நாடு முன்னேறிவிட்டது! நீங்கள் எப்ப திருந்துவீங்க?

judgement - 2026

நாடு முன்னேறிவிட்டது! நீங்கள் எப்ப திருந்துவீங்க! இது மக்களின் கேள்வி..! நேற்று ஓர் ஆசிரியை கொலையில் 5 மணி நேரத்தில் நவீன தொழில்நுட்பமான செல்போன் டவர், கால்ஸ், சிசிடி கேமரா பதிவை கொண்டு கொலையாளி கைது செய்யபட்டான்.

2 மணி நேரத்தில் காணாமல் போன குழந்தையை காவல்துறை அதிகாரி ரோந்து பணியின் போது கண்காணித்து கண்டுபிடித்து கொடுத்துள்ளார்.

சந்தேகத்திடமான நபரை பிடிக்கும் போது ஆபத்தானவன் என புரிந்து அவனை தந்திரமாக பிடித்தபோது பயங்கரமான திருடன் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் 59 நிமிடங்களில் ஒரு கோடி வரை கடன் பெற திட்டம் அறிவித்துள்ளார். புரோஸஸ் தாமதமாகக்கூடாது என்பதுதான் இதில் விசேஷம்..

ஆனால், கொலைக்குற்றவாளியை 5 மணி நேரத்தில் பிடித்தபோதும், அவனுக்கு தண்டனை இன்னும் ஐந்தாண்டுகளாளிவாது வழங்கப்படுமா? 1991 கொலை குற்றவாளிக்கே, (85 வயதில்) கடந்த வாரம் தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.. ஜட்ஜ் சார்!

ப.சி. முதல் நக்ஸல் வரை உடனடியாக ஜாமீன், ரத்து, விசாரணைக்குத் தடை, தள்ளுபடி செய்ய உடனடியாக உத்திரவுகளை தர முன் வரும் நீதி மன்றம்.. வழக்கை தடுப்பது எப்படி என்பதற்கு சிறந்த உதாரணமாக இந்தியாவை முன்னேற்றுகிறது..

ALSO READ:  பராபவ - பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

சமாதிக்கும், சட்டசபை விவகாரத்திற்கும் நள்ளிரவில் கூடும் நீதிமன்றம், ஜல்லிக்கட்டிற்கும், தீபாவளிக்கும், ஐயப்பன் வழிபாடு விவகாரத்திற்கும் உங்கள் அவசரத்திற்கு விசாரிக்க முடியாது என பல கோடி மக்களின் மனங்களை காயப்படுத்தி, சில அரசியல்வாதிகளின் மனங்களைக் குளிர வைக்கும் இரட்டை நிலைப்பாட்டை எப்போ கைவிடப் போறீங்க.. மை லார்ட்!

போலி வழக்குரைஞர்களை கண்டுபிடிக்கவே நீதிமன்றத்தால் முடியல.. ஆதார் கார்டை கேட்காதே.. என கூச்சல் போடும்போதே.. சந்தேகம் குற்றவாளிகள் மீது வரவில்லை.. குற்றவாளிகளை தப்பிக்க வைக்க காட்டும் விசுவாசத்தின் மீதுதான் வருகிறது!

என்னமோ போங்க.. மக்கள் இப்போலாம்.. நீதி மன்றத்தின் நீண்ட நெடிய படிக்கட்டுகளில் நடக்கும் லஞ்சம், லாவண்யம், அரசியல் பாசம், தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு, மத விசுவாசம்.. இதற்கிடையில் தங்களுக்கும் நீதியை தேடுவதற்கு பயப்படுகிறார்கள்..

நீதி பாதியாகி.. மீதி நீதிக்கு எதிராக இருப்பது….  ஜனநாயகத்தின் நாலாவது தூண் சீழ் பிடித்திருப்பதையே காட்டுகிறது..

சின்னகவுண்டர் படத்தில் வரும் சீன் போல, ஜவ்வு மிட்டாய் போல, வழக்கை இழுக்கும் நடைமுறையை எப்போ மாற்றபோறீங்க..? எப்போ திருந்துவீங்க?!

ALSO READ:  அதிர்ச்சி... அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

நாடு முன்னேறிவிட்டது! நீங்கள் எப்ப திருந்துவீங்க?

  • பசுத்தாய் கணேசன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

தெற்கு ரயில்வே சார்பாக இயக்கப்படும் திருநெல்வேலி மேட்டுப்பாளையம் திருநெல்வேலி சிறப்பு ரயில் உட்பட சில சிறப்பு ரயில் சேவைகள் ஜூலை இறுதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தென்னக இரயில்வே அறிவித்துள்ளது .

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசு கவனமாக செயல்பட வேண்டும் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி சுப்பிரமணியம் ஓர் அறிக்கை வாயிலாக எச்சரித்துள்ளார். இது குறித்த அவரது அறிக்கை!

திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

சிவகாசி அருகே திருத்தங்கல் ஸ்ரீ நின்ற நாராயண பெருமாள் கோவில் ஆனி பிரம்மோற்சவ விழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. தேரோட்ட விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

FIFA உலகக் கோப்பை கால்பந்து 2026: முதல் இரு சுற்றுகள்!

இரண்டாம் சுற்றான ரவுண்ட் 32 ஜூன் 28ஆம் தேதி தொடங்கி, ஜூலை 3ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.

Topics

திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

தெற்கு ரயில்வே சார்பாக இயக்கப்படும் திருநெல்வேலி மேட்டுப்பாளையம் திருநெல்வேலி சிறப்பு ரயில் உட்பட சில சிறப்பு ரயில் சேவைகள் ஜூலை இறுதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தென்னக இரயில்வே அறிவித்துள்ளது .

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசு கவனமாக செயல்பட வேண்டும் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி சுப்பிரமணியம் ஓர் அறிக்கை வாயிலாக எச்சரித்துள்ளார். இது குறித்த அவரது அறிக்கை!

திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

சிவகாசி அருகே திருத்தங்கல் ஸ்ரீ நின்ற நாராயண பெருமாள் கோவில் ஆனி பிரம்மோற்சவ விழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. தேரோட்ட விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

FIFA உலகக் கோப்பை கால்பந்து 2026: முதல் இரு சுற்றுகள்!

இரண்டாம் சுற்றான ரவுண்ட் 32 ஜூன் 28ஆம் தேதி தொடங்கி, ஜூலை 3ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.

பஞ்சாங்கம் ஜூலை 03 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!

ஏ.வி.ஆர் ஸ்வாமியின் மறைவு ஒரு பொற்காலத்தின் முடிவைக் குறிக்கிறது. தில்லை திருச்சித்ரகூடமான சிதம்பரம் திருத்தலத்திற்கு அவர் ஆற்றிய கைங்கரியங்களும் அவரது நூல்களும் என்றும் நிலைத்து நின்று நல்வழிப்படுத்தும்.

குமரியில் மட்டும் ஏன் இப்படி ‘பகீர்’ புரளிகள்?

குமரி மாவட்டத்தின் சில கடற்கரை கிராமங்களில் கடற்கரை மணலில் மோனோசைட் போன்ற கனிமங்கள் இயற்கையாகவே கலந்துள்ளன. இந்தக் கனிமங்கள் இருப்பதால் அந்தப் பகுதியில் புற்றுநோய் அதிகமாக வருகிறது என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால், அந்தக் குறிப்பிட்ட காரணம் அறிவியல் ரீதியாக உறுதிப்படுத்தப்பட்ட முடிவாக நிரூபிக்கப்படவில்லை.

Entertainment News

Popular Categories