பெயர்களை சொன்னால் குறிப்பிட்ட நாடு அல்லது மாநிலத்தை சரியாக சொல்வது என மிக்சிறிய வயதிலேயே சாதனைகளை படைத்து அசத்தி வருகின்றனர்.

இதனிடையே ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 6 வயதான ஒரு சிறுமி மொத்தம் 24 நிமிடங்கள் 50 வினாடிகளுக்குள், சுமார் 108 ஆன்மீக மந்திரங்களை உச்சரித்து இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் (India Book of Records) இடம் பிடித்து சாதனை படைத்து உள்ளார்.

D Sai Shreyansi 2
D Sai Shreyansi 2

ஒடிசாவின் ஜகத்சிங்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த டி சாய் ஷ்ரேயான்ஸி (D Sai Shreyansi) என்ற 6 வயது சிறுமியை இந்த சாதனையை செய்து இருக்கிறார்.

தாரதாபடா கிராமத்தைச் சேர்ந்த பிரபல கல்வியாளரான ராஷ்மி ரஞ்சன் மிஸ்ராவின் (Rashmi Ranjan Mishra) பேத்தி தான் ஒன்றாம் வகுப்பு படிக்கும் இந்த 6 வயதான சாய் ஷ்ரேயான்ஸி.

தனது சாதனை குறித்து பேசியுள்ள சிறுமி சாய் ஷ்ரேயான்ஸி “எங்கள் வீட்டில் வாராந்திர பூஜைகள் வழக்கமாக நடத்தப்பட்டு வருகின்றன. இந்த பூஜைகளின் போது வீட்டிற்கு வரும் மத பெரியவர்கள் பாடும் மந்திரங்கள் என்னை கவர்ந்தது. எனவே அவர்கள் மந்திரங்களை எப்படி உச்சரிக்கிறார்கள் , எப்படி பாடுகிறார்கள் என்பதை தொடர்ந்து கவனித்து வந்தேன்.

D Sai Shreyansi awards
D Sai Shreyansi awards

எனது இந்த தனிப்பட்ட கவனத்தால் அவர்கள் சொல்லிய மந்திரங்களை நானே கற்று கொண்டேன்” என்றார். மேலும் பேசிய சிறுமி நானே மந்திரங்களை ஆர்வமாக கற்று கொண்ட போதும் அதை சரியாக உச்சரிக்க என்னுடைய பெற்றோரும், தாத்தாவும் (ராஷ்மி ரஞ்சன் மிஸ்ரா) உதவி செய்து நான் தேர்ச்சி பெற உதவினர் என்றார்.

கொரோனா காரணமாக கடந்த 2 வருடங்களாக ஆன்லைன் கிளாஸ் மூலம் தான் சிறுமி படித்து வருவதாக பெற்றோர் கூறி இருக்கிறார்கள்.

D Sai Shreyansi record
D Sai Shreyansi record

சிறுமியின் தாயான ஷஸ்மிதா மிஸ்ரா கூறுகையில், “சாய் ஷ்ரேயான்ஸி எப்படி மந்திரங்களை ஆர்வமாக கற்று கொண்டாளோ அதே போல ஒடிஸி கிளாசிக்கல் டான்ஸை கற்று தேர்ச்சி பெறுவதில் மிகவும் ஆர்வமாக இருக்கிறாள்.

108 ஆன்மீக மந்திரங்களை குறுகிய நேரத்திற்குள் ஜபித்து எப்படி இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம் பிடித்தாளோ, அதே போல ஒடிஸி டான்ஸிலும் மிகப்பெரிய பெயரை பெற்று சாதனை படைப்பாள் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று கூறினார்.

இதனிடையே சாய் ஷ்ரேயான்ஸிவின்சாதனையை அங்கீகரித்துள்ள இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் அதற்கான சான்றிதழையும் சிறுமிக்கு வழங்கி உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories