சீன மொபைல் மூலம் வாடிக்கையாளர் விவரங்கள் சீனாவுக்கு லீக்: அதிர்ச்சித் தகவல்!

realme phone - 2026
#image_title

சீன தயாரிப்பு மொபைல் போன் ‘ரியல்மீ’ குறித்து இப்போது டிவிட்டர் பதிவுகளில் பலரும் சந்தேகத்தை எழுப்பி வருகின்றனர். ரியல் மீ- மொபைல் போனில் உள்ள தொழில்நுட்பம் வாயிலாக, வாடிக்கையாளர்களின் தகவல்கள் சேகரிக்கப்பட்டு சீனாவுக்கு அனுப்பி வைக்கப்படுகிறதா என டிவிட்டர் பதிவுகளில் பலரும்  சந்தேகம் எழுப்பியுள்ளனர். 

சீனாவில் ஏராளமான மொபைல் போன் தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன, குறைந்த விலையில் தயாராகும் இந்த மொபைல் போன்கள், உலகின் பல்வேறு நாடுகளுக்கும் அனுப்பப் படுகின்றன. இந்திய சந்தையிலும் இதன் தயாரிப்புகள் அதிகம் விற்பனையாகி, வாடிக்கையாளர்கள் பலரின் பாக்கெட்களில் அமர்ந்திருக்கின்றன.  

இந்த மொபைல் போன் ரகங்களில், ரியல்மீ என்ற நிறுவனத்தின் தயாரிப்பும் உண்டு. இந்த போன்களை இந்தியாவிலும்  ஏராளமானோர் பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில், ரியல் மீ – RealMe மொபைல் போனில் உள்ள ஒரு தொழில்நுட்பம் வாயிலாக, அவற்றை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் தகவல்கள் ரகசியமாக சேகரிக்கப்படுவதாக டிவிட்டர் பதிவுகளில் பலரும் பதிவிட்டுள்ளனர். 

ALSO READ:  விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் மீண்டும் வெடி விபத்து..

ரிஷி பாகேர்ஜி என்பவர் தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்தது…

ரியல்மீ மொபைல் போனின், ‘செட்டிங்ஸ்’ பகுதியில், ‘என்கேன்ஸ்டு இன்டெலிஜென்ட் சர்வீஸ்’ எனப்படும், மேம்படுத்தப்பட்ட நுண்ணறிவு சேவை என்ற தொழில்நுட்பம் உள்ளது. மொபைல் போனை, ‘ஆன்’ செய்ததுமே இந்த தொழில்நுட்பம், வாடிக்கையாளரின் ஒப்புதல் இல்லாமல் தானாகவே இயங்கி விடும். இதன் வாயிலாக வாடிக்கையாளர்கள் பற்றிய தகவல்களை, அது சேகரிக்கும். வாடிக்கையாளர்களுக்கு வந்த அழைப்புகள், அவர் பிறருக்கு செய்த அழைப்புகள், குறுஞ்செய்தி, வாடிக்கையாளரின் இருப்பிடம் போன்ற தகவல்களை அந்த தொழில்நுட்பம் ரகசியமாக சேகரித்து வருகிறது…. என்று  அவர் பதிவிட்டிருந்தார்.

இதற்கு பதில் அளித்து, மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர், ”இந்த விஷயம் கவனத்துக்கு வந்துள்ளது. இது குறித்து விசாரிக்கப்படும்,” என்று தெரிவித்துள்ளார். 

ALSO READ:  'தாமரை வாக்குறுதிகள்' என்ற பெயரில் பாஜக., தேர்தல் அறிக்கை வெளியீடு!

ஓன்ப்ளஸ் மொபைலிலும் இந்த செட்டிங்ஸ் டிஃபால்டாக உள்ளது என்று ஒருவர் பதிவிட்டிருக்கிறார். ஜியோமி போனிலும் இப்படி ஒரு செட்டிங்க்ஸ் இதேபோல் உள்ளது என்று ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

முன்னதாக, சீன செயலிகள் மூலம் இப்படி வாடிக்கையாளர் விவரங்கள் சேகரிப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், பல செயலிகள் இந்திய அரசால் தடை செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

Topics

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று முதல் தொடங்குகிறது. நாளொன்றுக்கு இரண்டு ஆட்டங்கள் வீதம் ஜூலை 4 முதல் 7 வரை எட்டு ஆட்டங்கள் நடைபெறும்.

Entertainment News

Popular Categories