லக்னோ மெட்ரோ ரயில் நிலையத்தில் குரங்குகளுக்கு கட்அவுட் வைத்த நிர்வாகம்!

Lucknow
Lucknow

லக்னோ மெட்ரோ ரயில் நிலையத்தில் குரங்குகளின் அட்டகாசத்தை தடுக்க லங்கூர் குரங்குகளின் கட் அவுட்களை ஆங்காங்கே வைத்துள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநில லக்னோவில் மெட்ரோ ரயில் நிலையங்களின் குரங்குகளின் அட்டகாசம் நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் இருந்துள்ளது. மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வரும் பயணிகளின் உடைமைகளை எடுத்து சென்றுவிடுகின்றன.

குரங்குகளின் அட்டகாசம் காரணமாக மெட்ரோ ரயில் நிலைய ஊழியர்களும், பயணிகளும் அச்சத்தில் இருந்தனர். மெட்ரோ ரயிலில் குரங்குகள் ஏறாமல் தடுக்க, ரயில் நிலையத்தில் லங்கூர் வகை குரங்கு பொம்மைகளும் அவை அலறும் ஒலியும் ஒலிபரப்பப்படுகிறது.

மெட்ரோ ரயில் நிறுவனம் எடுத்த இந்த முயற்சி ஒரளவுக்கு அவர்களுக்கு பலனை அளித்துள்ளது. பாட்ஷா நகர் ரயில்நிலையத்தில் குரங்கு பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளன.

இதனை கண்டு குரங்குகள் வராமல் உள்ளதாகவும், ஆக்ரோஷமான குரங்கின் ஒலியும் சேர்த்து ஒலிக்கும்போது, குரங்குகள் நுழைவது தடுக்கப்படுவதாகவும் மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து பேசிய அதிகாரிகள், “லக்னோவில் குரங்குகள் அச்சுறுத்தல் இருக்கும் 9 ரயில் நிலையங்களில் லங்கூர் வகை குரங்குகளின் கட் அவுட்கள் வைக்கப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் லங்கூர் குரங்குகள் ஆக்ரோஷமாக கத்தும் சத்தத்தை ரயில் நிலையங்களில் ஒலிக்க செய்தோம். ஆரம்பத்தில் இது தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆனால் அது நீண்ட நாள்களுக்கு நீடிக்கவில்லை.

இதனையடுத்து லங்கூர் கட் அவுட்களை ரயில் நிலையங்களில் வைப்பது என முடிவு செய்தோம். தற்போது குரங்குகளின் அச்சுறுத்தல் இருக்கும் ரயில் நிலையங்களில் கட் அவுட்களை வைத்துள்ளோம்.

குரங்குகளின் ஆக்ரோஷமான சத்தத்தை ஒலிக்க செய்கிறோம். இந்த கட் அவுட்களை அடிக்கடி வெவ்வேறு இடங்களின் மாற்றி வைக்கிறோம்.” என்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Topics

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Entertainment News

Popular Categories