நேருவிய இந்திரா காங்கிரஸ் செய்த ‘உண்மை’ சாதனைகள்… என்னவெல்லாம் தெரியுமா?

indira gandhi - 2026

படேல் பாரதத்தை ஒருங்கிணைக்க, சமஸ்தானங்களை ஒழித்தது பெரிய விசயமே இல்லையாம். இந்த விசயத்தில் படேல் ஒரு அடி பாய்ந்தால், இந்திராகாந்தி பாய்ந்தது 16 அடியாம். அதாவது,

படேல், எல்லா மன்னர்களுக்கும் மாசாமாசம் பெரிய தொகையைக் கொட்டிக் கொடுத்து வீண் செலவு செய்து ஒருங்கிணைத்தது எல்லாம் ஒரு விசயமே இல்லை. கிழக்குப் பாகிஸ்தானை உடைக்காமல் விட்டது பெருங்குற்றம். இந்திராகாந்தி வந்து தான் மன்னர்களுக்குக் கொடுத்த மானியங்களை அடியோடு நிறுத்தி புரட்சி செய்தார். கிழக்குப் பாகிஸ்தானை உடைத்து பங்களாதேஷ் ஆக்கினார். ஆகவே…. எழுதியவர் ஒரு முதிர்ச்சியான மனிதர் என்பதால், நாமும் விளக்கத்தை பொறுமையாகவே கொடுப்போம்….

இ.காந்தி மானியத்தை நிறுத்தியது சாதனையல்ல! காரணம், எந்தவொரு படைபலமும் இல்லாத, போர் உத்தியோ, ராஜாங்க விசயமோ சுத்தமாகத் தெரியாத இரண்டாம் தலைமுறையினரிடம் இருந்து மிரட்டிப் பிடுங்கிக் கொண்டார். ஒருவகையில் அது கொடுத்த வாக்கினை மீறிய துரோகம் எனினும், ஒரு ராஜாங்க நடவடிக்கையாக அதனை நாமும் கூட ஏற்றுக் கொள்ளவேண்டும்.

ஆனால், பட்டேல் கால சூழல் முற்றிலும் வேறு, இரண்டு உலகப் போர் நிகழ்வுகளையும் உற்றுக் கவனித்த அனுபவமிக்க மன்னர்களும், இந்திய மற்றும் உலகப் போர்களில் ஈடுபட்ட படை வீரர்களையும் கொண்டிருந்த சிற்றரசுகள். நயந்து பேசி காரியத்தை முடிப்பது தான் புத்திசாலித்தனம். அதனைவிட்டு எல்லா இடத்திலும் பலப்பிரயோகம் செய்து மட்டுமே ஒருங்கிணைத்திருந்தால், அமெரிக்கா, ஜப்பானில் நிகழ்ந்தது போல பெரிய உள்நாட்டுப் போர்கள் தான் நடந்திருக்கும். பாரத மக்களிடமும் ஓர் ஒருமைப்பாடு தோன்றியிருக்காது. (ஒருமைப்பாடு தோன்றி விடக் கூடாது என்பது தான் பலரின் ஆசையாகவும் இருந்தது)

அமெரிக்கா இன்று வரை யுனைட்டட் ஸ்டேட்ஸ் தான். பாரதம் அப்படியல்ல. மாநிலத்திற்கொரு சட்டமல்ல… ஒரே பாரதத்திற்கும் ஐக்கிய அமெரிக்க மாகாணங்களுக்கும் நிச்சியமாக வேறுபாடுகள் உண்டு. அங்கே தான் பட்டேல் ராஜதந்திரியாக மிளிர்கிறார். தடவிக் கொடுத்து, பக்குவமாகச் சொல்லி, கைமாறு கொடுத்து, லாப நஷ்டங்களை விவாதித்து ஒருங்கிணைப்புகளை நடத்தினார். எதற்கும் மசியாத ஆட்களிடம் தான் படைபலத்தைப் பிரயோகிக்கத் தயாரானார். முழு வெற்றியும் கொண்டார்.

இப்படி ஒருங்கிணைத்த, 12-1 வருடங்களில் தன்னை நன்கு ஸ்திரப்படுத்திக் கொண்ட பாரதத்தின் பிரதமராக மன்னர் மானியத்தை ஒழித்ததில் என்ன வீரம் கிடக்கு? எதிர்ப்பே இல்லாத நாடாளுமன்றத்தில் ஒரு சட்டத்தை அமல்படுத்துவது பெரிய சாதனையா? எனினும், அந்த நகர்வு மிகவும் சிறப்பானதே! இ.காந்தி எடுத்த நல்ல முடிவுகளில் ஒன்று தான்.

கிழக்குப் பாகிஸ்தானை உடைத்து, பாரதத்துடனா இணைத்துக் கொண்டார் இந்திரா? மேற்கிலிருந்து இந்தியா வழியாக கிழக்குப் பாகிஸ்தானுக்கு சாலைகள் கேட்டது உள்ளிட்ட பல நச்சரிப்புகளில் எரிச்சலாகி சும்மாயிருந்து தொலைங்கடானு மண்டையில் நறுக்குனு கொட்டிட்டு, இனிமேல் நீ அவனோட பேசாத அவன் உன்கூட பேசமாட்டான்னு ரெண்டு அறை விட்டுட்டு வந்தோம் அவ்வளவு தான். இந்திரா அத்தனை வலிமையான ஆளுமையாக இருந்திருந்தால், நேரு காலத்தில் நிகழ்ந்த சங்கடத்திற்கு சீனாவிடம் தீர்வு கண்டிருப்பாரே?

நடிகர் மனோபாலா சொன்னது போல, நாம இதுவரை யாரையெல்லாம் அடிச்சிருக்கோம்னு தெரியும்ல? தமிழ் வாத்தி, பிள்ளையார் கோவில் குருக்கள் போன்ற அப்பிராணிகளைத் தான். மோடியைப் பிடிக்காதுனு சொல்றதைக் கூட சரி ட்ரெண்டுனு ஜீரணிச்சுக்க முடியுது… அதுக்காக நேருவிய காங்கிரஸ் செய்ததையெல்லாம் சாதனைனு சொல்றது ரொம்ப ஓவர் சார். காங்கிரஸின் சாதனை என்பது கொஞ்சம் ராஜீவுக்கும், மிச்சம் எல்லாம் நரசிம்மராவ் மற்றும் அவரது டீமுக்கு தான் சேரும்.

எழுதியதன் நோக்கம், காங்கிரஸின் சாதனை என்று போடும் மொக்கைகளை எல்லாம் இன்றைய இளம் தலைமுறை இது போன்ற நாசூக்கான பதிவுகளை அப்பட்டமாக நம்பி விடக் கூடாது என்பதற்காகத் தான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

Topics

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

பஞ்சாங்கம் மே 12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

“We are all one”, this realization of oneness is attained in the Varg : Atul Limaye

"We are all one", this realization of oneness is attained in the Varg – Atul LimayeJi - Karyakarta Vikas Varg-Dwitiya inaugurated in Nagpur

வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்… தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

தமிழ் மக்கள் யாரை மன்னிக்கவில்லை என்றாலும் ஒரு நடிகனை கண்டிப்பாக மன்னிப்பார்கள்.. வாழ்த்துகள்!

Entertainment News

Popular Categories