December 6, 2025, 6:30 AM
23.8 C
Chennai

ட்ராஃபிக் தவிர்க்க இப்படியா செய்வாங்க..? வைரல்!

Suffolk County
Suffolk County

ஆன்லைனில் பல விசித்திரமான நிகழ்வுகள் மற்றும் செய்திகள் வைரலாகி நெட்டிசன்களிடையே பிரபலமாவது அடிக்கடி நிகழ்ந்து வருகிறது.

அந்த வகையில் அமெரிக்காவில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நினைத்த கார் ஓட்டுநர் ஒருவர் செய்த காரியம் குறித்து அந்நாட்டின் சஃப்போக் கவுண்டி (Suffolk County) போலீசார் சோஷியல் மீடியாவில் ஷேர் செய்து இருக்கும் போஸ்ட் ஒன்று மக்களை சிரிக்க வைப்பதுடன் வைரலாகியும் வருகிறது.

உலகம் முழுவதும் உள்ள எல்லா நாடுகளின் சாலைகளிலும் பொதுவாக காணப்படும் பிரச்னை போக்குவரத்து நெரிசல் தான்.

வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வரும் நிலையில், சாலையில் ஏற்படும் டிராஃபிக் ஜாம் என்பது எவ்வளவு பெரிய நாடுகளையும் விட்டு வைப்பதில்லை.

இதற்கு அமெரிக்காவும் விதி விலக்கல்ல. எனவே அந்நாட்டில் ஏற்படும் போக்குவரத்துக்கு நெரிசலை குறைக்க ஹை ஆக்குபேன்ஸி வெஹிகிள் லேன்ஸ் (high-occupancy vehicle lans) என்ற தனி பாதை ஒன்று அமைக்கப்பட்டு அந்த வழியிலும் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டு வருகிறது.

ஆனால் இந்த லேனில் எல்லா வாகனங்களும் பயணிக்க முடியாது. ஏனென்றால் இந்த HOV லேன் கார்பூல்கள், வேன்பூல்கள், அவசரகால சேவைகள் மற்றும் போக்குவரத்து வாகனங்களின் பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட ஒரு சிறப்பு பாதையாகும்.

கார்பூலிங் அல்லது வேன்பூலிங் என்பது ஒரே இடத்தில் இருந்து வேலைகளுக்கு செல்லும் பல மக்கள் தனித்தனி கார்கள் அல்லது வாகனங்களில் பயணிப்பதால் ஏற்படும் போக்குவரத்துக்கு நெரிசலை குறைக்க உதவும் சிஸ்டம். இது ரைட் ஷேரிங் என்றும் குறிப்பிடப்படுகிறது.

இதில் கார் வைத்திருக்கும் ஒருவர் பிறரிடம் போதுமான பணத்தை வாங்கி கொண்டு வழக்கமாக அவர்களை பிக்கப் மற்றும் ட்ராப் செய்வார். இதனால் அவருக்கும் எரிபொருளுக்கான பணம் மிச்சமாகும். போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மற்றும் சுற்றுசூழலை பாதுகாக்க உதவுகிறது.

சமீபத்தில் சாதாரண வாகனங்கள் செல்லும் லேனில் போக்குவரத்து நெரிசல் அதிகம் இருப்பதை கண்ட கார் ஓட்டுநர் ஒருவர், சாமர்த்தியமாக ட்ராஃபிக்கை தவிர்க்க நினைத்தார்.

எனவே அருகில் இருந்த முன் சீட்டில் ஒரு ஆள் உட்கார்ந்திருப்பது போல ஒரு கருப்பு ஜாக்கெட், ஒரு தொப்பி மற்றும் ஹெட்ரெஸ்டில் ஹூட்டை கொண்டு கவர் செய்து செட் செய்து விட்டார்.

தூரத்திலிருந்து பார்க்க ஓட்டுனருக்கு அருகில் மற்றொரு நபர் உட்கார்ந்திருப்பதை போலவே தோற்றமளிப்பதை உறுதி செய்து கொண்ட பிறகு, HOV லேனில் நுழைந்து காரை ஒட்டி சென்றுள்ளார்.

ஆனால் அங்கிருந்த அதிகாரி ஒருவருக்கு சந்தேகம் ஏற்பட காரை நிறுத்தி கண்ணாடியை திறக்க சொல்லி பார்த்த போது அந்த ஓட்டுனரின் குட்டு வெளிப்பட்டு உள்ளது.

இதனை அடுத்து அவரிடம் அபராதம் வசூலிக்கப்பட்டு மாற்று லேனில் அவர் திருப்பி விடப்பட்டார். இது தொடர்பான போட்டோவை Suffolk County போலீஸ் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாவில் ஷேர் செய்து இருக்கிறது. இந்த போஸ்ட் தற்போது வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/p/CWJI82ZPMLJ/?utm_source=ig_web_copy_link

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories