உலக அதிசயம்! ஸ்டேஷன்ல ரயிலு நிக்கும்… ஆனா அதுல ஏற டிக்கெட் கொடுக்க மாட்டாங்க!

sengottai railwaystn3
sengottai railwaystn3

27/11/21 சனிக்கிழமை பிற்பகலில் செங்கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பதிவு செய்த டிக்கட்டை ரத்து செய்யப் போயிருந்தேன். சற்று முன்பாக 02.30 க்கே போய்விட்டேன்.

இரண்டு சிற்றுண்டி சாலைகளும் திறந்து இருந்தன.வியாபாரம் சுமாராக உள்ளது என்றும் கூடுதல் ரயில்கள் விட்டால் வருவாய் அதிகரிக்கும் என அந்த கடைக்காரர்கள் தெரிவித்தனர்.

பிற்பகல் 3 மணிக்கு செங்கோட்டை ரயில் நிலைய முதல் பிளாட்பாரத்துக்கு வந்த கொல்லம் சென்னை மெயிலில் வந்த பயணிகள் கேனில் விற்கப்பட்ட டீயை வாங்கி பருகினர்.

செங்கோட்டை ரயில் நிலைய ஆட்டோ நிறுத்தத்தில் நிரந்தரமாக கட்டணம் கொடுத்து இருந்து வாடகை ஆட்டோ ஓட்டுபவர்களை அவர்களது ஓட்டம் எப்படி இருக்கிறது என்று கேட்டதற்கு பரவாயில்லை என கூறினர்.

மேலும் ஆட்டோ ஓட்டுனர்களிடமிருந்து கிடைத்த தகவல்கள்—
1)பாலக்காட்டிலிருந்து திருநெல்வேலி செல்லும் பாலருவி எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து செங்கோட்டையில் சராசரியாக தினசரி அறுபது பேர்கள் இறங்குகிறார்கள்.
2)திருநெல்வேலியிலிருந்து பாலக்காடு செல்லும் பாலருவி ரயிலில் சராசரியாக இருபத்தைந்து பேர்கள் செங்கோட்டையில் இருந்து ஏறிச்செல்கிறார்கள்.

ஆனாலும் ரயில்வே நிர்வாகம் பாலருவி ரயில்களில் செங்கோட்டையிலிருந்து பிற ஊர்களுக்கோ/ பிற ஊர்களிலிருந்து செங்கோட்டைக்கோ இன்றளவும் டிக்கட் வழங்குவது கிடையாது.

தற்போது 25/11/21 முதல் இருவழிகளிலும் பாலருவி ரயில்களில் நான்கு முன்பதிவற்ற பெட்டிகள் இணைக்கப்படுவதால் செங்கோட்டை ரயில் நிலையத்தில் இவ்விரு ரயில்களுக்கும் ரயிலின் நேரங்களை அனுசரித்து முன்பதிவற்ற டிக்கட்டுகள் வழங்க மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகம் ஆவன செய்ய வேண்டும்.

அதே போல முன்பதிவு ரிசர்வேஷன் டிக்கட்டுகளும் வழங்கப்பட வேண்டும். இவ்வாறு டிக்கெட்கள் வழங்கப்படாமல் போவதால், தென்காசி ரயில் நிலையம் சென்று டிக்கெட் வாங்க வேண்டியுள்ளது. இதனால் செங்கோட்டை ரயில் நிலையத்துக்கான வருவாய் அளவு குறைகிறது, குறைத்துக் காட்டப் படுகிறது. எனவே செங்கோட்டை ரயில் நிலையத்தில் பாலருவி எக்ஸ்பிரஸுக்கு ரயில் நிறுத்தம் அறிவித்து, டிக்கெட் வழங்கினால் செங்கோட்டை ரயில் நிலைய வருடாந்திர வருவாய் அளவு உயரும். இது செங்கோட்டை வட்டார மக்களின் கோரிக்கை.

  • KH கிருஷ்ணன்
    (செயலர் செங்கோட்டை ரயில் பயணிகள் நலச்சங்கம் மற்றும் முன்னாள் 2017-19 தெற்கு ரயில்வே மதுரை கோட்ட ரயில் உபயோகிப்போர் ஆலோசனைக்குழு உறுப்பினர்)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

Topics

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

Entertainment News

Popular Categories