
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர் வகிக்கும் பதவிக்கு மாறாக பேசி வருகிறார் அமலாக்கத் துறையை வைத்து எதிர்க்கட்சிகளை அடக்கும் முறையில் அவர் பேச்சு உள்ளது.மத்திய அரசின் விலைவாசி உயர்வை கண்டித்து வரிகின்ற செப்டம்பர் மாதம் 12.13.14. தேதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்ற மாநில செயலாளர் முத்தரசன் ராஜபாளையத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.
இராஜபாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாக குழு மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமசாமி தலைமையில் நடைபெற்றது இந்த கூட்டத்திற்க்கு சிறப்பு அழைப்பாளராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டார் கூட்டத்தில் முன்னாள் எம்பி மாநில செயற்குழு உறுப்பினர் மாவட்ட செயலாளருமான லிங்கம் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பழனிச்சாமி .
ஆறுமுகம் உள்ளிட்ட கட்சி முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர் .
கூட்டம் முடிந்த பின்பு மாநிலச் செயலாளரும் முத்தரசன் செய்தியாளர்கள் சந்தித்தபோது .
நேற்றைய முன் தினம் ராமேஸ்வரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் வகிக்கின்ற பொறுப்பிற்கு ஏற்றது போல் பேசாமல் மாறாக திமுக அரசை அச்சுறுத்தும் விதமாக பேசியிருக்கிறார் அண்ணாமலை தொடங்கி இருக்கின்ற யாத்திரை முடிவதற்குள் தமிழ்நாட்டில் பெரிய மாற்றம் வரும் என பேசி இருக்கிறார் அது எந்த விதமான மாற்றம் ஏற்படும் அமலாக்கத்துறை இயக்குனர் உடைய பதவி காலம் முடிந்த பின்பும் அதை நீடிப்பதற்கு மத்திய அரசு முயற்சி செய்துள்ளது அமலாக்க துறையை இயக்குனரை வைத்து மிரட்டி பணிய வைக்கலாம் என்று நினைக்கின்றனர் நேர்வழியில் ஆட்சியில் அமர முடியாத பாஜக குறுக்கு வழியில் ஆட்சியில் அமர நினைக்கின்றார்கள் குறுக்கு வழி ஒருபோதும் வெற்றி பெறாது .மக்கள் அவர்களை நிராகரித்து அவருடைய எண்ணங்களை முறியடிப்பார்கள்.
பாதயாத்திரை என்றால் எங்கு தொடங்குகின்றார்
களோ எங்கு முடிக்கின்றார்களோ அதுவரை நடந்து செல்ல வேண்டும் ஆனால் குளிரூட்டப்பட்ட வாகன வசதியுடன் சென்று விளம்பரம் தேடும் முயற்சியில் தமிழக பாஜக ஈடுபட்டுள்ளது
ஊழலைப் பற்றி பேசும் பாஜக அரசு திமுக அரசை மட்டும் பேசுகின்றனர் ஏன அதிமுக அரசை பற்றி பேசுவதில்லை குட்கா ஊழலின் டைரியும்கிடைத்தது அது சம்பந்தமாக இதுவரை எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை அது சம்பந்தமாக பாஜக எதுவும் பேசாதது ஏன்
எதிர்க்கட்சிகளை பழிவாங்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் ஒன்றிய அரசு செயல்பட்டு வருகிறது.
இந்த முயற்சியை தமிழக மக்கள் நிராகரிப்பார்கள்
மத்தியில் ஆளக்கூடிய ஒன்றிய அரசு தவறான பொருளாதார கொள்கையின் காரணமாக விலைவாசி உச்சத்தை எட்டி உள்ளது குறிப்பாக பெட்ரோல் டீசல் விலை குறைக்கவில்லை எண்ணெய் நிறுவனங்கள் லாபம் பெறுவதற்கு ஒன்றிய அரசு துணை போகிறது அதை போல் அரிசி பருப்பு போன்ற பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது இதை கட்டுப்படுத்த மத்திய அரசு தவறிவிட்டது ஆகையால் அதை கண்டித்தும் வருகினற செப்டம்பர்
12, 13 .14 .தேதிகளில் ஒரு லட்சம் பேர் திரட்டி ஒன்றிய அரசு அலுவலகம் முன்பு தமிழ்நாடு முழுவதும் மறியல் போராட்டங்கள் நடைபெறும் என தெரிவித்தார் .
மேலும் இம்சை அரசன் மோடியை ஆட்சியை விட்டு வெளியேறு என்கின்ற கோஷங்களை எழுப்பி மூன்று நாள் தொடர் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதாகவும் தெரிவித்தார்
நெய்வேலி பிரச்சனையில் விவசாயிகள் நிலங்களை கையகப்படுத்தும் போது அவர்களுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் இதற்கு முன்பாக நிலங்கள் கையகப்படுத்தப்பட்ட பொழுது உரிய நஷ்ட ஈடு வழங்கப்படவில்லை ஆகையால் அதற்கு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் தமிழக அரசு நெய்வேலி பிரச்சனை தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறை வைத்து அடக்கு முறையில் ஈடுபடுவது நல்லதல்ல வன்முறையும் அடக்கு முறையும் எந்த ஒரு போராட்டத்திற்கும் தீர்வாகாது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கின்றது என தெரிவித்தார்