ரயில் கழிப்பறையில் வைத்து டீ கலந்த விவகாரம்: ஒப்பந்ததாரருக்கு ரூ.1 லட்சம் அபராதம்

sddefault 1 - 2026

நெடுந்தொலைவு ரயிலில் பயணம் செய்பவர்கள் ரயில்களில் விற்கப் படும் உணவு, தேநீர், நீர் உள்ளிட்டவற்றையே நம்பி ஏற்க வேண்டியுள்ளது. ரயிலில் வழங்கப்படும் உணவுகள், பேண்ட்ரி கார் எனப்படும் சமையல் கேபினில் இருந்தே பெரும்பாலும் தயாரித்து வழங்கப்படுகிறது. இதற்காக கண்காணிப்பும் பலமாகத் தான் உள்ளது.

ஆனாலும், அண்மைக்காலமாக ரயிலில் வழங்கப்படும் உணவுகள் தரமில்லாதவையாக உள்ளதாக ரயில்வே அமைச்சகத்துக்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் கடந்த ஓரிரு நாட்களாக ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில், குறிப்பாக வாட்ஸ்அப்பில் வைரலாகப் பரவி வருகிறது. அதில், ரயிலின் கழிவறையில் இருந்து தண்ணீர் எடுத்து டீ தயாரித்து, அல்லது கலப்படம் செய்து விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான அந்த வீடியோவில், நீல நிற சட்டை அணிந்த ரயில்வே கேன்டீன் ஊழியர் ஒருவர், ரயில் கழிவறை நீரை டீ, காபி கேன்களில் கலந்து, மற்றொருவரிடம் ஒவ்வொரு கேனாக எடுத்துக் கொடுக்கிறார்.

ALSO READ:  தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

இந்தக் காட்சிகளை வீடியோவாக தன் செல்போனில் எடுத்த நபர், ஏன் கழிவறையில் தண்ணீர் பிடிக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, அவர்கள் சிரித்துக் கொண்டே உன் வேலையைப் பார் என்ற தோரணையில் சென்றுள்ளனர்.

இது குறித்த வீடியோவைப் பார்த்த ரயில்வே நிர்வாகம், இதை ஒரு கௌரவப் பிரச்னையாகக் கருதி ஒரு விளக்கம் அளித்துள்ளது.

அதில், தாங்கள் ஒரு வீடியோவை சமூக வலைத்தளத்தில் வைரலாகப் பரவுவதைக் கண்டதாகவும், இந்த நிகழ்வு குறித்து விசாரித்ததாகவும் கூறியுள்ளது.

அதன்படி, வண்டி எண் 12759 சென்னை செண்ட்ரல் – ஹைதராபாத் சார்மினார் எக்ஸ்பிரஸ், செகந்தராபாத் ரயில் நிலையத்தில் நின்றிருந்த போது, இந்தச் சம்பவம் நடந்ததாகவும், இது 2017 டிசம்பர் மாதம் நடந்தது என்றும் விளக்கம் அளித்துள்ள ரயில்வே நிர்வாகம், இது குறித்து வந்த புகாரை அடுத்து உடனே விசாரணைக்கு உத்தரவிட்டதாகவும் கூறியுள்ளது.

மேலும், விசாரணையின் முடிவில், செகந்திராபாத் மற்றும் காழிப்பேட்க்கு இடைப்பட்ட ரயில் பகுதி ஒப்பந்ததாரர் பி.சிவபிரசாத் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப் பட்டதாகவும், அவருக்கு ரயில்வே நிர்வாகம் ரூ.1,00,000 அபராதம் விதித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், அந்த குறிப்பிட்ட நபரின் உரிமம் ஐஆர்டிசி மூலம் பெறப்பட்டதாகவும் கூறியுள்ளது.

ALSO READ:  திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

அந்த வீடியோவில் உள்ள மற்ற இருவரும் அதிகாரபூர்வமற்ற வெளியாட்கள் என்றும், கடந்த சில மாதங்களாகவே செகந்திராபாத் ரயில் நிலையத்தில் அதிகாரபூர்வமற்ற வகையில் இயங்கி வரும் டீ விற்பனையாளர்களைக் கண்டறிந்து அங்கிருந்து அகற்றும் பணியில் ரயில்வே நிர்வாகம் ஈடுபட்டதாகவும், இந்த வீடியோவில் காணப்பட்ட இருவரையும் அந்தப் பகுதியில் இருந்து அகற்றிவிட்டதாகவும் கூறியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

Topics

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories