6வது முறையாக… ஒரு கோடிக்கும் அதிகமான பேருக்கு தடுப்பூசி! சாதனை இந்தியா!

vaccination history - 2026

இந்தியாவில் சனிக்கிழமை 1.03 கோடி டோஸ்கள் போடப்பட்டன… இதன் மூலம், நம் நாட்டில் 6 வது முறையாக ஒரே நாளில் ஒரு கோடிக்கும் அதிகமான பேருக்கு தடுப்பூசி போடப் பட்டு சாதனை செய்யப் பட்டுள்ளது.

இந்தியாவில் 50 சதவீதம் பேர் இரு தவணை தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டனர், தடுப்பூசி போட தகுதியுடையவர்களில் இந்தியாவில் பாதி பேர் இரு தவணைகளையும் செலுத்தி கொண்டனர். 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 85 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி…. 50.35 சதவீதம் பேர் இரு தவணைகளையும் செலுத்தி கொண்டனர்… என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது!

நாட்டில் ஆறாம் முறையாக ஒரே நாளில் ஒரு கோடிக்கும் அதிகமான ‘டோஸ்’ கொரோனா தடுப்பூசி நேற்று செலுத்தப்பட்டது. ஒட்டுமொத்த டோஸ் எண்ணிக்கை 127.54 கோடியை கடந்துள்ளது.

கொரோனா தடுப்பூசி பணிகளை மத்திய – மாநில அரசுகள் விரைவுபடுத்தி உள்ளன. பின்தங்கிய சில வட மாநிலங்களில் பணிகளை துரிதப்படுத்த மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியது. இதனால் பல்வேறு நடவடிக்கைகள் வாயிலாக தடுப்பூசி பணிகள் வேகம் எடுத்துள்ளன.

இதற்கிடையே, உருமாறிய ஒமைக்ரான் கொரோனா வைரஸ் எச்சரிக்கை காரணமாக பொதுமக்கள் தடுப்பூசியை தேடி வந்து பெறுகின்றனர். இதனால் நேற்று ஒரே நாளில் செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை, இரவு 8:00 மணிக்கு ஒரு கோடியை கடந்தது; எண்ணிக்கை மேலும் உயரும் என தெரிகிறது.

நாட்டில் தடுப்பூசிப் பணிகள் ஜன.16ல் தொடங்கின. முதல் முறையாக தடுப்பூசி செலுத்தப்படும் அளவு, ஆக. 27ல் ஒரு கோடியை கடந்தது.ஆக.31, செப்.6, செப்.27 ஆகிய தேதிகளிலும் ஒரு நாள் செலுத்திய டோஸ்களின் எண்ணிக்கை ஒரு கோடியைக் கடந்தது.

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளான செப்.17ம் தேதி 2.5 கோடிக்கும் அதிகமான டோஸ்கள் செலுத்தப்பட்டு சாதனை படைக்கப் பட்டது.

தடுப்பூசி டோஸ் ஒரே நாளில் ஒரு கோடியை ஆறாம் முறையாக நேற்று கடந்தது. இதுவரை 127.54 கோடிக்கும் அதிகமான டோஸ் செலுத்தப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ரமாபாய், சவிதா அம்பேத்கர்: இந்திய வரலாற்றில் மறைந்த உருவங்கள்!

ரமாபாயின் வாழ்க்கை வறுமை மற்றும் தனிமை படுத்தப்பட்டதான சூழ்நிலையில் இருந்தது. 1898 இல் மகாராஷ்டிராவில் ஒரு கடலோர கிராமத்தில் அவர் பிறந்தார்

ஆப்கன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கும் சீனா!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK), ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் சீனா புதிய மாவட்டத்தை அமைக்கிறது; இது இந்தியாவிற்கு கவலை அளிக்கும் அம்சம்.

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது: நிர்மலா சீதாராமன்

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது. மத்திய அரசு ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நல்கும்போது, திமுக அதைத் தேர்தல் அரசியலுக்காகச் சுரண்டப் பார்க்கிறது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ஈரான் விஷயத்தில் பாரதம் ஏன் தலையிடவில்லை?!

தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள். தெரியாத இருவர் அல்லது நமக்கு தொடர்பில்லாத யாரோ இருவர் தெருவில் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் போது,

Topics

ரமாபாய், சவிதா அம்பேத்கர்: இந்திய வரலாற்றில் மறைந்த உருவங்கள்!

ரமாபாயின் வாழ்க்கை வறுமை மற்றும் தனிமை படுத்தப்பட்டதான சூழ்நிலையில் இருந்தது. 1898 இல் மகாராஷ்டிராவில் ஒரு கடலோர கிராமத்தில் அவர் பிறந்தார்

ஆப்கன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கும் சீனா!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK), ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் சீனா புதிய மாவட்டத்தை அமைக்கிறது; இது இந்தியாவிற்கு கவலை அளிக்கும் அம்சம்.

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது: நிர்மலா சீதாராமன்

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது. மத்திய அரசு ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நல்கும்போது, திமுக அதைத் தேர்தல் அரசியலுக்காகச் சுரண்டப் பார்க்கிறது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ஈரான் விஷயத்தில் பாரதம் ஏன் தலையிடவில்லை?!

தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள். தெரியாத இருவர் அல்லது நமக்கு தொடர்பில்லாத யாரோ இருவர் தெருவில் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் போது,

பஞ்சாங்கம் ஏப்ரல் 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஜனநாயகன் – விளக்கம் கொடுத்த சென்சார் போர்ட்; யார் பார்த்த வேலை இது?

தணிக்கை சான்றிதழ் வேண்டி சமர்ப்பிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் KDM எனப்படும் ஒரு பாதுகாப்பான முறையை திரைப்பட தணிக்கை வாரியம் பின்பற்றுகிறது.

ஜனநாயகன் படம் இணையத்தில் கசிந்தது, திட்டமிடப்பட்ட செயலா?

பெரிய படங்கள் இணையத்தில் கசிவது புதிய விஷயம் அல்ல. ஆனால், “ஜனநாயகன்” திரைப்படம் முழுமையாக லீக் ஆனதாக கூறப்படும் இந்தச் சம்பவம், வழக்கமான Piracy நிகழ்வுகளிலிருந்து மாறுபட்டதாக பார்க்கப்படுகிறது.

Entertainment News

Popular Categories