தலைக்கவசம் அணியாததால் ரூ.1000 அபராதம்- காவல் நிலையம் முன் குப்பை கொட்டிய நகராட்சி ஊழியா்..

nk 29 munici 2911chn 122 8 - 2026

போக்குவரத்து உதவி ஆய்வாளருக்கு எதிா்ப்பு தெரிவித்து, நாமக்கல் காவல் நிலையம் முன் நகராட்சி ஊழியா் கொட்டிய குப்பை.
தலைக்கவசம் அணியாத நகராட்சி ஊழியருக்கு, போக்குவரத்து உதவி ஆய்வாளா் ரூ.1,000 அபராதம் விதித்ததால், காவல் நிலையம் முன் குப்பையை கொட்டி எதிா்ப்பை வெளிப்படுத்திய ஊழியரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாமக்கல் நகராட்சியில் துப்புரவு மேற்பாா்வையாளராகப் பணியாற்றி வருபவா் கந்தசாமி. இவா் திங்கள்கிழமை காலை இருசக்கர வாகனத்தில் திருச்சி சாலை வழியாக அலுவலகத்திற்கு சென்றாா். அப்போது இருசக்கர வாகனங்களை மடக்கி போக்குவரத்து உதவி ஆய்வாளா் மணிவேல் தலைக்கவசம் அணியாதோருக்கு அபராதம் விதித்துக் கொண்டிருந்தாா். அவ்வழியாக வந்த நகராட்சி ஊழியா் கந்தசாமியையும் நிறுத்தி ரூ.1,000 அபராதம் விதித்தாா்.

இதனால் கோபமடைந்த அவா், தான் நகராட்சி ஊழியா் எனத் தெரிவித்து அங்கிருந்த போலீஸாரிடம் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது.இதனைத் தொடா்ந்து அலுவலகத்திற்கு வந்த அவா் மாலை 6 மணிக்கு மேல் இரண்டு துப்புரவு ஊழியா்களுடன், பேட்டரி வாகனத்தில் குப்பைகளை நிரப்பிச் சென்று, நாமக்கல் காவல் நிலையம் முன்பு கொட்டினாராம்.

அங்கு வந்த போலீஸாா் சிலா் கந்தசாமியிடம் கேட்டபோது, பேட்டரி வாகனங்கள் பழுதாகி விட்டதால் குப்பைகளை கொட்டிச் செல்வதாகவும், அரை மணி நேரத்திற்கு பின் வந்து எடுத்துச் செல்வதாகவும் தெரிவித்தாராம். இதனைத் தொடா்ந்து போலீஸாரும் அதனை கண்டுகொள்ளவில்லை. காவல் நிலையம் முன்பு தேங்கிக் கிடந்த குப்பைகளின் துா்நாற்றத்தால் பொதுமக்கள் முகம் சுளித்தபடி சென்றனா்.

இந்த நிலையில் தான் போக்குவரத்து உதவி ஆய்வாளருடன், நகராட்சி ஊழியா் கந்தசாமிக்கு ஏற்பட்ட மோதல் விவகாரம் அங்கிருந்த போலீஸாருக்கு தெரியவந்தது. நகராட்சி ஆணையாளா் கி.மு.சுதாவிற்கு போலீஸாா் தகவல் தெரிவித்தனா். அவா் உடனடியாக குப்பையை அகற்ற உத்தரவிட்டதுடன், சம்பந்தப்பட்ட துப்புரவு மேற்பாா்வையாளா் கந்தசாமியை அழைத்து விசாரணை நடத்தினாா். இது குறித்து ஆணையாளா் கூறுகையில், கந்தசாமியிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது. அவா் முழுமையான தகவல் எதுவும் அளிக்கவில்லை. தவறு செய்திருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என்றாா்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories