தடுப்பூசி போட்டவர்களால் கொரோனா வைரஸ் பரவாதா?

covid and india - 2026

கருத்து: செல்வ நாயகம்

“தடுப்பூசி கட்டாயம் கிடையாது. தாமாகவே முன்வந்து செலுத்திக் கொள்ளவும்.” – உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு!

“தடுப்பூசி போடாதவர்களுக்கு லாக்டௌன்” என்று கூகுளில் தேடினால் ஜெர்மனி, ஆஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து என அத்தனை வெள்ளைக்கார தேசத்தையும் கூகுள் காட்டுகிறது!

“தடுப்பூசி போட்டவர்களுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லாதபோது, எதற்காக இப்படி தடுப்பூசி போடாதவர்களுக்கு ‘மட்டும்’ லாக்டௌன்?” என்ற கேள்விக்கு, “தடுப்பூசி போடாதவர்களால் கொரோனாவைரஸ் பரவலை தடுக்க (to curb the spread of coronavirus)” என்கிறார்கள் (https://tinyurl.com/2p8cb766) .

“தடுப்பூசி போட்டவர்களால் கொரோனாவைரஸ் பரவாதா?” என்று கேட்டால் நம்மை anti-science என்று சொல்லுவார்கள். என்றாலும், இந்த ஓமிக்ரான் வைரஸ் வகை முதல் முதலில் பரவ காரணமாக இருந்தவர் தடுப்பூசி போட்டுக் கொண்டவர். (https://tinyurl.com/f8tutaw2) .

“தடுப்பூசி போட்டுக் கொள்பவர்கள் வைரஸை பரப்ப மாட்டார்கள்” என்பது உண்மையில்லை. அவர்களும் – தடுப்பூசி போடாதவர்களைப் போல – வைரஸை பரப்புவார்கள். ஆனால், (இந்திய) தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு எதிர்ப்பு சக்தி இருக்கும் என்பதால், அவர்களுக்கு பாதிப்பு குறைவு. தடுப்பூசி போடாதவர்களுக்கு பாதிப்புக்கான வாய்ப்பு அதிகம். அவர்களுக்கு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கும் கட்டாயம் ஏற்படலாம்.

ALSO READ:  நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!

அதோடு, ஏற்கனவே கொரோனா தொற்று வந்தவர்களுக்கு எதிர்ப்பு சக்தி இருக்கும். கொரோனா வராதவர்களுக்கு கூட இயற்கையான எதிர்ப்பு சக்தி இருக்கும். இதையெல்லாம் அறிவியல் பூர்வமாக நிரூபித்து – அவர்களு எதிர்ப்பு சக்தி இல்லை என்று காட்டினாலொழிய – எவரையும் நிர்பந்திக்க முடியாது.

எனவே, அறிவில்லாத ஊடகங்கள் உட்பட பலரும், “தடுப்பூசி போடாதவர்களால் வைரஸ் பரவும், அவர்களுக்கு லாக்டௌன் போடவும்” என்பதை நிறுத்திவிட்டு, “தடுப்பூசி போடாதவர்களால் மருத்துவமனையில் தேவையில்லாத பளு அதிகரிக்கும் வாய்ப்பிருப்பதால், அவர்களுக்கு கட்டுப்பாடுகள் கொண்டுவரவும்” என்று ராகத்தை மாற்றிப்பாடலாம்.

இந்த வாரம் உச்சநீதிமன்றத்தில் பிரஷாந்த் பூஷன் (அதே இந்தியாவிரோதி தான்) உச்சநீதிமன்றத்தில், “மாநில அரசுகள் தடுப்பூசி போடாதவர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பது தனி மனித சுதந்திரத்துக்கு எதிரானது” என தொடுத்த வழக்கில் பதிலளித்த மத்திய அரசு, “தடுப்பூசி கட்டாயம் கிடையாது. தாமாகவே முன்வந்து செலுத்திக் கொள்ளவும். இந்திய தடுப்பு மருந்துகளால் அபாயம் ஏதுமில்லை என்பதை தரவுகள் காட்டுகின்றன. எனவே, தாமாக முன்வந்து தடுப்பூசி போட்டுக் கொள்வதை மத்திய அரசு ஊக்குவிக்கிறது” என்று பதிலளித்து விவரங்களை கொடுத்திருக்கிறது @ https://tinyurl.com/yckw4hjj .

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

அமெரிக்கா – ஐரோப்பாவில் உபயோகிக்கும் ஃபைசர் உள்ளிட்ட mRNA தடுப்பு மருந்துகள் மீது அந்நாட்டு மக்களுக்கு நம்பிக்கை இல்லை. அங்கே ஊசி போட்டவர்கள் தான் அதிகம் சாகிறார்கள் என்று பலர் ஆதாரங்களோடு கூறுகிறார்கள். இத்தனை எதிர்ப்புகளுக்கு மத்தியில் தடுப்பூசியை கட்டாயமாக்கி, மக்களை கடுப்பாக்கி, மக்களின் எதிர்ப்பை சம்பாதித்துள்ளன அந்த நாட்டு அரசுகள்.

இங்கே தடுப்பு மருந்தை கட்டாயமாக்காமல், மக்களுக்கு அதன் பலனை எடுத்துச் சொல்லி, அவர்கள் சம்மதத்தோடு ஊசி போடுகிறது அரசு. இதுவரை 126 கோடிக்கு மேல் தடுப்பு மருந்து பெற்றுள்ளார்கள் இந்தியாவில். இரு டோஸ்களையும் எடுத்துக் கொண்டவர்கள் எண்ணிக்கை 46.8 கோடி. ஒரு டோஸ் மட்டும் – 79.8 கோடி. சாதனை!

ஊடகம், அரசியல்வாதிகள் என அத்தனை பேருக்கும் $ஐ அள்ளி வீசி விலைக்கு வாங்கியிருக்கும் ஃபைசரை எதிர்த்து எவரும் பேச மாட்டேனென்கிறார்கள்.

இந்த திருடனை இந்தியாவுக்குள் நுழைய விடாமல் செய்து நம்மைக் காத்த பெருமை மோதி ஜியை சாரும்!!

ALSO READ:  பெட்ரோல் சிக்கனம்; வெளிநாட்டு பயணம், தங்கம் வாங்குதலைத் தவிர்க்கவும்; பிரதமர் மோடி வேண்டுகோள்!

First known U.S. Omicron case found in fully vaccinated overseas traveler : https://www.reuters.com/business/healthcare-pharmaceuticals/us-reports-first-case-omicron-variant-2021-12-01/

Vaccine not mandatory; 2,116 adverse events, deaths after immunisation, Centre tells SC : https://economictimes.indiatimes.com/news/india/vaccine-not-mandatory-2116-adverse-events-deaths-after-immunisation-centre-tells-sc/articleshow/87994260.cms

Germany locks down unvaccinated people, as leaders plan to make shots compulsory
https://edition.cnn.com/2021/12/02/europe/germany-lockdown-covid-restrictions-intl/index.html

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

Entertainment News

Popular Categories