சீன மொபைல் மூலம் வாடிக்கையாளர் விவரங்கள் சீனாவுக்கு லீக்: அதிர்ச்சித் தகவல்!

realme phone - 2026
#image_title

சீன தயாரிப்பு மொபைல் போன் ‘ரியல்மீ’ குறித்து இப்போது டிவிட்டர் பதிவுகளில் பலரும் சந்தேகத்தை எழுப்பி வருகின்றனர். ரியல் மீ- மொபைல் போனில் உள்ள தொழில்நுட்பம் வாயிலாக, வாடிக்கையாளர்களின் தகவல்கள் சேகரிக்கப்பட்டு சீனாவுக்கு அனுப்பி வைக்கப்படுகிறதா என டிவிட்டர் பதிவுகளில் பலரும்  சந்தேகம் எழுப்பியுள்ளனர். 

சீனாவில் ஏராளமான மொபைல் போன் தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன, குறைந்த விலையில் தயாராகும் இந்த மொபைல் போன்கள், உலகின் பல்வேறு நாடுகளுக்கும் அனுப்பப் படுகின்றன. இந்திய சந்தையிலும் இதன் தயாரிப்புகள் அதிகம் விற்பனையாகி, வாடிக்கையாளர்கள் பலரின் பாக்கெட்களில் அமர்ந்திருக்கின்றன.  

இந்த மொபைல் போன் ரகங்களில், ரியல்மீ என்ற நிறுவனத்தின் தயாரிப்பும் உண்டு. இந்த போன்களை இந்தியாவிலும்  ஏராளமானோர் பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில், ரியல் மீ – RealMe மொபைல் போனில் உள்ள ஒரு தொழில்நுட்பம் வாயிலாக, அவற்றை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் தகவல்கள் ரகசியமாக சேகரிக்கப்படுவதாக டிவிட்டர் பதிவுகளில் பலரும் பதிவிட்டுள்ளனர். 

ALSO READ:  பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைத் தவிர்க்க மத்திய அரசு வரி குறைப்பு!

ரிஷி பாகேர்ஜி என்பவர் தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்தது…

ரியல்மீ மொபைல் போனின், ‘செட்டிங்ஸ்’ பகுதியில், ‘என்கேன்ஸ்டு இன்டெலிஜென்ட் சர்வீஸ்’ எனப்படும், மேம்படுத்தப்பட்ட நுண்ணறிவு சேவை என்ற தொழில்நுட்பம் உள்ளது. மொபைல் போனை, ‘ஆன்’ செய்ததுமே இந்த தொழில்நுட்பம், வாடிக்கையாளரின் ஒப்புதல் இல்லாமல் தானாகவே இயங்கி விடும். இதன் வாயிலாக வாடிக்கையாளர்கள் பற்றிய தகவல்களை, அது சேகரிக்கும். வாடிக்கையாளர்களுக்கு வந்த அழைப்புகள், அவர் பிறருக்கு செய்த அழைப்புகள், குறுஞ்செய்தி, வாடிக்கையாளரின் இருப்பிடம் போன்ற தகவல்களை அந்த தொழில்நுட்பம் ரகசியமாக சேகரித்து வருகிறது…. என்று  அவர் பதிவிட்டிருந்தார்.

இதற்கு பதில் அளித்து, மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர், ”இந்த விஷயம் கவனத்துக்கு வந்துள்ளது. இது குறித்து விசாரிக்கப்படும்,” என்று தெரிவித்துள்ளார். 

ALSO READ:  சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

ஓன்ப்ளஸ் மொபைலிலும் இந்த செட்டிங்ஸ் டிஃபால்டாக உள்ளது என்று ஒருவர் பதிவிட்டிருக்கிறார். ஜியோமி போனிலும் இப்படி ஒரு செட்டிங்க்ஸ் இதேபோல் உள்ளது என்று ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

முன்னதாக, சீன செயலிகள் மூலம் இப்படி வாடிக்கையாளர் விவரங்கள் சேகரிப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், பல செயலிகள் இந்திய அரசால் தடை செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

சாதனை நாயகர் பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர்கள், முக்கிய தலைவர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து  வருகின்றனர்.

பஞ்சாங்கம் – ஜூன் 10 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 9 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

இந்தியா – ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட்முனைவர் கு. வை. பாலசுப்பிரமணியன்இந்திய அணி முதல்...

முழுமையான நன்மைக்கு சனாதன தர்மம்!

அனைவரின் நன்மைக்காகவும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்காகவும் பாடுபடுபவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்துக்களே என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே ஒட்டுமொத்த நாடும் செழிப்படைந்து முழுமையான வளர்ச்சியை நோக்கி முன்னேற வேண்டுமானால்  ஆட்சி நிர்வாகம் சனாதன தர்மத்தின் அடிப்படையில் வழிநடத்தப்பட வேண்டும்.

Topics

சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

சாதனை நாயகர் பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர்கள், முக்கிய தலைவர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து  வருகின்றனர்.

பஞ்சாங்கம் – ஜூன் 10 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 9 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

இந்தியா – ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட்முனைவர் கு. வை. பாலசுப்பிரமணியன்இந்திய அணி முதல்...

முழுமையான நன்மைக்கு சனாதன தர்மம்!

அனைவரின் நன்மைக்காகவும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்காகவும் பாடுபடுபவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்துக்களே என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே ஒட்டுமொத்த நாடும் செழிப்படைந்து முழுமையான வளர்ச்சியை நோக்கி முன்னேற வேண்டுமானால்  ஆட்சி நிர்வாகம் சனாதன தர்மத்தின் அடிப்படையில் வழிநடத்தப்பட வேண்டும்.

பஞ்சாங்கம் ஜூன் 8 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலை இளந்தலைமுறையால் ஈர்க்கப்பட்டவர்; பாஜக.,வோ தலைமுறைகளாக பெருவளர்ச்சி கண்டது!

அண்ணாமலையால் இளைய தலைமுறையினர் பலர் ஈர்க்கப்பட்டார்கள் என்பது உண்மை, ஆனால் பல தலைமுறைகளாக சித்தாந்தத்தால் பெரு வளர்ச்சி கண்ட கட்சி பாரதீய ஜனதா என்பதை மறந்துவிடக் கூடாது.

வெல்டன் அமித்ஷா… வாழ்த்துகள் அண்ணாமலை!

மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி என்ற இந்திய தேசியத்தின் அடிப்படை. பாரதிய ஜனதா கட்சியில் அதை நடைமுறைப்படுத்துவதில் எழுந்த சிக்கலுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு இது.

Entertainment News

Popular Categories