நேருவிய இந்திரா காங்கிரஸ் செய்த ‘உண்மை’ சாதனைகள்… என்னவெல்லாம் தெரியுமா?

indira gandhi - 2026

படேல் பாரதத்தை ஒருங்கிணைக்க, சமஸ்தானங்களை ஒழித்தது பெரிய விசயமே இல்லையாம். இந்த விசயத்தில் படேல் ஒரு அடி பாய்ந்தால், இந்திராகாந்தி பாய்ந்தது 16 அடியாம். அதாவது,

படேல், எல்லா மன்னர்களுக்கும் மாசாமாசம் பெரிய தொகையைக் கொட்டிக் கொடுத்து வீண் செலவு செய்து ஒருங்கிணைத்தது எல்லாம் ஒரு விசயமே இல்லை. கிழக்குப் பாகிஸ்தானை உடைக்காமல் விட்டது பெருங்குற்றம். இந்திராகாந்தி வந்து தான் மன்னர்களுக்குக் கொடுத்த மானியங்களை அடியோடு நிறுத்தி புரட்சி செய்தார். கிழக்குப் பாகிஸ்தானை உடைத்து பங்களாதேஷ் ஆக்கினார். ஆகவே…. எழுதியவர் ஒரு முதிர்ச்சியான மனிதர் என்பதால், நாமும் விளக்கத்தை பொறுமையாகவே கொடுப்போம்….

இ.காந்தி மானியத்தை நிறுத்தியது சாதனையல்ல! காரணம், எந்தவொரு படைபலமும் இல்லாத, போர் உத்தியோ, ராஜாங்க விசயமோ சுத்தமாகத் தெரியாத இரண்டாம் தலைமுறையினரிடம் இருந்து மிரட்டிப் பிடுங்கிக் கொண்டார். ஒருவகையில் அது கொடுத்த வாக்கினை மீறிய துரோகம் எனினும், ஒரு ராஜாங்க நடவடிக்கையாக அதனை நாமும் கூட ஏற்றுக் கொள்ளவேண்டும்.

ஆனால், பட்டேல் கால சூழல் முற்றிலும் வேறு, இரண்டு உலகப் போர் நிகழ்வுகளையும் உற்றுக் கவனித்த அனுபவமிக்க மன்னர்களும், இந்திய மற்றும் உலகப் போர்களில் ஈடுபட்ட படை வீரர்களையும் கொண்டிருந்த சிற்றரசுகள். நயந்து பேசி காரியத்தை முடிப்பது தான் புத்திசாலித்தனம். அதனைவிட்டு எல்லா இடத்திலும் பலப்பிரயோகம் செய்து மட்டுமே ஒருங்கிணைத்திருந்தால், அமெரிக்கா, ஜப்பானில் நிகழ்ந்தது போல பெரிய உள்நாட்டுப் போர்கள் தான் நடந்திருக்கும். பாரத மக்களிடமும் ஓர் ஒருமைப்பாடு தோன்றியிருக்காது. (ஒருமைப்பாடு தோன்றி விடக் கூடாது என்பது தான் பலரின் ஆசையாகவும் இருந்தது)

ALSO READ:  எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

அமெரிக்கா இன்று வரை யுனைட்டட் ஸ்டேட்ஸ் தான். பாரதம் அப்படியல்ல. மாநிலத்திற்கொரு சட்டமல்ல… ஒரே பாரதத்திற்கும் ஐக்கிய அமெரிக்க மாகாணங்களுக்கும் நிச்சியமாக வேறுபாடுகள் உண்டு. அங்கே தான் பட்டேல் ராஜதந்திரியாக மிளிர்கிறார். தடவிக் கொடுத்து, பக்குவமாகச் சொல்லி, கைமாறு கொடுத்து, லாப நஷ்டங்களை விவாதித்து ஒருங்கிணைப்புகளை நடத்தினார். எதற்கும் மசியாத ஆட்களிடம் தான் படைபலத்தைப் பிரயோகிக்கத் தயாரானார். முழு வெற்றியும் கொண்டார்.

இப்படி ஒருங்கிணைத்த, 12-1 வருடங்களில் தன்னை நன்கு ஸ்திரப்படுத்திக் கொண்ட பாரதத்தின் பிரதமராக மன்னர் மானியத்தை ஒழித்ததில் என்ன வீரம் கிடக்கு? எதிர்ப்பே இல்லாத நாடாளுமன்றத்தில் ஒரு சட்டத்தை அமல்படுத்துவது பெரிய சாதனையா? எனினும், அந்த நகர்வு மிகவும் சிறப்பானதே! இ.காந்தி எடுத்த நல்ல முடிவுகளில் ஒன்று தான்.

கிழக்குப் பாகிஸ்தானை உடைத்து, பாரதத்துடனா இணைத்துக் கொண்டார் இந்திரா? மேற்கிலிருந்து இந்தியா வழியாக கிழக்குப் பாகிஸ்தானுக்கு சாலைகள் கேட்டது உள்ளிட்ட பல நச்சரிப்புகளில் எரிச்சலாகி சும்மாயிருந்து தொலைங்கடானு மண்டையில் நறுக்குனு கொட்டிட்டு, இனிமேல் நீ அவனோட பேசாத அவன் உன்கூட பேசமாட்டான்னு ரெண்டு அறை விட்டுட்டு வந்தோம் அவ்வளவு தான். இந்திரா அத்தனை வலிமையான ஆளுமையாக இருந்திருந்தால், நேரு காலத்தில் நிகழ்ந்த சங்கடத்திற்கு சீனாவிடம் தீர்வு கண்டிருப்பாரே?

ALSO READ:  பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

நடிகர் மனோபாலா சொன்னது போல, நாம இதுவரை யாரையெல்லாம் அடிச்சிருக்கோம்னு தெரியும்ல? தமிழ் வாத்தி, பிள்ளையார் கோவில் குருக்கள் போன்ற அப்பிராணிகளைத் தான். மோடியைப் பிடிக்காதுனு சொல்றதைக் கூட சரி ட்ரெண்டுனு ஜீரணிச்சுக்க முடியுது… அதுக்காக நேருவிய காங்கிரஸ் செய்ததையெல்லாம் சாதனைனு சொல்றது ரொம்ப ஓவர் சார். காங்கிரஸின் சாதனை என்பது கொஞ்சம் ராஜீவுக்கும், மிச்சம் எல்லாம் நரசிம்மராவ் மற்றும் அவரது டீமுக்கு தான் சேரும்.

எழுதியதன் நோக்கம், காங்கிரஸின் சாதனை என்று போடும் மொக்கைகளை எல்லாம் இன்றைய இளம் தலைமுறை இது போன்ற நாசூக்கான பதிவுகளை அப்பட்டமாக நம்பி விடக் கூடாது என்பதற்காகத் தான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories