கார் டயரில் பதுக்கப்பட்ட ரூ.93 லட்சம் பறிமுதல்..

car tyre - 2026

கார் டயரில் பதுக்கப்பட்ட ரூ.93 லட்சம் பறிமுதல்
மேற்கு வங்க மாநிலத்தில், ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட வாகன சோதனையின்போது, ஒரு வாகனத்துக்குள் இருந்த கூடுதல் டயரில் ரூ.93 லட்சம் ரொக்கப் பணம் பதுக்கிவைக்கப்பட்டிருந்ததைக் காவல்துறையினர் கண்டறிந்தனர்.

ஜல்பைகுரி மாவட்டத்தில் நடந்த வாகனச் சோதனையின்போது, ஒரு காரை சோதனை செய்த போது, அந்த காருக்குள் இருந்த கூடுதல் டயர் மீது காவல்துறையினருக்கு சந்தேகம் வந்து அதனை சோதித்த போது, அதற்குள் ரூ.93,93,000 பணம் இருந்தது கண்டுபிக்கப்பட்டது.

அந்த வாகனம் பிகார் பதிவெண் கொண்டதாக இருந்தது. இந்த சம்பவத்தில் வாகனத்தில் வந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

டயரை காவல்துறையினர் துண்டித்துப் பார்த்த போது அதில் 94 பண்டல்களில் கட்டுக்கட்டாக பணம் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்ததாக போலீஸார் கூறுகிறார்கள்.இந்த பணம் எப்படி வந்தது என்று ஐந்து பேரும் தெரிவிக்கவில்லை என்று தொடர்ந்து விசாரணை நடைபெறுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

பிகாரிலிருந்து அசாமுக்கு காரில் பணம் கடத்தப்படுவதாக வந்த தகவலையடுத்து நடத்தப்பட்ட வாகன சோதனையில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கட்டுக்கட்டாக பணம் இருந்ததால், வங்கியின் உதவியோடு பணம் எண்ணப்பட்டது. அப்போதுதான் அதில் 93 லட்சத்து 83 ஆயிரம் ரொக்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்து மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜியிடம் கேட்டபோது, எல்லா பணமும் பாஜகவிடமிருந்துதான் வருகிறது. தற்போது அதிகபட்சமாக பணம் குண்டர்களுக்கும் துப்பாக்கிகளுக்குமே ஆகிறது. அவர்கள் மத்தியப் படை பாதுகாப்புடன் அழைத்து வரப்படுகிறார்கள். அவர்களை காவல்துறையினர் கூட விசாரிக்க முடியாது. இவற்றையெல்லம் பார்த்துக் கொள்ளுமாறு பாஜக தலைவர்களை நான் கேட்டுக் கொள்கிறேன். நாம் அரசியல் ரீதியாக போராடுவோம், வன்முறை வழியில் அல்ல என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் மீண்டும் வெடி விபத்து..

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து23பேர் உயிரிழந்த நிலையில் பட்டாசு...

பஞ்சாங்கம் ஏப்ரல் 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலி..

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலியான...

Entertainment News

Popular Categories